<?xml version='1.0' encoding='UTF-8'?><?xml-stylesheet href="http://www.blogger.com/styles/atom.css" type="text/css"?><feed xmlns='http://www.w3.org/2005/Atom' xmlns:openSearch='http://a9.com/-/spec/opensearchrss/1.0/' xmlns:georss='http://www.georss.org/georss' xmlns:gd='http://schemas.google.com/g/2005' xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'><id>tag:blogger.com,1999:blog-748309637854531092</id><updated>2012-01-28T08:54:37.247-08:00</updated><category term='வாழ்த்து'/><category term='இவள் புதியவள்'/><category term='சிறுகதை'/><category term='தொடர்பதிவு'/><category term='வாசிப்பு'/><category term='என் கட்டுரைகள்'/><category term='அனுபவம்'/><category term='நிகழ்வு'/><category term='உலக சினிமா'/><category term='புத்தகக் கண்காட்சி 2009'/><category term='என் புத்தகம்'/><category term='சியாவும் சக்திவேலும்'/><category term='கவிதைகள்'/><category term='அறிவிப்பு'/><category term='கவிதை'/><category term='திரைப்படம்'/><category term='நண்பர்களால் ஆனது என் உலகம்'/><title type='text'>இவள் என்பது பெயர்ச்சொல்</title><subtitle type='html'></subtitle><link rel='http://schemas.google.com/g/2005#feed' type='application/atom+xml' href='http://umashakthi.blogspot.com/feeds/posts/default'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/748309637854531092/posts/default?max-results=100'/><link rel='alternate' type='text/html' href='http://umashakthi.blogspot.com/'/><link rel='hub' href='http://pubsubhubbub.appspot.com/'/><link rel='next' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/748309637854531092/posts/default?start-index=101&amp;max-results=100'/><author><name>உமாஷக்தி</name><uri>http://www.blogger.com/profile/15892356572198993991</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='21' src='http://1.bp.blogspot.com/-gipY35ryk84/TlTuZmGcnbI/AAAAAAAAA6w/jFm_Na-18o4/s220/umashakthi%255B1%255D.JPG'/></author><generator version='7.00' uri='http://www.blogger.com'>Blogger</generator><openSearch:totalResults>164</openSearch:totalResults><openSearch:startIndex>1</openSearch:startIndex><openSearch:itemsPerPage>100</openSearch:itemsPerPage><entry><id>tag:blogger.com,1999:blog-748309637854531092.post-1768603969616089326</id><published>2011-10-29T02:43:00.000-07:00</published><updated>2011-10-30T00:20:21.584-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கவிதை'/><title type='text'>ரயில் பேச்சு</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://1.bp.blogspot.com/-6nFQND1oW9s/Tqz6DNxG-II/AAAAAAAAA78/_2EBda8WkSY/s1600/rail.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 180px;" src="http://1.bp.blogspot.com/-6nFQND1oW9s/Tqz6DNxG-II/AAAAAAAAA78/_2EBda8WkSY/s320/rail.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5669180964094802050" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அது&lt;br /&gt;ஆள் அரவமற்ற&lt;br /&gt;ஒரு ரயில் நிலையம் என்றாய்...&lt;br /&gt;&lt;br /&gt;இருக்கும்&lt;br /&gt;அதனால்தான்&lt;br /&gt;ஒரு குயில் அபூர்வமாகக்&lt;br /&gt;குர லெழுப்பியதையும் ,&lt;br /&gt;பயணிகளுக்கான அறிவிப்பு&lt;br /&gt;ஒலித்ததையும்&lt;br /&gt;துல்லியமாக உணர்ந்தேன் .&lt;br /&gt;&lt;br /&gt;சிவப்பும்,பச்சையுமாய்&lt;br /&gt;வர்ண விளக்குகள் மாறி மாறி&lt;br /&gt;ஒளிர்வதையும்&lt;br /&gt;ரயிலின் பெரு மூச்சுகளையுங் கூட&lt;br /&gt;உணர்கின்றேன் ...&lt;br /&gt;வேண்டுமென்றே தவற விட்டு&lt;br /&gt;அடுத்த ரயிலுக்காய்க்&lt;br /&gt;காத்திருக்கிறாய்...&lt;br /&gt;இரண்டு ரயில்களுக்கான&lt;br /&gt;இடைவெளி நேரத்தில்&lt;br /&gt;நாம் எதைப் பேசி முடிக்க இயலும் ?&lt;br /&gt;&lt;br /&gt;வெயிலின் சாய்வை&lt;br /&gt;சிறு நூல் கொண்டு இழுத்து,&lt;br /&gt;நிமிர்த்துவது போல&lt;br /&gt;பிரிவின் பிரிவை ஒத்திவைக்க&lt;br /&gt;இப்படித்தான் மண்டியிடுகின்றோம் .&lt;br /&gt;&lt;br /&gt;ரயிலில் ஏறி உட்கார்ந்து விட்டதாக&lt;br /&gt;இறுதியில் சொல்லுகிறாய்.&lt;br /&gt;உனக்குத் தெரியாது,&lt;br /&gt;உன்னருகில் நானும் பயணிப்பது.&lt;br /&gt;&lt;br /&gt;(விகடன் தீபாவளி மலர் 2011 வெளிவந்த கவிதை)&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/748309637854531092-1768603969616089326?l=umashakthi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://umashakthi.blogspot.com/feeds/1768603969616089326/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=748309637854531092&amp;postID=1768603969616089326' title='17 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/748309637854531092/posts/default/1768603969616089326'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/748309637854531092/posts/default/1768603969616089326'/><link rel='alternate' type='text/html' href='http://umashakthi.blogspot.com/2011/10/blog-post.html' title='ரயில் பேச்சு'/><author><name>உமாஷக்தி</name><uri>http://www.blogger.com/profile/15892356572198993991</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='21' src='http://1.bp.blogspot.com/-gipY35ryk84/TlTuZmGcnbI/AAAAAAAAA6w/jFm_Na-18o4/s220/umashakthi%255B1%255D.JPG'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/-6nFQND1oW9s/Tqz6DNxG-II/AAAAAAAAA78/_2EBda8WkSY/s72-c/rail.jpg' height='72' width='72'/><thr:total>17</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-748309637854531092.post-2353980776404767881</id><published>2011-08-24T05:29:00.000-07:00</published><updated>2011-08-24T05:43:50.477-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='இவள் புதியவள்'/><title type='text'>4. இப்போதும் இருக்கும் கதை</title><content type='html'>&lt;a href="http://1.bp.blogspot.com/-3BA1BsAR-LQ/TlTx1PQuAQI/AAAAAAAAA7Y/TwfakvWxjOo/s1600/Mother-%2526-child-Pic.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 316px; height: 266px;" src="http://1.bp.blogspot.com/-3BA1BsAR-LQ/TlTx1PQuAQI/AAAAAAAAA7Y/TwfakvWxjOo/s320/Mother-%2526-child-Pic.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5644402129934090498" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt; &lt;br /&gt;&lt;br /&gt;‘உனக்குள்ளேயே சுருங்கி கொள்வாயா அமைதி வெளியே இருக்கிறது&lt;br /&gt;அமைதியான நிழல் தான் உள்ளே இருக்கிறது’&lt;br /&gt;&lt;br /&gt;- ஐரீஸ் முர்டாச்சின்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அவசர அவசரமாக ப்ரெஷ் செய்துவிட்டு ஹாலுக்கு வந்தாள் வைஷ்ணவி. அங்கு அவள்&lt;br /&gt;ஆபிஸ் அசிஸ்டெண்ட் விஜயகுமார் பேப்பர் படித்துக் கொண்டிருந்தான்.&lt;br /&gt;வைஷ்ணவியைப் பார்த்ததும் பரபரப்பாக எழுந்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;”குட் மார்னிங் மேடம்...எபப்டி இருக்கீங்க?”&lt;br /&gt;&lt;br /&gt;”குட் மார்னிங் விஜி...உட்காருங்க.....காபி சாப்பிடறீங்களா?”&lt;br /&gt;&lt;br /&gt;”இப்பதான் அம்மா குடுத்துட்டாங்க மேடம்...ஒரு அர்ஜெண்ட் விஷயம் சார்&lt;br /&gt;நேர்ல போய் சொல்லிட்டு வரச் சொன்னாரு....”&lt;br /&gt;&lt;br /&gt;யோகேஷின் போன் கால்களை எடுக்காமல் இருந்ததால் நேரிலேயே ஆளை&lt;br /&gt;அனுப்பிவிட்டான். ஏன் எல்லாரும் தன்னைத் துரத்துகிறார்கள் என்று அலுப்பாக&lt;br /&gt;இருந்தது வைஷ்ணவிக்கு.&lt;br /&gt;&lt;br /&gt;’என்ன அர்ஜெண்ட் வொர்க் விஜி?”&lt;br /&gt;&lt;br /&gt;”அது சாருக்குத் தான் தெரியும் மேடம்...பத்து மணிக்கு உங்களை ஆபிஸுக்கு&lt;br /&gt;வரச் சொன்னாரு. கார் அனுப்பறேன்னும் சொன்னாரு. நீங்க அவர்கிட்ட கால்&lt;br /&gt;பண்ணி கேட்டுக்கங்க....அப்ப நான் வரேன் மேடம்”.&lt;br /&gt;&lt;br /&gt;அவளின் பதிலுக்குக் கூட காத்திருக்காமல் விஜி போய் விட்டான். அது அவன்&lt;br /&gt;தப்பு இல்லை, அவனை அனுப்பியவனின் ஆர்டராக இருக்கும் என்று அவளுக்குத்&lt;br /&gt;தெரியும். கடந்த இரண்டு ஆண்டுகளில் தினமும் அவளுடைய முகத்தைப்&lt;br /&gt;பார்க்காமல் யோகேஷ் இருந்ததில்லை. தன்னை மிஸ் செய்கிறான் போலிருக்கிறது.&lt;br /&gt;இதில் பெரிய தவறு இல்லையென்றாலும் அதற்கு தான் ஆளாகக் கூடாது என்று&lt;br /&gt;உறுதியாக நினைத்தாள் வைஷ்ணவி. ரமணன் எரிச்சல்படுவதில் காரணம் இருப்பதை&lt;br /&gt;முதன்முறையாக உணர்ந்தாள் வைஷ்ணவி.&lt;br /&gt;&lt;br /&gt;நிதி தூங்கி எழுந்து சோபாவில் வந்து படுத்துக் கொண்டது. டிவியை ஆன்&lt;br /&gt;செய்து எடுத்தவுடன் சுட்டி டிவி பார்க்க ஆரம்பித்துவிட்டாள். வைஷ்ணவியைப்&lt;br /&gt;பார்த்து சோம்பலாக ”குட் மார்னிங்மா என்றாள்.&lt;br /&gt;&lt;br /&gt;”ப்ளீஸ் நிதி...முதல்ல போய் ப்ரெஷ் செய்...”&lt;br /&gt;&lt;br /&gt;சரிம்மா....&lt;br /&gt;&lt;br /&gt;நிதியிடம் பிடித்த விஷயம் சொன்னவுடன் அதை உடனே செய்துவிடுவாள்.&lt;br /&gt;வைஷ்ணவியிடம் மட்டும் தான் இது. ரமணனோ, அம்மாவோ எது சொன்னால் அந்த இடத்தை&lt;br /&gt;விட்டு அசையவே மாட்டாள். நிதி சொல்வதைத்தான் அவர்கள் கேட்கவேண்டும்.&lt;br /&gt;”என்ன மாயம்டி செஞ்சி வைச்சிருக்கே.....நீ என்ன சொன்னாலும் கீ குடுத்த&lt;br /&gt;பொம்மை மாதிரி உடனே செய்றா உன் மக” என்பாள் சுபா.&lt;br /&gt;&lt;br /&gt;குழந்தைகளை மிரட்டி அவர்களை அடித்து துன்புறுத்தி அடிபணிய வைப்பது&lt;br /&gt;வைஷ்ணவிக்கு சுத்தமாக பிடிக்காது. மென்மையாக அவர்களிடம் செய்ய&lt;br /&gt;வேண்டியதைச் சொன்னால் போதும் மறுபேச்சின்றி கேட்டுக் கொள்வார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;சுபா சொன்னதை நினைத்துச் சிரித்தபடி குளிக்கக் கிளம்பினாள் வைஷ்ணவி. தொடை&lt;br /&gt;இன்னும் லேசாக எரிந்து கொண்டிருந்தது. அதை அலட்சியப்படுத்திவிட்டு இன்று&lt;br /&gt;என்னென்ன செய்ய வேண்டும் என்று மனதிற்குள் பட்டியல் இட்டாள், முதலில்&lt;br /&gt;யோகேஷுக்கு போன் செய்து இன்று வர முடியாது நாளை அல்லது மறுநாள் வருவதாகச்&lt;br /&gt;சொல்ல வேண்டும். அடுத்து சந்தியாவுக்கு பேசிவிட்டு அனுவைப் போய்ப்&lt;br /&gt;பார்க்கவேண்டும். பாவம் அனு வந்த இடத்தில் உடம்பு முடியாமல்&lt;br /&gt;கஷ்டப்படுகிறாள். இன்று கட்டாயம் பார்த்தே தீரவேண்டும். அடுத்து ஜீவா.&lt;br /&gt;அவனிடம் மிகத் தெளிவாக இதுவே கடைசி சந்திப்பு என்று சொல்லிவிடவேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நினைவின் சக்கரத்தில் மனம் உருண்டு கொண்டிருந்ததால் எப்படி குளித்து&lt;br /&gt;முடித்து வெளியே வந்தோம் என்றே வைஷ்ணவிக்குத் தெரியவில்லை. ரொட்டீனான சில&lt;br /&gt;விஷயங்கள் செய்யும் போது இப்படி சில சமயம் நேர்ந்துவிடுவதுண்டு.  மனம்&lt;br /&gt;அவளிடமிருந்து மெல்ல நழுவி வெறு எங்கெல்லாமோ பறந்து திரிந்துவிட்டு&lt;br /&gt;சாதுவாய் மீண்டும் வந்து அதனிடத்தில் உட்கார்ந்து கொள்ளும். இடைப்பட்ட&lt;br /&gt;நேரத்தில் தான் எப்படி இருந்தோம் என்ன செய்து கொண்டிருந்தோம் என்பதே&lt;br /&gt;மறந்து போய்விடும். ஏன் இப்படி ஆப்சண்ட் மைண்டடாக இருக்கிறோம். தனக்கு&lt;br /&gt;மட்டும் இப்படி இருக்கிறதா இல்லை எல்லா பெண்களுக்கும் இது போல் தோன்றுமா&lt;br /&gt;என்ற சந்தேகம் வைஷ்ணவிக்கு ஏற்படும். சந்தியாவிடம் கேட்டால் ”நீ லூசுடி&lt;br /&gt;அதான் இப்படியெல்லாம் திங்க் பண்றே” என்று சொல்லி சிரிப்பாள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ரொம்ப யோசித்தாலோ, படபடப்பாக இருந்தாலோ, அல்லது துயரின் உச்சத்தில்&lt;br /&gt;இருந்தாலோ மனம் சமன் நிலை குலைந்துவிடும். அம்மாதிரியான சமயங்களில் மனதை&lt;br /&gt;ஒருமுகப்படுத்திக் கொள்வதே சரியாக இருக்கும் என்று தனக்கு தானே&lt;br /&gt;அறிவுறுத்திக் கொண்டு தனக்கு மிகவும் பிடித்த விஷயங்களை செய்வாள்.&lt;br /&gt;நிதியுடன் விளையாடியோ, பதின்ம வயதில் கற்றுக் கொண்ட பரத நாட்டியத்தை தன்&lt;br /&gt;அறையில் நிதிக்கும் அம்மாவுக்கும் முன்பு ஆடியோ மனச் சோர்விலிருந்து&lt;br /&gt;வெளியே வந்துவிடுவாள். அதன்பின் அடுத்து செய்ய வேண்டிய வேலைக்கு&lt;br /&gt;நகர்ந்துவிடுவாள்.&lt;br /&gt;&lt;br /&gt;தன்னைத் தானே கேள்விக்கு உட்படுத்தி செல்ப் அனாலிஸில் செய்யும் பழக்கம்&lt;br /&gt;டீன் ஏஜிலிருந்து வைஷ்ணவிக்கு உண்டு. தன்னிடம் இருக்கும் குறை நிறைகளை&lt;br /&gt;அவ்வப்போது அலசி ஆராய்ந்து தன் வேதனைக்கோ குழப்பத்திற்கோ காரணமான&lt;br /&gt;விஷயங்களை பட்டியல் இடுவாள். தனக்கு ஏற்படுகின்ற அனைத்து சிக்கல்களின்&lt;br /&gt;மூல காரணம் தான் தான் என்பதில் மிகத் தெளிவாக இருந்தாள். அதனால் முதலில்&lt;br /&gt;சரியென்று தோன்றியவை பின் சரியற்றதாகிவிடும் போது, அதன் பொறுப்பை தன்&lt;br /&gt;மீதே சுமத்திக் கொண்டு இறுதியில் தேவையற்ற குப்பைகளை தூர வீசி மனதை&lt;br /&gt;தெளிவு படுத்திக் கொண்டே இருப்பாள். மனம் சற்று லேசாகி மீண்டும் பழைய&lt;br /&gt;உற்சாகத்திற்கு வந்துவிடும். அவளுடைய மாசில்லாத சிரிப்பின் முக்கிய&lt;br /&gt;காரணம் இதுதான். மனம் தெளிவாக இருக்கும் போது முக எழில் கூடும். தோழிகள்&lt;br /&gt;“எப்படி வைஷ்ணவி உன்னால மட்டும் இப்படி மலர்ச்சியா சிரிக்க முடியுது”&lt;br /&gt;என்று தோழியர் கேட்கையில் வைஷ்ணவியால் பதிலுக்கு அழகான புன்னகையை&lt;br /&gt;பரிசாகத் தர முடிந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;அடர் பச்சை நிற சில்க் காட்டன் புடவையை உடுத்திக் கொண்டாள். ஜீவாவின்&lt;br /&gt;நினைவு மீண்டும் தவிர்க்க முடியாமல் வந்தது. ”சில பேருக்கு சோபர்&lt;br /&gt;கலர்தான் எடுக்கும், சிலருக்கு டார்க் கலர்ஸ் நல்லாயிருக்கும் ஆனா உனக்கு&lt;br /&gt;எல்லா கலரும் நல்லா இருக்குடி அம்புஜம்” என்பான். சிரித்துக் கொண்டே&lt;br /&gt;கண்ணாடி முன் வந்தாள். இன்று ஏதோ ஒருவித பொலிவு முகத்தில் தெரிவதைப்&lt;br /&gt;பார்த்தாள். இடது கன்னத்தில் சின்னதாக ஒரு பரு எட்டிப் பார்த்தது. இன்றோ&lt;br /&gt;நாளையோ பீரியட்ஸ் வந்துவிடும். எச்சரிக்கையாக ஒரு விஸ்பர் பேடை எடுத்து&lt;br /&gt;கைப்பைக்குள் வைத்துக் கொண்டாள். பெண்கள் வலியில்லாமல் வாழவேக் கூடாது&lt;br /&gt;என்று விதித்திருக்கிறது போலும். மனது அல்லது உடல் எதாவது ஒன்று வாழ்நாள்&lt;br /&gt;முழுவதும் இம்சித்துக் கொண்டே இருந்து தொலைக்கும். சம்ஸ் இன்று வராமல்&lt;br /&gt;இருந்தால் நன்றாக இருக்கும், வைஷ்ணவிக்கு வயிற்று வலியைவிட கால் உளைச்சல்&lt;br /&gt;பயங்கரமாக இருக்கும். சில சமயம் ஒரு அடி கூட எடுத்து வைக்க முடியாத&lt;br /&gt;அளவிற்கு யாரோ காலுக்குள் க்ரில்லிங் மிஷினை வைத்து குடைவதைப் போல வலி&lt;br /&gt;உயிரை சக்கையாக பிழிந்தெடுக்கும். பெருமூச்சுடன் வைஷ்ணவி சிறிய கறுப்பு&lt;br /&gt;நிற ஸ்டிக்கர் பொட்டை நெற்றியில் ஒட்டிக் கொண்டு, கடைசியாக ஒரு முறை&lt;br /&gt;புடவை ப்ளீட்ஸை சரி செய்து விட்டு சுபாவிடம் சொல்லிக் கொண்டு&lt;br /&gt;புறப்பட்டாள்.&lt;br /&gt;&lt;br /&gt;சந்தியாவிற்கு போன் செய்தாள். சந்தியா முதலில் எடுக்கவில்லை. அதன் பின்&lt;br /&gt;அவளே அழைத்துப் பேசினாள்.&lt;br /&gt;&lt;br /&gt;என்னடி வைஷு போனே காணோம்? பிஸியா?&lt;br /&gt;&lt;br /&gt;பிஸி எல்லாம் இல்லை சந்தியா....வேலையை கூட ரிசைன் பண்ணிட்டேன்...&lt;br /&gt;&lt;br /&gt;கடைசில ரமணனுக்காக விட்டுக் குடுத்திட்டியா?&lt;br /&gt;&lt;br /&gt;ஆமா...ஆனா அது மட்டும் இல்லை சந்தியா எனக்கே ஒரு சின்ன ப்ரேக்&lt;br /&gt;எடுத்துக்கணும்னு தோணிடுச்சி......ரெண்டு மூணு மாசம் கழிச்சு மறுபடியும்&lt;br /&gt;வேற வேலைக்கு போயிடுவேன்....&lt;br /&gt;&lt;br /&gt;ம்...உனக்கு எப்படி வசதியோ அப்படி செய்...&lt;br /&gt;&lt;br /&gt;அனு எப்படி இருக்கா சந்தியா...இப்ப அவளைப் போய் பாக்கலாமா?&lt;br /&gt;&lt;br /&gt;இப்ப பரவால்லை வைஷு...பெய்ன் இன்னும் இருக்கு...அதுக்கு டேப்லெட் எல்லாம்&lt;br /&gt;கிடையாதாம். பிஸியோதெரபில இருக்கா....அடுத்த வாரம் ஊருக்கு&lt;br /&gt;கிளம்பறா....நீ பேசலைன்னு உன் மேல கோபமா இருக்கா?&lt;br /&gt;&lt;br /&gt;நேர்ல போனா சரியாகிடுவா சந்தியா....நீ என் கூட வர்றியா?&lt;br /&gt;&lt;br /&gt;இல்லைடி வைஷு நீ போய்ட்டு வா...என்னால இப்ப லீவோ பர்மிஷனோ போடவே&lt;br /&gt;முடியாது. அதோட அவ இப்ப நங்கநல்லூர்ல இருக்கா...அவ நாத்தனார் வீட்ல வேற&lt;br /&gt;ஒரே கெஸ்ட் வந்திருக்காங்க...அவ கிட்ட தனியா பேசவே முடியாது. பேசாம&lt;br /&gt;நீயும் நானும் வீக் எண்ட்ல அவ ஊருக்கு போறதுக்கு முன்னாடி போய்&lt;br /&gt;பாத்துட்டு வந்திடலாம்....&lt;br /&gt;&lt;br /&gt;அப்படியா சொல்றே?&lt;br /&gt;&lt;br /&gt;ஆமா...ஆனா அதுக்கு முன்னாடி நீ போன்ல அவகிட்ட பேசிடு...&lt;br /&gt;&lt;br /&gt;சரி சந்தியா......&lt;br /&gt;&lt;br /&gt;ம்...பாவம்டி நம்ம அனு....எப்படி துள்ளிச் திரிஞ்சிட்டு இருந்தா.....ஒரே&lt;br /&gt;இடத்துல அவ எப்படித்தான் படுத்துட்டு இருக்கறாளோ? மனசு ரொம்ப கஷ்டமா&lt;br /&gt;இருக்கு வைஷு..&lt;br /&gt;&lt;br /&gt;நல்லா ரெஸ்ட் எடுத்தா சரியாகிடும்னு டாக்டர்ஸ் சொல்லியிருக்காங்க&lt;br /&gt;இல்ல.....இட்ஸ் எ டைம் டு ரெஸ்ட்னு அவளே பாசிட்டிவ்வா எடுத்துக்கறா நீ&lt;br /&gt;அவகிட்ட இப்படி எல்லாம் புலம்பிடாதே....&lt;br /&gt;&lt;br /&gt;சேச்சே...உன்கிட்ட தாண்டி ஷேர் பண்ணிக்கறேன். சரிடி நைட் பேசறேன். என்று&lt;br /&gt;சொல்லிவிட்டு போனை வைத்தாள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அனுவைப் பார்த்துவிட்டு அதன்பின் ஜீவாவைப் பார்க்கப் போகலாம் என்று&lt;br /&gt;நேரத்தை கணக்கிட்டு இருந்தாள். இப்போது என்ன செய்வது? ஜீவா வரும் வரை&lt;br /&gt;எங்கே போவது என்று திகைப்பாக இருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;வேலைகள் சூழ்ந்த வாழ்க்கையில் சாப்பிடக் கூட நேரம் இருக்காது.  இயந்திர&lt;br /&gt;வேகத்தில் பரபரத்துக் கொண்டிருப்பாள். சட்டென்று உலகம் மெதுவாக இயங்குவது&lt;br /&gt;போல உணர்ந்தாள். பேசாமல் வீட்டுக்குத் திரும்பி விடலாமா என்று ஒரு நொடி&lt;br /&gt;நினைத்தாள். வேண்டாம். மறுபடியும் கிளம்பி வரச் சோம்பலாக இருக்கும் என்று&lt;br /&gt;முடிவு செய்து எதிரில் தென்பட்ட ரெஸ்டாரெண்டுக்குள் நுழைந்தாள். உள்ளே&lt;br /&gt;எல்லா டேபிள்களும்  ஆண்களே நிறைந்திருந்தார்கள். சில பெண்கள் கணவனுடனோ&lt;br /&gt;காதலனுடனோ இருந்தார்கள். இந்த ஊரில் மட்டுமே தனியாக ஒரு பெண் காபி கூட&lt;br /&gt;ஹோட்டலுக்குப் போய் குடிக்க முடியாது. யாரும் எதுவும் நேரடியாகச் கமெண்ட்&lt;br /&gt;அடிக்கப் போவதில்லை. ஆனால் ஒவ்வொருவரின் பார்வையும் வெவ்வேறு கதை&lt;br /&gt;சொல்லும். சில பார்வைகளை சகிக்க முடியாமலேயே தனியாக வருவதைத் தவிர்ப்பாள்&lt;br /&gt;வைஷ்ணவி. தனியாக பெண்கள் எங்குமே நிற்க முடியாத அளவிற்கு கண்ணுக்குத்&lt;br /&gt;தெரியாத சில வலைகளை இச்சமூகம் காலம் காலமாய் பின்னி வைத்துள்ளது. இப்போது&lt;br /&gt;பரவாயில்லை. தைரியமாக சில பெண்கள் தங்களுக்கு வேண்டியதை போராடியாவது&lt;br /&gt;பெற்றுக் கொள்கிறார்கள். இன்று தனக்கும் வேறு வழியில்லை, நேரத்தை கடத்த&lt;br /&gt;வேண்டும், காபி குடிக்கலாம் என்ற எண்ணம் வேறு ஏற்பட்டுவிட அங்கிருந்த ஏஸி&lt;br /&gt;ரூமுக்குள் சென்றாள். வசதியான ஒரு இருக்கையில் உட்கார்ந்து பேரர்&lt;br /&gt;வருவதற்காகக் காத்திருந்தாள். மெனு கார்டை அவளிடம் தர முயன்றவனிடம் அதை&lt;br /&gt;வாங்காமல் “ஒரு காபி...சக்கரை தனியா குடுத்திடுங்க...என்றாள்.&lt;br /&gt;&lt;br /&gt;ஹேண்ட்பேகிலிருந்து கிர்கிர் என்று செல்போன் உறுமியது. சைலண்ட் மோடில்&lt;br /&gt;இருந்து சாதாரண மோடிற்கு மாற்ற மறந்துவிட்டிருந்தாள். போனை வெளியே&lt;br /&gt;எடுப்பதற்குள் கட்டாகிவிட்டது. ஒன் மிஸ்டு கால் யோகேஷ் என்று இருந்தது.&lt;br /&gt;கூப்பிடலாமா இல்லை அப்புறம் பேசலாமா என்று யோசிப்பதற்குள் மறுபடி அந்த&lt;br /&gt;கால் வந்தது. வேறு வழியின்றி எடுத்தாள்.&lt;br /&gt;&lt;br /&gt;ஹலோ....&lt;br /&gt;&lt;br /&gt;ஹலோ...வைஷ்ணவி...ஹவ் ஆர் யூ?&lt;br /&gt;&lt;br /&gt;ம்...இருக்கேன்...&lt;br /&gt;&lt;br /&gt;ஏன் உங்க குரல் டல்லா இருக்கு. உடம்பு சரியில்லையா?&lt;br /&gt;&lt;br /&gt;அப்படி எல்லாம் எதுவும் இல்லை யோகேஷ் ஐம் ஆல் ரைட்...&lt;br /&gt;&lt;br /&gt;சரி...உங்களை ஆபிசுக்கு கூப்பிட்டு அனுப்பினேனே, ஷார்ப்பா பத்து மணிக்கு&lt;br /&gt;கார் கூட அனுப்பினேன். நீங்க இல்லைன்னு சொல்லிட்டாங்க...&lt;br /&gt;&lt;br /&gt;ம்....&lt;br /&gt;&lt;br /&gt;நீங்க ரொம்ப ப்ரிலியண்ட்டுன்னு தெரியும். அதுக்குள்ள வேற வேலைக்கு ஜாய்ன்&lt;br /&gt;பண்ணிட்டீங்களா என்ன?&lt;br /&gt;&lt;br /&gt;உங்க கற்பனை நல்லா இருக்கு யோகேஷ்.....ஏன் எனக்கு பெர்சனல் வொர்க்&lt;br /&gt;எதுவும் இருக்க கூடாதா?&lt;br /&gt;&lt;br /&gt;அதுக்கில்லை வைஷ்ணவி, உங்க அப்பாயிண்ட்மெண்ட் கிடைக்கிறது இவ்வளவு&lt;br /&gt;கஷ்டம்னு நான் நினைக்கலை....பி.எம்மை கூட மீட் பண்ணிடலாம் போல இருக்கு&lt;br /&gt;ஆனா உங்களை போன்ல கூட பிடிக்க முடியலை..&lt;br /&gt;&lt;br /&gt;அவள் பதில் ஏதும் சொல்லாமல் இருக்கவே அவனே தொடர்ந்து&lt;br /&gt;&lt;br /&gt;டூ பி ப்ராங்க் வைஷ்ணவி ஐ மிஸ் யூ....நீ இல்லாத இடம் ரொம்ப வேகண்டா&lt;br /&gt;இருக்கு....உனக்கு எப்படி கன்வே பண்றதுன்னு தெரியலை....என்னால வேலையே&lt;br /&gt;செய்ய முடியலை.....எனக்கு மட்டும் இல்லை வைஷ்ணவி இங்க எல்லாருக்கும்&lt;br /&gt;அப்படி தான் இருக்கு.....வீ ஆல் வாண்ட் யூ பேக்....ப்ளீஸ் திரும்பி&lt;br /&gt;ஜாய்ன் பண்ணிடுங்க...&lt;br /&gt;&lt;br /&gt;அவன் குரலில் தெரிந்த லேசான பதட்டம் வைஷ்ணவிக்கு கவலை அளித்தது.&lt;br /&gt;&lt;br /&gt;என்ன யோகேஷ் நான் உங்ககிட்ட சொல்லிட்டு தானே நின்னேன். ஐ ஹாவ் சம்&lt;br /&gt;பர்சனல் ப்ராப்ளம்ஸ்....புரிஞ்சுக்கங்க...&lt;br /&gt;&lt;br /&gt;ஓகே....நீங்க இப்ப என்கிட்ட எதுவும் சொல்ல வேணாம். நல்லா யோசிச்சிட்டு,&lt;br /&gt;நெக்ஸ்ட் வீக் போன் பண்ணுங்க...டேக் கேர் வைஷ்ணவி.&lt;br /&gt;&lt;br /&gt;சொல்லிவிட்டு போனை வைத்துவிட்டான். ஏஸியிலும் நெற்றியில்&lt;br /&gt;வியர்த்திருந்தது. கர்ச்சீப்பால் துடைத்துக் கொண்டாள். பக்கத்தில் ஆறிப்&lt;br /&gt;போய் விட்டிருந்த காபியை குடிக்க பிடிக்காம இன்னொரு காபி ஆர்டர்&lt;br /&gt;செய்தாள்.&lt;br /&gt;&lt;br /&gt;பேரர் அவளை வினோதமாக பார்த்துவிட்டுச் சென்றான். மறுபடியும் போன் உரும,&lt;br /&gt;இப்போது வீட்டு நம்பரிலிருந்து வந்திருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;ஹலோ சொல்வதற்குள் சுபாவின் பதட்டமான குரல் கேட்டது. வைஷ்ணவி எங்க&lt;br /&gt;இருக்கே? உடனே வா....என்றாள்.&lt;br /&gt;&lt;br /&gt;என்னம்மா என்ன ஆச்சு உடம்புக்கு எதாவது முடியலையா?&lt;br /&gt;&lt;br /&gt;எனக்கு ஒண்ணும் இல்லை...நீ உடனே சீக்கிரம் கிளம்பி வா....&lt;br /&gt;&lt;br /&gt;அம்மா ப்ளீஸ் என்ன விஷயம்னு சொல்லு என்பதற்குள் லைன் கட்டாகிவிட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;வீட்டு நம்பருக்கு அவள் அடிக்க அதில் எங்கேஜ்ட் டோன் வந்தது. இனம்&lt;br /&gt;தெரியாத எரிச்சல் குப்பென்று பற்றிக் கொள்ள, பேரர் கொண்டு வந்த காபியை&lt;br /&gt;குடிக்காமலேயே பில்லுக்கான பணத்தையும் டிப்ஸையும் வைத்துவிட்டு அவசர&lt;br /&gt;அவசரமாக எழுந்து போனாள் வைஷ்னவி.&lt;br /&gt;&lt;br /&gt;- தொடரும்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/748309637854531092-2353980776404767881?l=umashakthi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://umashakthi.blogspot.com/feeds/2353980776404767881/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=748309637854531092&amp;postID=2353980776404767881' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/748309637854531092/posts/default/2353980776404767881'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/748309637854531092/posts/default/2353980776404767881'/><link rel='alternate' type='text/html' href='http://umashakthi.blogspot.com/2011/08/4.html' title='4. இப்போதும் இருக்கும் கதை'/><author><name>உமாஷக்தி</name><uri>http://www.blogger.com/profile/15892356572198993991</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='21' src='http://1.bp.blogspot.com/-gipY35ryk84/TlTuZmGcnbI/AAAAAAAAA6w/jFm_Na-18o4/s220/umashakthi%255B1%255D.JPG'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/-3BA1BsAR-LQ/TlTx1PQuAQI/AAAAAAAAA7Y/TwfakvWxjOo/s72-c/Mother-%2526-child-Pic.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-748309637854531092.post-8100780858715648084</id><published>2011-08-06T06:20:00.000-07:00</published><updated>2011-08-06T06:30:57.616-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சிறுகதை'/><title type='text'>ஒரே கனவு</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://1.bp.blogspot.com/-CswCcM4O0DE/Tj1B7loLGjI/AAAAAAAAA5I/vI0_YFZ5O2U/s1600/car_travel.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 240px;" src="http://1.bp.blogspot.com/-CswCcM4O0DE/Tj1B7loLGjI/AAAAAAAAA5I/vI0_YFZ5O2U/s320/car_travel.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5637734800506427954" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;”ஏன் இந்தக் கனவு அடிக்கடி வருது டாக்டர்? சில சமயம் முழுக் கனவும் வருது, சில சமயம் அதே கனவு பாதி வருது….ஆனா எனக்கு இந்தக் கனவைத் தவிர வேற கனவே வரதில்லை....ஐம் ரியலி ஸ்கேர்ட் அதான் உங்க கிட்ட கன்ஸல்ட் பண்ண வந்தேன்” படபடவென்று அகில் சொல்லி முடிக்கையில் ஏஸி ரூமிலும் அவனுக்கு வியர்த்துவிட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;”மிஸ்டர் அகில் கூல் டவுன்....ரிலாக்ஸ்...இதுல பயப்படறதுக்கு ஒண்ணுமில்லை...ஜஸ்ட் எ ட்ரீம்” என்றார் டாக்டர் ரங்கராஜன். &lt;br /&gt;&lt;br /&gt;”அது ட்ரீம்தான்னு மனசுக்குத் தெரியுது டாக்டர். ஆனா ஒரே கனவு திரும்ப திரும்ப வர்றதுதான் பதட்டமா இருக்கு” என்றான். &lt;br /&gt;&lt;br /&gt;அந்தக் கனவை மறுபடியும் அவன் விவரிக்கத் துவங்க, அவனுடைய முகமாற்றத்தை ரங்கராஜன் உற்றுக் கவனித்தார். &lt;br /&gt;&lt;br /&gt;”லிசன் அகில்...நீங்க ஐடி செக்டார்ல இருக்கீங்க...வொர்க் ப்ரெஷர்ஸ், ராத்திரி பகலா செய்யற வேலைகள்னு கொஞ்சம் டிப்ரஷன் இருக்கலாம் அவர் சொல்லி முடிப்பதற்குள் இடைமறித்த அகில்,&lt;br /&gt;&lt;br /&gt;’அதெல்லாம் இல்லை டாக்டர் எந்த வேலையையும் நான் ரொம்பவே என்ஜாய் பண்ணி செய்யறவன். வீட்ல, என்னோட ப்ரெண்ட்ஸ் சர்க்கிள்லேன்னு எல்லாரும் என்னை புரிஞ்சிக்கிட்டவங்கதான் இருக்காங்க டாக்டர். சின்ன மன வருத்தம் கூட இந்த நிமிஷம் எனக்கு கிடையாது”. என்றான்&lt;br /&gt;&lt;br /&gt;”தட்ஸ் குட். நீங்க சொல்றது சரியாவே இருக்கலாம் அகில். ஆனா மனசு ரொம்ப விசித்திரமானது. அது ஏன் டிஸ்டர்ப் ஆகுதுக்கு யாராலயும் ஈஸியா சொல்லிட முடியாது. தூக்க பிரச்சனைகள்தான் எல்லாத்துக்கும் அடிப்படை”&lt;br /&gt;&lt;br /&gt;”எனக்கு தூக்கம் பொதுவாவே கம்மிதான் டாக்டர். ஆனா படுத்த அடுத்த செகண்டே குறட்டை விட்டு தூங்கிடுவேன்...இப்போதைக்கு இந்த கனவு மட்டும்தான் என் ப்ராப்ளம்..என்றவன் தொடர்ந்து “கனவுகளுக்கு சயின்டிபிக்கா பலன் எதாவது இருக்கா டாக்டர்? என்றான்.&lt;br /&gt;&lt;br /&gt;”கனவுகளோட பலன் என்ன அப்படிங்கறதைத் தாண்டி ஏன் ஒரே கனவை அடிக்கடி காண உங்க உள் மனசு விரும்புதுங்கறது யோசிக்க வேண்டிய விஷயம். சம்திங் பிஷ்ஷி என்றபடி சில மாத்திரைகளின் பெயரை எழுதி அவனிடம் தந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;”இதை மூணு நாள் எடுத்துக்கங்க அகில். ஆபிசுக்கு லீவ் போட்டுட்டு நல்லா சாப்பிட்டு, நல்லா ரெஸ்ட் எடுங்க. முடிஞ்சா எங்கயாவது சின்ன டூர் அடிச்சுட்டு வாங்க. யூ நீட் கம்ப்ளீட் ரெஸ்ட். ”&lt;br /&gt;அவருக்கு நன்றி சொல்லி கைகுலுக்கிவிட்டு அவனுடைய அனிதாவுக்கும், நெருங்கிய தோழி மீராவுக்கும் அவளின் காதலன் விபின் மற்றும் தன் அலுவலக நண்பன் செந்திலுக்கும் போன் செய்தான். அவன் டாக்டரை சந்தித்த விஷயத்தைச் சொல்லாமல் அவர் சொன்ன ட்ரிப் பத்தி மட்டும் சொல்லவே அவர்கள் சந்தோஷத்துடன் சம்மதித்தார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அகில் காரின் வேகத்தை அதிகப்படுத்தினான். &lt;br /&gt;தேனியிலிருந்து பிரிந்து போடிக்குச் செல்லும் நீளமான புத்தம் புது சாலையில் அவர்களின் கறுப்பு நிற சிஆர்வி கார் வழுக்கிக் கொண்டு பறந்தது. ஏஸியை அமர்த்திவிட்டு கண்ணாடியை இறக்கிவிட்டான். டாக்டர் சொன்னது சரிதான், இயற்கை எவ்வளவு புத்துணர்ச்சியை நமக்குள் செலுத்துகிறது என்று ஆச்சரியப்பட்டான். இரு பக்கமும் மரங்களும் தூரத்தில் தெரியும் மலையும், சில்லென்ற மென்காற்றுமாய் அகிலுக்கு வண்டியை ஓட்டுவதே சுகமாக இருந்தது.தன்னுடைய குளிரூட்டப்பட்ட கேபினில் தினம் தினம் கம்யூட்டர் திரையின் முன் இரவு பகல்களை கரைத்த சலிப்பெல்லாம் மெல்ல தீர்ந்து கொண்டிருப்பதாகப் பட்டது.  நண்பன் செந்திலின் சொந்த ஊர் போடிநாயக்கனூர். அவனை அங்கிருந்து பிக் அப் செய்தபின், தேக்கடிக்குப் போகத் திட்டமிட்டிருந்தார்கள். காலை எட்டு மணிக்கு சென்னையிலிருந்து கிளம்பி இடைவிடாமல் பயணம் செய்து போடிக்கு வந்துவிட்டார்கள். &lt;br /&gt;&lt;br /&gt;”ஏய் அனிதா அந்த பெப்ஸியை எடு”  சி.டி ப்ளேயரின் வால்யூமை அதிகமாக்கினான் அகில்.&lt;br /&gt;&lt;br /&gt;அவன் அருகே இருந்த அனிதா குனிந்து கீழே இருந்த கவரிலிருந்து பெப்ஸியை எடுத்து குடுத்தபின், சீட்டில் வசதியாக சாய்ந்து கொண்டாள். ஒரே மூச்சில் அரை லிட்டர் பெப்சியைக் குடிக்க அகிலால் மட்டும் தான் முடியும்.&lt;br /&gt;&lt;br /&gt;”ஒரு பியர் அடிச்சா நல்லா இருக்கும்” என்றவனை முறைத்தாள் அனிதா. &lt;br /&gt;&lt;br /&gt;விபின் விசிலில் ஏதோ பாடிக்கொண்டிருக்க, அவன் பக்கத்தில் இருந்த மீரா ஐபாட்டில் மூழ்கியிருந்தாள். &lt;br /&gt;&lt;br /&gt;’அதான் நான் பாட்டு போட்டிருக்கேன் இல்ல அதுக்கப்பறம் எதுக்கு காதுல அதை மாட்டிக்கிட்டு இருக்கே?” என்றான் அகில்.&lt;br /&gt;&lt;br /&gt;மீராவுக்கு அவன் சொன்னது காதில் விழவில்லை. தொடர்ந்து பாட்டு கேட்டுக் கொண்டிருக்கவே, அகில் ஹாரனை விட்டு விட்டு அடித்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;சத்தம் உரைத்த மீரா காதிலிருந்து ஹெட் போனை உருவி.”என்ன ஆச்சு எதுக்கு இப்படி ஹார்னை அடிக்கறே?” என்று கேட்கவும் அனிதாவும் விபினும் சிரித்தார்கள். &lt;br /&gt;&lt;br /&gt;மீரா எதுவும் சொல்லாமல் மறுபடியும் ஹெட்போனை காதில் மாட்டிக் கொண்டாள். அனிதா தன் ஹேண்ட்பேகிலிருந்து சமீபத்தில் வெளிவந்திருந்த ”வெஸ்ட் இஸ் வெஸ்ட்” டிவிடியை ப்ளேயரில் ஓட விட்டாள். அந்த சத்தத்தில் கூட பின் சீட்டில் ராகவ் தூங்கிக் கொண்டிருந்தான். யு.எஸ் டைமிங்கில் நைட் ஷிப்டில் வேலை செய்யும் அவனுக்கு சாப்பாடு கூட வேண்டாம், கிடைக்கும் நேரத்தில் எல்லாம் உறக்கம் மட்டுமே போதும்.&lt;br /&gt;&lt;br /&gt;ஜாலியாக கிளம்பியவர்கள் மிகவும் சோர்ந்து போனார்கள். செந்திலின் வீட்டைத் தேடி கண்டுபிடித்து கொஞ்சம் நேரம் ரெஸ்ட் எடுத்தார்கள். செந்தில் அதிகாலையில் கிளம்பலாம் என்று சொல்லவே விபின் ஒத்துக் கொள்ளவில்லை. க்ளப் மகிந்திராவில் அன்று மதியத்திலிருந்து அவர்களுக்கு ரூம் புக்காகி இருந்தது. முந்தைய இரவு கிளம்ப முடியாத அளவிற்கு வேலை இருந்ததால் அரை நாள் வீண் ஆனாலும் பரவாயில்லை என்று காலையில் இருந்தார்கள். இரவும் இங்கேயே ஹால்ட் ஆகிவிட்டால் முழுதாக ஒரு நாள் வீணாகி விடும். சகல செளபாக்கியங்களும் நிறைந்த ஸ்டியோ ரூம் அது. அகிலை வற்புறுத்தி அழைத்துச் செல்பவன் அவன் தான்.&lt;br /&gt;&lt;br /&gt;அகிலின் பிரச்சனை அவன் காரை யாருக்கும் ஓட்டக் குடுக்க மாட்டான். எவ்வளவு நெருங்கிய நண்பனாக இருந்தாலும் சரி. அவனுடைய கார்தான் அவனின் முதல் காதலி. அனிதா மூன்றாவது தான். நடுவில் இருக்கும் காதலி அவனது கணினி. அவன் சோர்வைப் பார்த்து செந்தில் ரெஸ்ட் எடுக்கச் சொன்னான். &lt;br /&gt;&lt;br /&gt;இங்கேர்ந்து ஒன் அவர்ல போயிடலாம் இல்லைடா. ரெஸ்ட் எடுத்தோம்னா ரொம்ப இருட்டிடும் அதுக்கப்பறம் மலைப் பாதைல ட்ரைவ் பண்றது ரொம்ப கஷ்டமாயிடும் ” என்றான் விபின்.&lt;br /&gt;&lt;br /&gt;விபின் சொல்றதுதான் சரி என்று அனிதாவும் சொல்லவே செந்தில் அவர்களுடன் கிளம்பினான்.&lt;br /&gt;&lt;br /&gt;மறுபடியும் சிரிப்பும் பாட்டும் கூத்துமாக அவர்களின் பயணம் தொடர்ந்தது. மீரா காதில் இன்னும் ஹெட்போன் இருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;அனிதா விபினிடம் “பேசாம நீ அந்த ஐபாடா இருந்திருக்கலாம். எப்ப பாரு மீரா அதைத்தான் ரொம்ப லைக் பண்றா என்றாள்.&lt;br /&gt;&lt;br /&gt;விபின் சோகமாக தலையாட்டியபடி ஆமா என்றான். மீரா ஏதோ புரிந்தவளாக அவன் தலையில் கொட்டினாள்.&lt;br /&gt;&lt;br /&gt;அதன் பின் அவர்கள் எதுவும் பேசிக்கொள்ளவில்லை. அவரவர் உலகத்தில் மூழ்கிவிட்டார்கள். &lt;br /&gt;&lt;br /&gt;ரிசார்ட்டுக்கு வந்து சேர்ந்தார்கள். அனிதாவும், மீராவும் உள் ரூமில் பெட்டில் படுத்துக் கொண்டார்கள். வெளியே சோபாவில் அகில் படுத்துக் கொள்ள, விபினும், செந்திலும் தரையில் பெட்ஷீட் விரித்துப் படுத்துக் கொண்டார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;அகில் அனைவரும் தூங்கிய பின் மாத்திரையை எடுத்துப் போட்டுக் கொண்டான். தொண்டையில் கசந்தது. எல்லாம் சரியாகப் போய்க்கொண்டிருந்தது என்று மகிழ்ந்தான். கனவு வந்தது கூட நல்லதாகிப் போய்விட்டது. இப்படி நண்பர்களுடன் ஜாலி ட்ரிப் வாய்த்ததே என்று சந்தோஷப்பட்டான்.கண்ணின் இமைகள் கனக்கவே தூக்கம் அவனை ஆரத் தழுவியது. &lt;br /&gt;&lt;br /&gt;நள்ளிரவில் தண்ணீர் குடிக்க விபின் எழுந்த போது அகிலின் முகம் தீவிரமாக யோசனையில் இருப்பதைப் போல புருவங்கள் நெறுக்கி ஏதோ குழறலாகப் பேசிக் கொண்டிருந்தான். முகம் லேசாக வியர்த்திருக்க, அகில் அகில் என்று அவன் கன்னத்தைத் தட்டினான் விபின். அகில் அமைதியாகிவிட விபின் ஏசியைப் போட்டுவிட்டு அவனுக்கு போர்த்திவிட்டுப் படுத்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;அடுத்த நாள். ப்ரேக்பாஸ்ட் டேபிளில் கூடினார்கள். அகிலைத் தவிர மற்றவர்கள் நன்றாக தூங்கியிருந்ததால் களைப்பு நீங்கி உற்சாகமாக இருந்தார்கள். அகிலுக்கு தூங்க்ய உணர்வே இல்லை. அந்தக் கனவு மிக மிக மங்கலாக நேற்றிரவு வந்திருந்தது. மீரா பிடித்த ஐட்டங்களை ஆர்டர் செய்யவே, சாப்பிட்டுக் கொண்டே அன்றைய ஷெட்யூலை ப்ளான் செய்தார்கள். &lt;br /&gt;&lt;br /&gt;அனிதா சொன்னாள், “நேரா போட்டிங் போறோம். அதுக்கப்பறம் மத்ததை பேசிக்கலாம். என்றாள்.&lt;br /&gt;&lt;br /&gt;அகில் சட்டென்று, போட்டிங்கா நா வரலைப்பா ஐ நீட் ரெஸ்ட். உடம்பெல்லாம் வலிக்குது. நீங்க போயிட்டு வாங்க. என்றான். &lt;br /&gt;&lt;br /&gt;அனிதாவின் முகம் வாடிவிட்டது. ஏன் அகில். தேக்கடின்னாலே போட்டிங்தான்...ரொம்ப ஜாலியா இருக்கும். அதைவிட்டுட்டு கொட்டு கொட்டுன்னு எதுக்கு தனியா ரூம்ல இருக்கணும்னு நினைக்கறே’ என்றாள்.&lt;br /&gt;&lt;br /&gt;அகில் எதுவும் சொல்லாமல் இருக்க, மீரா ஏளனமாக சிரித்தபடி, ‘ஏய் நாம க்ரூப்பா வந்திருக்கோம், இவன் மட்டும் தனியா ரெஸ்ட் எடுக்கப் போறானாமா...அதெல்லாம் முடியாது. நீ வந்தா தான் போட்டிங் இல்ல ட்ரிப்பை கேன்ஸல் பண்ணிட்டு ஊருக்குப் கிளம்பிடலாம்” என்றாள். வேறு வழியின்றி ஏதோ ஒரு கணத்தில் எடுத்த முடிவாக ‘ஓகே கய்ஸ் லெட்ஸ் கோ” என்றான்.&lt;br /&gt;&lt;br /&gt;அவர்கள் உற்சாகமாக போட்டிங் கிளம்பினார்கள். இரண்டு அடுக்குகள் கொண்ட விசைப் படகு மெல்லக் கிளம்பி, பின் வேகம் எடுத்தது.&lt;br /&gt;&lt;br /&gt;இவர்களையும் சேர்த்து படகில் கிட்டத்தட்ட எண்பது பயணிகள் ரொம்பி வழிந்தார்கள். நீரைக் கிழித்துக் கொண்டு சென்ற படகின் அடிப்பாகத்தைப் பார்த்த அகிலுக்கு அடிவயிற்றில் லேசாக பயம் துளிர்த்தது. விபின் மீரா காதில் ஏதே கிசுகிசுக்க அவள் ச்சீ என்று உதட்டைக் கடித்து வெகு நாள் கழித்து வெட்கப்பட்டாள். இதை ஓரக் கண்ணால் பார்த்த அனிதா, அகிலைப் பார்த்து புன்னகைக்க அவன் சலனமே இல்லாமல் இறுக்கமான முகத்துடன் நீர்ப்பரப்பையே வெறித்துக் கொண்டிருந்தான். உள்ளுக்குள் புரண்டு கொண்டிருந்த பயம் பந்தாகச் சுழன்று தொண்டை வரை வந்துவிட்டிருந்தது. ராகுல் செந்திலின் வாட்சை பரிசோதித்து ஏதோ கேள்வி கேட்டுக் கொண்டிருந்தான். அகில் அனிதாவின் கையைப் பிடித்து இங்கேர்ந்து போயிடலாம் அனி...எனக்கு பயமா இருக்கு என்றான்.  அவனை ஆழமாகப் பார்த்த அனிதா ‘நீ என்ன குழந்தையா எதுக்கு அனாவசியமா பயப்படறே என்று அவன் கையை அழுத்தமாகப் பிடித்தாள். அகில் சொல்லவும் முடியாமல் மெல்லவும் முடியாமல் வானத்தைப் பார்த்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;சூழல் மிக ரம்யமாக இருக்க, வேகமாகச் சென்று கொண்டிருந்த படகில் திடீரென்று சல சல என்று சத்தம். படகிலிருந்து பார்க்கும் போது காட்டில், புலிகள் கூட்டமாகப் போய்க் கொண்டிருந்தது. அடிக்கடி காட்டு எருமைகள், மான்கள் என்று படகில் போகும் போது சில சமயம் மிருகங்கள் கண்ணுக்குத் தென்படுமாம். தூரத்தில் புலி தன் குட்டியுடன் செல்வதைப் பார்க்கையில் டிஸ்கவரி சேனலை நேரடியாக பார்ப்பது போல் இருந்தது. புலிகளைக் கண்ட ஆர்வம் மிகுதியில் சிலர் அதைத் தெளிவாகப் பார்க்க படகின் ஓரத்திற்கு விரைந்தார்கள். திடீரென்று அந்தப் பகுதியில் வெயிட் அதிகரிக்கவே, படகு நிலைதடுமாறியது. அகில் என்னவென்று தீர்மானிப்பதற்குள் படகு ஒரே நொடியில் கவிழ்ந்து அதில் பயணித்த மொத்த நபர்களும் நீருக்குள் மூழ்கினார்கள். சாவின் குரல் அத்தனை திசைகளிலிருந்தும் எழுந்தது. அய்யோ அம்மா காப்பாத்துங்க, ஹெல்ப் என்ற தீனமான அலறல்கள் கரையிலிருப்பர்வகளின் காதுகளுக்கு எட்டும் முன்னர் கிட்டத்தட்ட அனைவரும் மூழ்கினார்கள். நீச்சல் தெரிந்தவர்கள் பயத்தில் நீச்சல் வராமல், திக்கு முக்காடினார்கள். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://3.bp.blogspot.com/-Yw5muaTh9Co/Tj1BIsMp4zI/AAAAAAAAA5A/dE7okgOVAAc/s1600/Thekkady_Jala_6232a_j_6232f.jpg"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 190px;" src="http://3.bp.blogspot.com/-Yw5muaTh9Co/Tj1BIsMp4zI/AAAAAAAAA5A/dE7okgOVAAc/s320/Thekkady_Jala_6232a_j_6232f.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5637733926096724786" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அகில் மனதில் அம்மாவின் கரங்கள் நினைவுக்கு வந்தது. அப்பாவின் சிரிப்பும் அதன் பின் அனிதாவின் அணைப்பும் ஞாபகத்திற்கு வந்து உயிரை வலிக்கச் செய்தது. தண்ணீருக்கு அடியில் அவன் கைகளும் கால்களும்  பிடிப்புக்காகத் தவித்துக் கொண்டிருக்க, மரங்களும் புதர்களும் பாறைகளும் அடர்ந்த நீருக்கு அடியில் சிக்கி சுவாசம் இழந்து மிதப்பதைப் போல வரும் கனவின் பயத்தை இனி யாரிடம் போய்க் கேட்க முடியும் என்ற கடைசி யோசனையும் மங்க விழிகள் அசைய மறக்க அவனுயிர் பிரிந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;(இரண்டு வாரங்களுக்கு முன் கல்கியில் வெளிவந்த சிறுகதை)&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/748309637854531092-8100780858715648084?l=umashakthi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://umashakthi.blogspot.com/feeds/8100780858715648084/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=748309637854531092&amp;postID=8100780858715648084' title='2 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/748309637854531092/posts/default/8100780858715648084'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/748309637854531092/posts/default/8100780858715648084'/><link rel='alternate' type='text/html' href='http://umashakthi.blogspot.com/2011/08/blog-post.html' title='ஒரே கனவு'/><author><name>உமாஷக்தி</name><uri>http://www.blogger.com/profile/15892356572198993991</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='21' src='http://1.bp.blogspot.com/-gipY35ryk84/TlTuZmGcnbI/AAAAAAAAA6w/jFm_Na-18o4/s220/umashakthi%255B1%255D.JPG'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/-CswCcM4O0DE/Tj1B7loLGjI/AAAAAAAAA5I/vI0_YFZ5O2U/s72-c/car_travel.jpg' height='72' width='72'/><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-748309637854531092.post-4452234672199463964</id><published>2011-07-26T22:58:00.000-07:00</published><updated>2011-07-26T23:20:46.157-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அறிவிப்பு'/><title type='text'>நீண்ட இடைவெளி</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://2.bp.blogspot.com/-h_PTmyd7gnk/Ti-uBAaM9bI/AAAAAAAAA44/n5QRCy3wWkg/s1600/kalki.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 169px; height: 250px;" src="http://2.bp.blogspot.com/-h_PTmyd7gnk/Ti-uBAaM9bI/AAAAAAAAA44/n5QRCy3wWkg/s320/kalki.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5633912991176783282" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;வெகு நாள் எழுதாமல் இருந்ததற்கு காரணங்கள் ஒன்றல்ல இரண்டல்ல. இப்போது எழுதும் தீவிரம் அதிகமாகியுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;கல்கியில் என் தொடர்கதை ”மீதி வெள்ளித்திரையில்” ஆகஸ்ட் முதல் வரவிருக்கிறது. தோழிகள், நண்பர்கள் படித்து கருத்து சொல்லுங்கள். &lt;br /&gt;&lt;br /&gt;இரண்டு வருடங்கள் கழித்து வேலைக்கு சேர்ந்திருக்கிறேன். இரண்டு வருட சுதந்திர வாழ்க்கை கற்றுத் தந்த பாடங்கள் நிறைய. வலிகளுடனான சுதந்திரம் மட்டுமே சாத்தியமானது. நீண்ட நாள் விடுப்பை எடுத்தது போல் மீண்டும் அலுவலகத்திற்குள்.....இஷ்டமான நேரத்தில் எழுந்து, இரவு நீண்ட நேரம் விழித்து படித்தத்து, எங்கு வேண்டுமானாலும் சுற்றி அலைந்து, நினைத்த மாத்திரத்தில் தோழிகளை சந்தித்தெற்கு எல்லாம் இப்போது லீவ். இந்த இரண்டு வருடங்களில் என் சுயத்தை இழக்காமல் ஒரு பூவைப் போல் பாதுகாத்தவர்கள் என் இனிய தோழி சந்திரா, என் உயிர்த் தோழி தமிழ்நதி, என் மதிப்புற்குரிய நண்பர் பாஸ்கர் சக்தி (அவரிடம் பார்ட் டைம் வேலை செய்தேன்), சோர்ந்து போகும் நேரத்தில் எல்லாம் உற்சாகமாய் போனிலும் நேரிலும் பேசிய சூர்யா, இனிமையைத் தவிர வேறு எதுவும் தெரியாத அன்பு நண்பர் பெயரிலேயே தங்கத்தை வைத்துள்ள தங்கமணி பிரபு, மற்றும் என் எல்லா தோழர் தோழியரும் (லிஸ்ட் போட ஆரம்பித்தால் அது முடிவடையவே அடையாது)....நண்பர்களால் மட்டுமே ஆனது என் உலகம். மீண்டும் மீண்டும் நெகிழ்ந்து கரைகிறேன்.....&lt;br /&gt;&lt;br /&gt;மீதி வெள்ளித்திரையில்......;))))&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/748309637854531092-4452234672199463964?l=umashakthi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://umashakthi.blogspot.com/feeds/4452234672199463964/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=748309637854531092&amp;postID=4452234672199463964' title='14 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/748309637854531092/posts/default/4452234672199463964'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/748309637854531092/posts/default/4452234672199463964'/><link rel='alternate' type='text/html' href='http://umashakthi.blogspot.com/2011/07/blog-post.html' title='நீண்ட இடைவெளி'/><author><name>உமாஷக்தி</name><uri>http://www.blogger.com/profile/15892356572198993991</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='21' src='http://1.bp.blogspot.com/-gipY35ryk84/TlTuZmGcnbI/AAAAAAAAA6w/jFm_Na-18o4/s220/umashakthi%255B1%255D.JPG'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/-h_PTmyd7gnk/Ti-uBAaM9bI/AAAAAAAAA44/n5QRCy3wWkg/s72-c/kalki.jpg' height='72' width='72'/><thr:total>14</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-748309637854531092.post-4278577136435658326</id><published>2011-06-16T05:06:00.000-07:00</published><updated>2011-06-16T05:14:55.229-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='இவள் புதியவள்'/><title type='text'>4. இப்போதும் இருக்கும் கதை</title><content type='html'>&lt;span style="font-weight:bold;"&gt;”பெண் எந்தக் காற்றிலும் அசைந்தாடும் நாணலைப் போன்றவள். எத்தகைய பெரும்புயல் வீசினாலும் ஒடிந்து வீழ்ந்து விட மாட்டாள்” – வேட்லி&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://2.bp.blogspot.com/-FuxZe47obiY/Tfnzawj7W_I/AAAAAAAAA4E/XxDDyWDIlPc/s1600/letters2.gif"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 223px; height: 320px;" src="http://2.bp.blogspot.com/-FuxZe47obiY/Tfnzawj7W_I/AAAAAAAAA4E/XxDDyWDIlPc/s320/letters2.gif" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5618789651159145458" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;’நாம் சேராமலேயே போய் விடலாம்..ஆனால் பிரியவே மாட்டோம்' என்று ஜீவா எழுதியிருந்த கடிதத்தின் கடைசி வரிகளை வைஷ்ணவியால் மறக்கவே முடியாது. பிரியவே மாட்டோம் என்ற வார்த்தை இப்போது அர்த்தம் இல்லாமல் போய்விட்டது. ஆனால் மனதளவில் இன்னும் பிரியாமல் அவனுடனான நினைவுகளை அசை போட்டபடி இருப்பதால் தான் அவனை நிரந்தரமாக பிரிந்துவிட்டோம் என்ற எண்ணத்திலிருந்து அவளை காப்பாற்றிக் கொண்டிருந்தது. கனவு கண்ட வாழ்க்கை கை நழுவி போய்விட்டாலும் கனவில் அடிக்கடி ஜீவா வந்து கொண்டே தான் இருந்தான். ரமணனுடன் அன்யோன்யமாக இருக்கும் தருணங்களில் இது பெரும் மனச்சிக்கலை குடுத்தாலும் தவிர்க்க இயலாத ஒரு விஷயமாகிவிட்டது. ”ஜீவா என்னிக்காவது உன்னை நிச்சயமா நான் மறப்பேன் பாரு:என்று தனக்குள் சொல்லிக் கொண்டாள். பெருமூச்சுடன் லாப்டாப்பை ஆஃப் செய்துவிட்டு மணியைப் பார்த்தாள். பதறியபடி யோகேஷ் கேட்ட ஃபைலை எடுத்துக் கொண்டு அவசர அவசரமாக லீ மெரிடியனுக்குக் கிளம்பினாள். அதற்குள் யோகேஷ் பத்து முறை போன் செய்துவிட்டான். &lt;br /&gt;&lt;br /&gt;சரியான நேரத்திற்கு ஃபைலை அவனிடம் தந்ததும்தான் அவன் டென்ஷன் குறைந்தது. யோகேஷ் வெளிப்படையாக பேசுபவன். சந்தோஷோமோ கோபமோ எல்லாவற்றையும் கொட்டிவிடுவான்.  ஒரு நாள் பிங்க் கலர் காட்டன் ஸாரி உடுத்திச் சென்றிருந்தாள். அவன் ஒரு நொடி இமைக்காமல் பார்த்துவிட்டு “ஆசம் வைஷ்ணவி. இந்தக் கலர் உங்களுக்கு ரொம்ப நல்லா இருக்கு” என்றான். சற்றுக் கூச்சமாக இருந்தாலும் அவன் குரல் அன்று முழுவதும் அவளைச் சுற்றி வந்துக் கொண்டே இருந்தது. யோகேஷுக்கு முப்பத்தி இரண்டு வயதாகிறது, நல்ல படிப்பு நல்ல வருமானம் எல்லா வசதிகளும் இருக்கிறது. ஆனால் இன்னும் கல்யாணத்தை ஒத்திப் போட்டுக் கொண்டிருக்கிறான். பட்டும் படாமல் வைஷ்ணவி ஏன் டிலே பண்றீங்க என்று கேட்டதற்கு ”உங்களைப் போல ஒரு டேர் டெவில் வுமனை தேடிட்டு இருக்கேன்” என்றான். அதிலிருந்து அவள் பர்சனல் கேள்விகள் கேட்பதை தவிர்த்தாள். மீட்டிங் முடிந்ததும் க்ளையண்டுடன் லன்ஞ் முடித்துவிட்டு காரில் யோகேஷுடன் ஆபிசுக்குக் கிளம்பினாள் வைஷு. வழியில் அவன் தொண தொணவென்று கேட்ட கேள்விகளுக்கெல்லாம் ஒற்றை வரி பதில்களை சொல்லிக் கொண்டிருந்தாள்.&lt;br /&gt;&lt;br /&gt;”ஆபீஸுகு போனதும் இண்டர்னல் மீட்டிங் உடனே ஆரம்பிச்சடலாம். பேசி டிசைட் பண்ண நிறைய விஷயங்கள் இருக்கு” என்றான்&lt;br /&gt;&lt;br /&gt;அவள் சுரத்தே இல்லாமல் ‘ம்’ என்றாள்.&lt;br /&gt;&lt;br /&gt;”அப்பறம் நம்ம ஆபிஸ்ல இருக்கற கான்பரன்ஸ் ஹால்ல புது எல்.ஈடி டிவி மானிட்டர் போடணும். இன்னிக்கே கொடேஷன்ஸ் வாங்க ஆரம்பிச்சிருங்க.. ”&lt;br /&gt;&lt;br /&gt;”ம்..”&lt;br /&gt;&lt;br /&gt;அவன் போன் அடிக்க அதை எடுத்து உற்சாகமாக பேச ஆரம்பித்தான். வைஷ்ணவி வெளியே வேடிக்கைப் பார்த்தபடி வந்தாள். ஸ்கூல் முடிந்து பிள்ளைகள் சைக்கிளிலும் ஆட்டோக்களிலும் வீடு திரும்பிக் கொண்டிருந்தார்கள். இரண்டு குழந்தைகளை ஸ்கூட்டியில் வைத்து அசால்டாக ஓட்டிச் சென்றாள் ஒரு இளம்பெண். அந்தக் குழந்தைகள் சற்று பயந்து போய் அவள் வயிற்றை இறுகக் கட்டிக் கொண்டிருந்தது. காலம் நிறைய மாற்றங்களை தந்திருக்கிறது. முன்பெல்லாம் எங்கும் எதிலும் இத்தனை வேகம் இருந்திருக்கவில்லை. ஓரளவுக்கு சிட்டி லைஃப் ரசிக்கத் தக்கதாகவே இருந்தது. ஆனால் வளர்ச்சியின் பாதையில் சென்று கொண்டிருக்கும் காலகட்டம் பாரபட்சமின்றி அனைவரையும் திணறடிக்கிறது. இளைஞர்கள் சீக்கிரம் சோர்ந்து போய் அனைத்தும் கிடைக்கப் பெற்ற வாழ்க்கை அலுத்துப் போய் வெகு விரைவில் பல விதமான மன நெருக்கடிகளுக்கு உள்ளாகி அதன் பலனாக பல வியாதிகளை வரவழைத்துக் கொள்கிறார்கள். தன்னுடைய நிறுவனத்தையே உதாரணமாக எடுத்துக் கொண்டால் ஒவ்வொரு நொடியையும் வீணாக்காமல் வேலை செய்தால்தான் இலக்குகளை அடைய முடிகிறது. வீட்டுக்குப் போன பின்பும் ஆன்லைனிலும் மொபைலிலும் தொடர்ந்து கொண்டே இருக்கும் முடிவில்லா வேலைகள். எதற்காக இந்த ஓட்டம். நின்று நிதானமாக வாழ்க்கையை ரசிக்கவே முடியாமல் போய்விடுமோ என்று தோன்றியது. அதுகூட பரவாயில்லை அனுவைப் போல எதாவது பிரச்சனை தனக்கும் வந்துவிடுமோ என்றும் பயமாக இருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;பள்ளி நாட்களில் கவலையற்று தான் துள்ளித் திரிந்ததைப் போல தன் மகளால் சுதந்திரமாக இருக்க முடியவில்லையே என்று வருத்தப்பட்டாள். குழந்தையின் சின்ன மூளைக்குள்தான் எத்தனை விதமான திணிப்புகள்? அப்பா, அம்மா, பாட்டி, பக்கத்து வீட்டுக்காரர்கள், வீட்டுக்கு வருபவர்கள் மற்றும் ஸ்கூல் டீச்சர்கள் என்று எல்லாரும் அவளை வழிநடத்துகிறேன் என நினைத்து பல அறிவுரைகளை வாரி வழங்க அதில் எதை பிடித்துக் கொளவது எதை விடுவது என்று அவள் திணற மாட்டாளா? சமூகம் இப்படித்தான் இருக்கும். தனக்கு வேண்டியதை தனக்கு விருப்பம் உள்ளதை மக்களின் மீது திணித்துக் கொண்டே இருக்கும். எதையும் அழித்து ரீ சைக்கிள் பின்னில் போட முடியாது. நிதி தன் சின்னஞ் சிறிய விரல்கள் வலிக்க வலிக்க ஹோம் வொர்க் பக்கம் பக்கமாக எழுதுவதைப் பார்த்தால் பாவமாக இருக்கும். ஆனால் வேறு வழியில்லை. எழுத வைத்தே தீரவேண்டும். அவள் சரியாகப் படிக்காவிட்டால் ரமணன் நிதியைத் திட்டவே மாட்டான். வைஷுவிடம் “நீ வேலையை விட்டுட்டு நிதியைப் பாத்துக்கன்னு எத்தனை தடவை சொல்றது வைஷு? ஏன் இப்படி குழந்தையோட ப்யூச்சரோட விளையாடறே என்று சீறுவான். அவனை சமாதானப் படுத்துவற்குள் போதும் போதும் என்றாகிவிடும். நிதியே வைஷுவின் அருகில் வந்து ”ஸாரிம்மா நெக்ஸ்ட் டைம் எல்லாத்திலும் ஏ ப்ளஸ் வாங்கறேன்” என்று சொல்லும். &lt;br /&gt;&lt;br /&gt;நிதியின் வயதில் விளையாட்டுத் தோழிகள் அக்கம் பக்கத்தில் இல்லாததால் பார்ப்பி பொம்மையுடனும், டீவி திரையில் தோன்றும் டோரா, பென் 10, சின் சாங், டோரிமான், நோமிடா போன்ற காரெக்டர்களை தனக்கு உகந்த தோழமைகளாக கற்பனை செய்து கொள்ளுவாள்.  ’வைஷும்மா இன்னிக்காவது மறக்காம டோரிமான் பொம்மை வாங்கிட்டு வா அது என்ன சாப்பிடும் தெரியுமா...என்று ஒரு நொடி அவள் கண்களையே சிரிப்புடன் பார்த்துவிட்டு அவள் தெரியாமல் விழிப்பதை பார்த்து பனானா என்று சொல்லி அட்டகாசமாக சிரிப்பாள். ஏற்கனவே அவளுக்கு பென் 10 பாக்ஸ், டோரா ஸ்கூல் பேக், டோரா புஜ்ஜி வாட்டர் பேக், டோரா கர்சீப், சின்-சாங் பெட் ஷீட் மற்றும் தலையணை வாங்கிக் குடுத்திருந்தாள். இந்த டோரிமான் மட்டும் எங்கும் கிடைக்கவில்லை. சீக்கிரம் தேடிப் பிடித்து வாங்கித் தந்துவிட வேண்டும். எப்படி தனக்கும் எல்லாம் கார்டூன் காரெக்டர்கள் தெரிந்திருக்கிறது என்று ஆச்சரியப்பட்டாள் வைஷ்ணவி. &lt;br /&gt;&lt;br /&gt;“காஸ்ட்வைஸ் பாத்தா சாம்சங் பெட்டர்னு நினைக்கறேன்...நீங்க என்ன சொல்றீங்க?” என்று விட்ட இடத்திலிருந்து யோகேஷ் கேட்டதை அவள் கவனிக்கவில்லை. அவன் இன்னும் போனில் யாருடனோ பேசிக்கொண்டிருக்கிறான் என்று நினைத்தாள்.&lt;br /&gt;&lt;br /&gt;அவள் பதில் வராமல் இருக்கவே யோகேஷின் முகம் மாறியது.&lt;br /&gt;&lt;br /&gt;”என்ன வைஷ்ணவி? ஆர் யூ ஹியர்? நான் பாட்டுக்கு பேசிட்டே வரேன் நீங்க வேற ஏதோ யோசனைல இருக்கீங்க போல? எனி ப்ராப்ளம்?”&lt;br /&gt;&lt;br /&gt;”நத்திங் யோகேஷ் ஆனா உங்ககிட்ட முக்கியமான விஷயம் பேசணும். ஆபிஸ் போனதும் பேசலாம்.”.&lt;br /&gt;&lt;br /&gt;”அப்படியா? பரவால்லை ஏன் அவ்வளவு நேரம் வெயிட் பண்ணனும். இப்பவே சொல்லுங்க”&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு நொடி யோசித்துவிட்டு “எனக்கு கொஞ்சம் பர்சனல் ப்ராப்ளம் இருக்கு யோகேஷ். அதனால....&lt;br /&gt;&lt;br /&gt;அதனால....&lt;br /&gt;&lt;br /&gt;”வேலையை ரிசைன் பண்ணிடலாம்னு முடிவு பண்ணியிருக்கேன்” என்றாள்.&lt;br /&gt;&lt;br /&gt;”வாட்? என்ன சொல்றீங்க? ஆர் யூ ஜோக்கிங்? முகத்தின் லேசான அதிர்ச்சி அப்பட்டமாக தெரிந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;”இதுல ஜோக் அடிக்கறதுக்கு எதுவும் இல்லை யோகேஷ். எனக்கு வேற வழியில்லை. புரிஞ்சிப்பீங்கன்னு நினைக்கறேன்.”&lt;br /&gt;&lt;br /&gt;”என்ன வைஷ்ணவி இப்படி திடீர்னு சொன்னா எப்படி? இப்பதான் நம்ம கன்சர்ன் பிக் அப் ஆகிட்டு இருக்கு. நீங்களும் அதுக்கு ஒரு காரணம். சேலரி ஹைக் எதாவது வேணும்னா சொல்லுங்க. இப்பவே போட்டுடறேன்...”&lt;br /&gt;&lt;br /&gt;”சேச்சே அதெல்லாம் இல்லை யோகேஷ் இது வேற பிரச்சனை”&lt;br /&gt;&lt;br /&gt;”அப்படி என்ன பிரச்சனை வைஷ்ணவி திடீர்னு? சொல்லக் கூடியதா இருந்தா ப்ளீஸ் ஷேர் இட் வித் மீ. என்னால முடிஞ்ச உதவி பண்றேன்...கமான் பீ ப்ராங்க்...”&lt;br /&gt;&lt;br /&gt;”இல்லை யோகேஷ் இதை என்னால வெளில சொல்ல முடியாது. சம்திங் டூ பர்சனல். ஆனா என்னால நிச்சயமா கண்டினியூ பண்ண முடியாது.”&lt;br /&gt;&lt;br /&gt;அவன் தீவிரமாக யோசனையில் இருந்தான். சற்று நேர அமைதிக்கு பிறகு “என்னிக்கு ரிலீவ் ஆகணும்னு நினைக்கறீங்க?”&lt;br /&gt;&lt;br /&gt;”முடிஞ்சா இன்னிக்கே யோகேஷ்”&lt;br /&gt;&lt;br /&gt;”அவ்வளவு அவசரமாவா? &lt;br /&gt;&lt;br /&gt;யெஸ் யோகேஷ்...”&lt;br /&gt;&lt;br /&gt;”அப்ப உங்க பெண்டிங் வொர்க், ஹாண்டிங் ஓவர் அண்ட் திங்ஸ் இதெல்லாம்?”&lt;br /&gt;&lt;br /&gt;”எல்லாம் ஈஸ்வரிக்கிட்ட சொல்லியிருக்கேன்....அவங்க பாத்துப்பாங்க யோகேஷ்”&lt;br /&gt;&lt;br /&gt;”ஓ அந்த அளவுக்கு நீங்க ப்ரீ பளாண்ட் இல்லை. நான் தான் முட்டாள். உங்களை நம்பி நிறைய அசைன்மெண்ட்ஸ் ஒத்துக்கிட்டு இருக்கேன்....என்றான் லேசான கோபத்துடன்.&lt;br /&gt;&lt;br /&gt;“Men may come and men may go but the company goes on” கம்பெனி லா படிச்ச்சிருக்கீங்க இல்லை. &lt;br /&gt;&lt;br /&gt;”Every individual is unique” இல்லையா? இதை யாராலையும் மறுக்கமுடியாது வைஷு....உங்க வொர்க் மட்டும் இல்லை உங்க மாரல் சப்போர்ட்டும் எனக்கு நிச்சயம் தேவை...ப்ளீஸ் டேக் யுவர் டைம். ஒரு மாசம் கூட ப்ரேக் எடுத்துக்கங்க…ஆனா திரும்பி வந்துடுங்க. அடம்பிடிக்கும் பள்ளி மாணவனாய் அவன் முக பாவம் இப்போது மாறி இருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;”இல்ல யோகேஷ் திரும்பி வர முடியாத சூழல் வந்துச்சுன்னா கஷ்டம். கமிண்ட்மெண்ட் குடுத்தா நான் அதை மீற மாட்டேன்னு உங்களுக்குத் தெரியும் இல்லையா?’&lt;br /&gt;&lt;br /&gt;”அது தெரிஞ்சுதான் வைஷ்ணவி அப்படி கேட்டேன். இப்ப நீங்க எதையும் பேச வேணாம். நேரா வீட்டுக்கு போங்க. நல்லா யோசிங்க. நாளைக்கு எனக்கு போன் பண்ணுங்க.....&lt;br /&gt;&lt;br /&gt;”அப்ப ஈவ்னிங் மீட்டீங்? &lt;br /&gt;&lt;br /&gt;”எல்லாம் கேன்ஸல் நானும் வீட்டுக்குப் போகப் போறேன். எனக்கு மூட் அவுட். அண்ட் அப்கோர்ஸ் அதுக்கு காரணம் நீங்கதான்.” என்றான்.&lt;br /&gt;&lt;br /&gt;அவள் பதில் பேசாமல் மொபைலையே பார்த்துக் கொண்டிருந்தாள். அதற்குப் பின் இருவரும் எதுவும் பேசிக்கொள்ளவில்லை. வீட்டு வாசலில் அவளை ட்ராப் செய்துவிட்டு அவன் கார் விரைந்துவிட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;சுபா ஆச்சரியமாக வைஷுவை வரவேற்றாள். டீவி பார்த்துக் கொண்டிந்த நிதி அந்த நேரத்தில் வைஷுவை எதிர்ப்பார்க்காததால் சந்தோஷத்துடன் ஓடி வந்து கட்டிக் கொண்டது.&lt;br /&gt;&lt;br /&gt;”என்னம்மா இவ்வளவு சீக்கிரம் வந்துட்டே? உடமபு எதாவது சரியில்லையா?” என்று கேட்டாள் சுபா&lt;br /&gt;&lt;br /&gt;”இல்லைம்மா நான் வேலையை விட்டுட்டேன்.”&lt;br /&gt;&lt;br /&gt;”வைஷு அப்ப நாளைல்லேர்ந்து நீ லீவா” என்று நிதி கேட்டது&lt;br /&gt;&lt;br /&gt;”ஆமாம் செல்லம் அம்மா உன்னோட நிறைய நேரம் இருக்கப் போறேன். நாம ரெண்டு பேரும் சேர்ந்து அபிராமி மால், சிட்டி செண்டர், பீச், ப்ளானடோரியம், பார்க்குன்னு நிறைய இடம் போகலாம். பாப்பா குட்டிக்குப் பிடிச்சதை எல்லாம் வாங்கித் தரேன் சரியா?”&lt;br /&gt;&lt;br /&gt;”சூப்பர்மா...ஐ ஜாலியா இருக்கு.....வைஷு எனக்கு நீ டோரிமான் வாங்கியே தரலையே...”&lt;br /&gt;&lt;br /&gt;”எப்படியாவது டோரிமானை கண்டுபிடிச்சு குட்டிச் செல்லத்துக்கு வாங்கிக் குடுத்துடுவேன் ஓக்கேவா”&lt;br /&gt;&lt;br /&gt;”குட் அம்மா”....என்று நிதி அவள் கன்னத்தில் முத்தமிட்டாள்&lt;br /&gt;&lt;br /&gt;”நாள் முழுக்க இவளோட லூட்டியை பொறுத்துக்கிட்டு பூப்போல இவளை பாத்துக்கிட்டாலும் நீ வந்ததும் என்னை கண்டுக்கறதே இல்லைடி. நல்ல பொண்ணு நல்ல அம்மா....என்றாள் சுபா&lt;br /&gt;&lt;br /&gt;”டீச்சர் ப்ளீஸ் டோண்ட் பீ ஜெலஸ் என்றாள் வைஷு”&lt;br /&gt;&lt;br /&gt;”இது பொறாமை இல்லைடி, பெருமை....சரி சரி போய் முகம் கைகால் கழுவிட்டு வா காபி போட்டுத் தரேன்” என்றாள் சுபா&lt;br /&gt;&lt;br /&gt;”எனக்கு பூஸ்ட்: என்றது நிதி&lt;br /&gt;&lt;br /&gt;நிதியை தூக்கிக் கொண்டு பெட் ரூமுக்குள் நுழைந்தாள் வைஷ்ணவி. &lt;br /&gt;&lt;br /&gt;போன வாரம் லாண்ட்மார்க்கில் வாங்கியிருந்த சித்திரக் கதையை நிதியிடம் எடுத்துக் குடுத்தாள்.&lt;br /&gt;&lt;br /&gt;”ஐ தேங்க்ஸ் வைஷு” என்றாள் நிதி.&lt;br /&gt;&lt;br /&gt;”எதுக்கு அம்மாக்கு போய் தேங்க்ஸ் எல்லாம் நிதிக்குட்டி?”&lt;br /&gt;&lt;br /&gt;”எங்க மிஸ் சொல்லியிருக்காங்க. தேங்க்ஸ், ஸாரி எல்லாம் சொல்றது குட் மானர்ஸ்னு...”&lt;br /&gt;&lt;br /&gt;அப்போது வைஷுவின் போன் அடித்தது. சந்தியா லைனில் வந்தாள்&lt;br /&gt;&lt;br /&gt;”என்னடி ஈவ்னிங் ரமணாவோட வரேன்னு சொன்னே...”&lt;br /&gt;&lt;br /&gt;”ஸாரி சந்தியா டோட்டலா மறந்துட்டேன். ஒரு சின்ன சிக்க்ல் அப்பறமா சொல்றேன். அனு இப்ப எப்படி இருக்கா”&lt;br /&gt;&lt;br /&gt;”இன்னும் ஒன் அவர்ல டிஸ்சார்ஜ் பண்ணப் போறாங்க. அதான் நீ வரியான்னு கேட்கறதுக்கு போன் பண்ணேன். எங்க இருக்கேடி?”&lt;br /&gt;&lt;br /&gt;”வீட்டுல தான் இருக்கேன். ஆனா இப்ப என்னால வர  முடியாது. அப்செட்டா இருக்கேன்....அனுகிட்ட அப்பறம் போன் பண்ணி பேசறேன்.. ஸாரிடி சந்தியா.”&lt;br /&gt;&lt;br /&gt;”ஏய் இட்ஸ் ஓகே உன் குரலே சரியில்லை. நீ முதல்ல நல்லா ரெஸ்ட் எடு. நான் நைட் பேசறேன். பைடி”&lt;br /&gt;&lt;br /&gt;அவள் போனை வைக்கவும் ரமணனின் கால் வரவும் சரியாக இருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;இவள் ஹலோ சொல்லுவதற்கு முன் அவன் அவசரமாக&lt;br /&gt;&lt;br /&gt;”நான் மதுரைக்கு போறேன். இன்பார்ம் பண்ணத்தான் கூப்பிட்டேன். பை” என்று சொல்லிவிட்டு போனை வைத்துவிட்டான். இப்ப எதுக்கு இவன் மதுரைக்கும் இவ்வளவு அவசரமா கிளம்பிப் போகணும் என்று குழம்பினாள் வைஷு. ரமணனின் பெற்றோர்கள் பசுமலையில் இருக்கிறார்கள். திடீரென்று அவன் போவது தன் மீதான கோபத்தில் என்று நன்றாகத் தெரிந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;மறுபடியும் அவன் போனுக்கு டயல் செய்தால். ஸ்விட்ச் ஆஃப் என்று வந்தது. ஏன் இவனுக்கு பொறுமையே இல்லை வேலையை விட்ட விஷயத்தை சொல்லக் கூட அவகாசம் தராமல் கோவித்துக் கொண்டால் என்ன செய்வது என்ற எரிச்சலுடன் மறுபடியும் மறுபடியும் அவன் நம்பருக்குப் போட்டாள். ஆன் செய்யப்படாமேலே இருந்தது. &lt;br /&gt;&lt;br /&gt;நிதிக்கு ரெண்டு தோசையை ஊட்டிவிட்டு படுக்க வைத்தபின் பசியும் களைப்புமாக இருந்தாலும் சாப்பிடப் பிடிக்காமலும் தூங்கவும் முடியாமலும் ஏதேதோ யோசனையில் ஜீரோ வாட்ஸ் பல்பின் மங்கலான வெளிச்சத்தை வெறித்துப் பார்த்தபடி படுத்துக் கிடந்தாள் வைஷ்ணவி. &lt;br /&gt;&lt;br /&gt;மொபல் சன்னமாக சத்தம் எழுப்பவே அதை எடுத்துப் பார்த்தாள். ப்ரைவேட் நம்பர் காலிங் என்று வந்தது. யார் இது இந்த நேரத்தில் அதுவும் பெயர் இல்லாமல் அழைப்பது என்று குழம்பினாள். வெளிநாட்டுக் காலாக் இருக்க வாய்ப்பு இருக்கிறது. ஆனால் அங்கிருந்து யார் கூப்பிடப் போகிறார்கள். க்ளையண்டாக இருக்கக் கூடும். ஆனால் வேலையே வேண்டாம் என்று தூக்கிப் போட்டபின் இந்த போனை எடுத்துத் தான் தீரவேண்டுமா என்று குழப்ப்த்துடன் இருக்க கடைசி ரிங் அடிக்கும் போது தவிர்க்க முடியாமல் எடுத்துவிட்டாள்&lt;br /&gt;&lt;br /&gt;மறுமுனையில் ஒலித்த குரலைக் கேட்டு வைஷ்ணவி அதிர்ச்சியில் உறைந்து போனாள்.&lt;br /&gt;&lt;br /&gt;(தொடரும்)&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/748309637854531092-4278577136435658326?l=umashakthi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://umashakthi.blogspot.com/feeds/4278577136435658326/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=748309637854531092&amp;postID=4278577136435658326' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/748309637854531092/posts/default/4278577136435658326'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/748309637854531092/posts/default/4278577136435658326'/><link rel='alternate' type='text/html' href='http://umashakthi.blogspot.com/2011/06/4.html' title='4. இப்போதும் இருக்கும் கதை'/><author><name>உமாஷக்தி</name><uri>http://www.blogger.com/profile/15892356572198993991</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='21' src='http://1.bp.blogspot.com/-gipY35ryk84/TlTuZmGcnbI/AAAAAAAAA6w/jFm_Na-18o4/s220/umashakthi%255B1%255D.JPG'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/-FuxZe47obiY/Tfnzawj7W_I/AAAAAAAAA4E/XxDDyWDIlPc/s72-c/letters2.gif' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-748309637854531092.post-1776668502136869766</id><published>2011-05-28T10:52:00.000-07:00</published><updated>2011-05-28T11:10:03.254-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='இவள் புதியவள்'/><title type='text'>3. இப்போதும் இருக்கும் கதை</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://1.bp.blogspot.com/-FPBUXX0Xj2M/TeE6bxgOvgI/AAAAAAAAA28/ThDeKoAs3i0/s1600/mourning-woman-in-hospital.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 259px; height: 320px;" src="http://1.bp.blogspot.com/-FPBUXX0Xj2M/TeE6bxgOvgI/AAAAAAAAA28/ThDeKoAs3i0/s320/mourning-woman-in-hospital.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5611830859499748866" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;”ஒரு பெண்ணின் மொத்த வாழ்க்கையும் பிரியங்களினால் ஆன சரித்திரம் &lt;br /&gt; – வாஷிங்டன் இர்விங்க்”&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ரமணி வைஷ்ணவியை சூர்யா ஹாஸ்பிடல் இறக்கிவிட்டான்.&lt;br /&gt;&lt;br /&gt;”நீங்க வரலைய ரமண்?” &lt;br /&gt;&lt;br /&gt;”அர்ஜெண்ட் மீட்டிங்மா. கரெக்ட் டைமுக்கு போகாட்டி எம்.டி என்னைக் கொன்னுடுவாரு. ’அனு எப்படி இருக்கான்னு போன் பண்ணு நான் ஈவ்னிங் வரேன், அந்த ரெசிக்னேஷனை போன உடனே பர்ஸ்ட் திங்கா குடுத்துடு என்ன? இவள் தலையசைக்க அவன் கிளம்பிச் செல்வதற்கும் சந்தியா ஒரு ஆட்டோவில் வந்து இறங்குவதற்கும் சரியாக இருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;நைட் முழுக்க தூஙகலை சந்தியா....அனு இப்ப எந்த ரூம்ல இருக்கா?&lt;br /&gt;&lt;br /&gt;”மெளலிக்கு போன் பண்ணியிருக்கேன். அதோ வரார் பார்”&lt;br /&gt;&lt;br /&gt;அருகே வந்த மெளலி, ”வாங்க வைஷ்ணவி, சந்தியா.&lt;br /&gt;&lt;br /&gt;”என்னாச்சுங்க” என்றாள் சந்தியா&lt;br /&gt;&lt;br /&gt;நத்திங் டூ வொர்ரி, உங்க ப்ரெண்ட் இப்ப நல்லாயிருக்கா. ஆனா நேத்து ரொம்ப பயமுறுத்திட்டா..” என்றான்.&lt;br /&gt;&lt;br /&gt;காரிடரில் நடந்தபடி சன்னமான குரலில் தொடர்ந்தான், ”துணியெல்லாம் அடுக்கி வைச்சிட்டிருந்தா திடீர்னு என்னைக் கூப்பிட்டா பகக்த்துல வரதுக்குள்ளே அப்படியே மயங்கி சரிஞ்சிட்டா...எனக்கு ஒரே டென்ஷனாயிருச்சு. உடனே ஹாஸ்பிடல்ல அட்மிட் பண்ணிட்டேன்.”&lt;br /&gt;&lt;br /&gt;”அனுவுக்கு என்ன ப்ராப்ளம் ஏன் மயக்கமானா?”&lt;br /&gt;&lt;br /&gt;”ஸ்பாண்டிலைட்டிஸ்னு சொல்றாங்க. இன்னும் சில டெஸ்ட் ரிப்போர்ட்ஸ் வர வேண்டியிருக்கு. வந்ததும்தான் தெளிவா சொல்ல முடியும்ங்கறாங்க....ஏற்கனவே அனுவுக்கு தைராய்ட் பிரச்சனைகள் இருக்கு, இப்ப இது வேற பாவம் முதல்ல கொஞ்சம் அப்செட் ஆயிட்டா, இப்ப பரவால்லை!” என்றான் மெளலி.&lt;br /&gt;&lt;br /&gt;அவர்களை அனுவிடம் அழைத்துச் சென்றான்.&lt;br /&gt;&lt;br /&gt;அனு கண்களை மூடியிருந்தாள். வைஷ்ணவி அவள் தோளை மெல்ல தொட்டாள். கண் விழித்த அனு,&lt;br /&gt;&lt;br /&gt;”ஹேய் குட் மார்னிங் எப்ப வந்தீங்க?” என்றாள் இருவரையும் பார்த்து&lt;br /&gt;&lt;br /&gt; ”நீ இப்படி ஹாஸ்பிடல்ல இருக்க எப்படி குட் மார்னிங்” என்றாள் சந்தியா.&lt;br /&gt;&lt;br /&gt; ”குழந்தைங்க எங்கடி?”&lt;br /&gt;&lt;br /&gt; ”விஷ்ணுவும் ஆரபியும் நாத்தனார் ஆத்துல இருக்கா. எதுக்கு ஹாஸ்பிடலுக்கு எல்லாம்னு நான் தான் வரவேண்டாம்னு சொல்லிட்டேன்” என்றாள் அனு&lt;br /&gt;&lt;br /&gt;”இப்ப எப்படி இருக்கு அனு?” என்று கேட்டாள் வைஷ்ணவி.&lt;br /&gt;&lt;br /&gt;”கொஞ்ச நாளாவே அடிக்கடி தலைசுத்திச்சு, விஷ்ணுவை தூக்கக் கூட முடியாது, மயக்கமா வர மாதிரி இருக்கும். கொஞ்ச நாழி அப்படியே உக்காந்து சமாளிச்சிடுவேன். நேத்து நைட் துணி மடிச்சு வைச்சிண்டிருந்தேன். ரொம்ப டயர்டா இருந்துச்சு. திடீர்னு மயக்கம் போட்டு விழுந்ததும் இவர் பதறி அடிச்சு ஹாஸ்பிடல்ல சேர்த்துட்டார். அப்பறம் தான் தெரிஞ்சுது எனக்கு எலும்புத் தேய்வு ஆரம்ப நிலைல இருக்குன்னு என்னன்னவோ சொல்றாடி....எனக்கு பாதி புரியலைல் இனிமே தான் இவர்கிட்ட தெளிவா கேட்டுக்கணும்.”&lt;br /&gt;&lt;br /&gt;”என்னடி இந்த வயசுல இப்படி எல்லாம் சொல்றே? எதனால இப்படி வந்துச்சு?” என்றாள் சந்தியா.&lt;br /&gt;&lt;br /&gt;”நோய்க்கு வயசெல்லாம் கிடையாதுடி. ஏன் எதனால வந்துச்சின்னும் எனக்குத் தெரியலை. வந்தாச்சு. அதை ஃபேஸ் பண்ண வேண்டியதுதான்”&lt;br /&gt;&lt;br /&gt;”பரவால்லைடி தைரியமா இருக்கே....சீக்கிரம் குணம் ஆயிடும். கவலைப்படாதே!” என்ற சந்தியாவை புன்னகையுடன் பார்த்து கண்சிமிட்டினாள் அனு.&lt;br /&gt;&lt;br /&gt;”முப்பது வயசுக்கு மேல நாம எல்லாம் கொஞ்சம் கேர்புல்லா இருக்க ஆரம்பிக்கணும் சந்தியா...நம்ம பிரச்சனையே நம்ம ஹெல்த் விஷயத்துல நாம ரொம்ப அலட்சியமா இருந்திடறோம். என் குழந்தைகளுக்கு ஆரஞ்ச் பழம் உரிச்சு தரதுக்கு எனக்கு சளைக்காது ஆனா எனக்கு அதையே உரிச்சு சாப்பிடணும்னா எங்கேர்ந்து சோம்பேறித்தனம் வருமோ...அதுக்கெல்லாம் தான் சேர்த்து வைச்சு இப்ப அனுபவிக்கறேன்....ஆனா நீங்க எல்லாம் அப்படி இருக்காதீங்கடி. உடனே போய் ஒரு மாஸ்டர் ஹெல்த் செக்கப் பண்ணிடுங்க” .என்றாள்.&lt;br /&gt;&lt;br /&gt;“என்னடி மாமி அட்வைஸ் எல்லாம் பலமா இருக்கு? சரி உனக்காக நாங்க நிச்சயம் செக் பண்ணிக்கறோம்” என்றாள் சந்தியா.&lt;br /&gt;&lt;br /&gt;”இன்னும் எத்தனை நாள் ஹாஸ்பிடல்ல இருக்கணும் அனு?” என்று கேட்டாள் வைஷ்ணவி&lt;br /&gt;&lt;br /&gt;”தெரியலைடி. மே பி நாளைக்கே கூட டிஸ்சார்ஜ் பண்ணிடுவாங்க..” என்று சலிப்பாக சொன்னாள் அனு.&lt;br /&gt;&lt;br /&gt;”சரிடி உடம்பை பாத்துக்க. நான் ஈவ்னிங் ரமணாவோட வரேன். டேக் கேர்டி.”என்று கிளம்பினாள் வைஷ்ணவி.&lt;br /&gt;&lt;br /&gt;”ம்...ஆமா நீ போகலையா” என்று சந்தியாவைப் பார்த்து கேட்க,&lt;br /&gt;&lt;br /&gt;”நான் லீவ் போட்டிருக்கேண்டி. உன்கூடவே இருக்கேன்” என்றாள் சந்தியா.&lt;br /&gt;&lt;br /&gt;வைஷு அவரசமாக கிளம்பிச் சென்றாள். இன்று ராஜினாமா கடிதத்தை குடுத்துவிட வேண்டியதுதான். ரமணன் விரும்பாத ஒன்று இந்த வேலை. அந்த வேலையில் கிடைத்திருந்த அங்கீகாரத்தையும் சுதந்திரத்தையும் இன்றுடன் இழக்கு வேண்டுமே என நினைக்கையில் வைஷ்ணவிக்கு வருத்தமாக இருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;சிக்னல் அருகே ஆட்டோ பிடிக்க காத்திருந்தாள். அப்போது அவளைக் கடந்து ஒரு பல்ஸார் பைக் சென்றது. தன்னையும் அறியாமல் ‘ஜீவா’ என்று கத்திவிட்டாள். ஆனால் அவனுக்கு அது காதில் விழவில்லை. வேகமாகச் சென்றுவிட்டான். ஒரு நொடி செயலற்று என்ன செய்வதென்றே தெரியாமல் அங்கேயே பைத்தியம் போல நின்றுகொண்டிருந்தாள். எப்படி இங்கே வந்தான். கேரளாவில் செட்டில் ஆகப் போவதாக கடைசியில் அவன் சொன்னது நினைவுத் திரையில் ஓடியது. இதே ஊரில் இதே தெருக்களில் பல்லாயிரம் மக்களில் ஒருவனாக அவனும் போய்க்கொண்டிருக்கிறான். ஒருநாளும் கண்ணில் தென்படாத அவன் இன்று எப்படி கண் பார்வைக்குள் வந்தான். முந்தைய நாள்தான் அவனைப் போல ஒருவனை பார்த்திருந்தாள். எண்ணங்கள் மிக வலிமையானது என நினைத்தாள். நாம் தீவிரமாக எதை நினைக்கிறோமோ அது நிச்சயம் நம் கண்முன்னால் வந்துவிடுகிறது. ஆனால் வாழ்நாள் முழுவதும் அவனுடன் இருக்க வேண்டும் என்ற தீவிர எண்ணம் மட்டும் ஏன் பலிக்கவில்லை என்றுத் தெரியவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மன சஞ்சலத்துடன் ஒரு ஆட்டோவில் ஏறி ‘ஆழ்வார்பேட்டை போங்க’ என்றாள்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆபிசினுள் நுழைந்ததும் யோகேஷ் கூப்பிடுவதாகச் சொன்னார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;“நீ பர்மிஷன்னு உஷா சொன்னாங்க வைஷ்ணவி. ஆக்‌ஷுவலி எனக்கு க்ளையண்ட் மீட்டிங் இப்ப இருக்கு. உனக்காகத் தான் வெயிட் பண்ணிட்டு இருந்தேன்.”&lt;br /&gt;&lt;br /&gt; ”எனக்கா? எதுக்கு யோகேஷ்?”&lt;br /&gt;&lt;br /&gt;”ஒரு ந்யூ அசைன்மெண்ட் அதைப் பத்தி உன்கிட்ட டிஸ்கஸ் பண்ணனும். மீட்டிங் முடிச்சிட்டு வந்திடறேன். ஹோப் டூ ஜாய்ன் யூ பார் லன்ச் அப்ப பேசிடலாம்.”&lt;br /&gt;&lt;br /&gt;யோசனையாக வைஷ்ணவி, ”பட் யோகேஷ் அதுக்கு முன்னாடி....என்று சொல்ல ஆரம்பித்தாள்&lt;br /&gt;&lt;br /&gt;”கட் டீடெய்ல்ஸ். காட்ச் யூ தென்” என்று சொல்லிக் கொண்டே ஷு சத்தம் கேட்க படிகள் அதிர நடந்து போயே போய்விட்டான்.&lt;br /&gt;&lt;br /&gt;சரி வந்ததும் சொல்லலாம் என்று முடிவெடுத்து தன் லாப்டாப்பை ஆன் செய்தாள். அவசர அவசரமாக பெர்சனல் என்ற போல்டரை ஓபன் செய்தாள். அதில் பாஸ்வேர்ட் போட்டு ஒளித்து வைத்திருந்த பைலை திறந்தாள்.&lt;br /&gt;&lt;br /&gt;ஜீவா அடர்நீல ஜீன்ஸும், சிவப்பு நிற டீ ஷர்ட்டுடன் வரிசையான பற்கள் தெரிய சிரித்துக் கொண்டிருந்தான். சற்று ஒட்டியிருக்கும் குழி விழும் கன்னம், கோதுமை நிறமும் அந்தக் கண்களும், லேசாக கறுத்திருந்த உதடுகளும், அளவான மீசையும், பாதி முகத்தை மறைக்கும் தாடியும், கழுத்தில் ’வி’ என்ற எழுத்து டாலரும் அன்று பார்த்த மாதிரியே தான் ஜீவா இன்னும் இருக்கிறான். சிறு மாற்றம் கூட இல்லை. பைக் வேகமாக சென்றுவிட்டது டாலர் அணிந்திருந்தானா என பார்க்க முடியவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;எதற்கு அவனுடைய படத்தை இன்னும் வைத்துக் கொண்டிருக்க வேண்டும் எல்லாவற்றையும் டெலீட் செய்துவிடலாம் என நினைத்தாலும் மனசு கேட்காமல் அதை பத்திரப்படுத்தி இருந்தாள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அந்த போட்டோ எடுத்த தினத்தில் வைஷுவிற்காக சிகரெட் புகைப்பதை விட்டுவிட்டான் ஜீவா. ”நிசமாவா ஜீவா, பத்தாவது படிக்கறப்பத்திலேர்ந்து ஊதித்திட்டிருந்தே, எனக்காகவா விட்டே?” என்று ஆச்சரியமாக கேட்ட அவளிடம் ”இதென்ன பெரிய விஷயமா மை டியர் அம்புஜம் உனக்காக நான் என்ன வேணா செய்வேன்.”&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;”என்ன செய்வே? என்று ஆர்வமுடன் கேட்டாள்.&lt;br /&gt;&lt;br /&gt;”இன்னிக்கே குடிக்க கத்துக்கிட்டு அதை உனக்காக விடட்டா? என்று கேட்டான்.&lt;br /&gt;&lt;br /&gt;”அடப்பாவி கொன்னுடுவேன்.” என்று அவன் தோளில் குத்தினாள்.&lt;br /&gt;&lt;br /&gt;”இன்னும் நாலஞ்சு தடவை அப்படி குத்தேன். தோள் வலிக்கு இதமா இருக்கு” என்றான்&lt;br /&gt;&lt;br /&gt;”உன்னை அடிச்சா எனக்குத் தான் கை வலிக்குது. இரும்பால செஞ்ச கை...”&lt;br /&gt;&lt;br /&gt;”ஜிம்முக்கு ரெகுலரா போய் வொர்க் அவுட் பண்றோமில்ல...அப்படித்தான் இருக்கும்” நெஞ்சை நிமிர்த்து ஜீவா சொல்ல அவனை பெருமிதத்துடன் பார்த்தாள் வைஷ்ணவி.&lt;br /&gt;&lt;br /&gt;அவனுடனான முடிவில்லாத உரையாடல்கள் ஒவ்வொன்றும் அவளுக்கு ஞாபகம் இருக்கின்றது. நேரம் வாய்க்கும் போதெல்லாம் சிலவற்றை அசைபோடுவது ஒருவித பழக்கமாகிவிட்டதை நினைத்து தன் மீதே கோபப்பட்டாள்.&lt;br /&gt;&lt;br /&gt;பெருமூச்சுடன் புகைப்படத்தை மூடி விட்டு ராஜினாமா கடிதத்தை டைப் அடிக்க ஆரம்பித்தாள்.&lt;br /&gt;&lt;br /&gt;அப்போது அவளது செல்போன் அடிக்க, யோகேஷ் காலிங் என்று வந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;‘ஹலோ வைஷ்ணவி. ஒரு சின்ன ஹெல்ப்”&lt;br /&gt;&lt;br /&gt;”சொல்லுங்க யோகேஷ்”&lt;br /&gt;&lt;br /&gt;”சீகல் ஃபைல் டூவை எடுத்துக்கிட்டு லீ மெரிடியனுக்கு இன்னும் பத்தே நிமிஷத்துல வர முடியுமா. இட்ஸ் கொயட் அர்ஜெண்ட்”&lt;br /&gt;&lt;br /&gt;”பறந்துதான் வரணும் யோகேஷ்...”&lt;br /&gt;&lt;br /&gt;”எப்படிவேணா வா....டேக் இன்னோவா....ஏன்னா லன்ஞ் இங்கதான் அது முடிஞ்சதும் க்ளையண்டை ஏர்போர்ட்ல ட்ராப் பண்ணனும். வீ ஹேவ் லிட்டில் டைம். ப்ளீஸ் பீ ஃபாஸ்ட் மா”&lt;br /&gt;&lt;br /&gt;”ஆல்ரைட் யோகேஷ்.”&lt;br /&gt;&lt;br /&gt;அவள் போனில் பேசிக் கொண்டிருக்கும் போது செகண்ட் லைனில் ரமணன் மூன்று முறை தொடர்ந்து கூப்பிட்டுக் கொண்டே இருந்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;யோகேஷ் காலை வைத்ததும் ரமணனுக்கு டயல் செய்து கொண்டிருக்கும் போது அவன் போன் வந்தது&lt;br /&gt;&lt;br /&gt;”என்ன வைஷு எவ்வளவு நேரமா ட்ரை பண்றது?”&lt;br /&gt;&lt;br /&gt;”யோகேஷ் பேசிட்டிருந்தார் ரமணா”&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு நொடி அமைதி. அதன் பின் ”சரி உனக்கு இன்னும் அங்க என்ன வேலை, ரெஸிக்னேஷனை தூக்கிப் போட்டுட்டு கிளம்பி வர வேண்டியது தானே? ஈவ்னிங் நான் பர்மிஷன் எடுத்திருக்கேன். அனுவைப் போய் பாத்துட்டு அப்படியே நிதியை கூட்டிட்டு டின்னர் போகலாம்.”&lt;br /&gt;&lt;br /&gt;”இல்ல ரமண். யோகேஷ்கிட்ட பேசவே முடியலை. இப்ப நான் க்ளையண்ட் மீட்டிங் அர்ஜெண்டா கிளம்பிட்டு இருக்கேன். வந்து பேசறேன். ப்ளீஸ் புரிஞ்சுக்கங்க”&lt;br /&gt;&lt;br /&gt;”ஓ அப்ப நேத்து நீ என்கிட்ட பேசினது எல்லாம் சும்மா அப்படித்தானே?”&lt;br /&gt;&lt;br /&gt;”அய்யோ அப்படி இல்லைங்க....நிச்சயம் ஈவ்னிங்குள்ள யோகேஷ்கிட்ட பேசிடறேன்...ஒரு முக்கியமான மீட்டிங்ல இருக்கார். .இப்ப சொன்னா அப்செட் ஆயிருவார்.”&lt;br /&gt;&lt;br /&gt;”அப்ப நான் அப்செட் ஆனா உனக்கு பிரச்சனை இல்லை இல்லையா வைஷு....”&lt;br /&gt;&lt;br /&gt;அவள் பதில் சொல்ல ஆரம்பிக்கும் முன்,&lt;br /&gt;&lt;br /&gt;‘நீ பண்றது எனக்கு சுத்தமா பிடிக்கலை வைஷு....&lt;br /&gt;&lt;br /&gt; கோபமாக போனை வைத்துவிட்டான்.&lt;br /&gt;&lt;br /&gt;எரிச்சலும் லேசான கோபத்துடன் அவன் நம்பருக்கு ட்ரை செய்த போது அது அடித்துக் கொண்டே இருந்தது. ஜீவா அனுப்பியிருந்த மெயில் ஒன்றினை எடுத்துப் படித்தாள்.&lt;br /&gt;&lt;br /&gt;அன்பின் அம்புஜம்,&lt;br /&gt;&lt;br /&gt;உன் பார்வை, உன் பேச்சு, உன் சிரிப்பு, உன் அருகாமை உன் ஸ்பரிசம், உனது இருப்பு என எல்லாமே இனிமையாக அமைந்திருப்பது உன்னிடம்தான் அம்புஜம். இதற்கு என்ன காரணமாகச் சொல்ல முடியும்? மனம்தானடி! .உன் மனமும் என் மனமும் ஒன்று போல் யோசிக்கிறது,  ஒரே விஷயத்தை ரசிக்கிறது ஒத்த மனங்கள் ஒன்றை ஒன்று ஈர்ப்பதன் அர்த்தமும் , ஆர்வமும் புரிகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;                                                        &lt;br /&gt;&lt;br /&gt;அருகேதான் இருக்கிறோம்.ஆனால் தொலைவாய் உணர்கிறேன். விலகி இருக்கையில் உன் அண்மையை உணர்கிறேன். மென்விரல்களின் சின்ன ஸ்பரிசம் மனதுக்கு வெகு இதமாய் இருக்கிறது. ஆனால் மனதின் எதிர்பார்ப்புகள் விரிந்துகொண்டே செல்கின்றன.உனது பேச்சுக்கும் புன்னகைக்கும் ஈடாக எதையுமே ஒப்பிட முடியவில்லை பெண்ணே ! எவ்வளவு மாயங்களை அது தன்னுள் அடக்கியுள்ளது....வியந்து தீரவில்லை எனக்கு. மென் நகை உன்னை பேரழகியாக்குகிறது. செல்லச் சிணுங்கலில் நீ குழந்தையாகி என்னை தாயாக்குகிறாய். அடுத்த நொடியிலேயே ஒரு மர்மப்புன்னகை என்னை உன்மத்தனாக்குகிறது...யாதுமாகி நிற்கிறாய்...எங்கும் நிறைந்து தெரிகிறாய்..`.நாம் சேராமலேயே போய் விடலாம்..ஆனால் பிரியவே மாட்டோம்'. இந்த வாக்கியம் வினோதமாய் பிறருக்கு தோன்றலாம்.. ஆனால் உனக்கும் எனக்கும் மட்டுமான வாக்கியமாய் இருக்கிறதில்லையா இது?&lt;br /&gt;&lt;br /&gt;உன் ஜீவா&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/748309637854531092-1776668502136869766?l=umashakthi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://umashakthi.blogspot.com/feeds/1776668502136869766/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=748309637854531092&amp;postID=1776668502136869766' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/748309637854531092/posts/default/1776668502136869766'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/748309637854531092/posts/default/1776668502136869766'/><link rel='alternate' type='text/html' href='http://umashakthi.blogspot.com/2011/05/3.html' title='3. இப்போதும் இருக்கும் கதை'/><author><name>உமாஷக்தி</name><uri>http://www.blogger.com/profile/15892356572198993991</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='21' src='http://1.bp.blogspot.com/-gipY35ryk84/TlTuZmGcnbI/AAAAAAAAA6w/jFm_Na-18o4/s220/umashakthi%255B1%255D.JPG'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/-FPBUXX0Xj2M/TeE6bxgOvgI/AAAAAAAAA28/ThDeKoAs3i0/s72-c/mourning-woman-in-hospital.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-748309637854531092.post-1759409832119642183</id><published>2011-05-02T06:50:00.000-07:00</published><updated>2011-05-31T10:52:00.169-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='இவள் புதியவள்'/><title type='text'>இப்போதும் இருக்கும் கதை - 2</title><content type='html'>”ஆண்கள் தங்களை கண்ணாடியில் பார்த்துக் கொள்வார்கள். பெண்கள் தங்களை அதில் தேடுவார்கள்” – எலிசா மெலமெட்&lt;br /&gt;&lt;br /&gt;”அனு எப்படி மாறிப்போயிட்டா பாரு வைஷு” என்றாள் சந்தியா.&lt;br /&gt;&lt;br /&gt;”நீ கூட ரொம்ப மாறிட்டேடி அழகி என்றபடி வைஷுவின் மூக்கைத் திருகினாள் அனு.&lt;br /&gt;&lt;br /&gt;”நான் அப்படியேதான் இருக்கேன் அனு” என்றபடி வலித்த மூக்கைத் தடவினாள்.&lt;br /&gt;&lt;br /&gt;”சரியான ராட்சசிடி நீ...ஸ்ஸ்ஸ்...எரியுது பாரு...”&lt;br /&gt;&lt;br /&gt;”எரியட்டும்....சம்திங் ராங் வித் யூ. நீ பழைய வைஷ்ணவி இல்லை..ரொம்ப அமைதியா இருக்கே, அளந்து அளந்து பேசறே? என்ன ஆச்சு உனக்கு?”&lt;br /&gt;&lt;br /&gt;”ஒண்ணுமில்லை அனு. சரி அதை விடு உன் லைஃப் எப்படி இருக்கு? மெளலி என்ன சொல்றார்?&lt;br /&gt;&lt;br /&gt;”ம்...அவளுக்கு என்னடி. தனித் ராணி.  ஜகார்த்தாவாம் எங்கேர்ந்து தான் கண்டுபிடிச்சாங்களோ உனக்கு அவ்வளவு தூரத்து மாப்பிள்ளையை?&lt;br /&gt;&lt;br /&gt;”அவ்வளவு தூரமா இருக்கறதாலதான் சந்தோஷமா இருக்கேன் சந்தியா.....வீடு தான் உலகம். அதான் chat ல கதை கதையா சொல்லிக்கேன் இல்லை? இங்க ஜாயிண்ட் பேமிலில என்னால தாக்குப் பிடிக்க முடியாதுடி! நோ வே....அங்க நானு இவரு பசங்க அவ்வளவுதான். இருக்கவே இருக்கு டீவி. அப்பறம் கிச்சனுக்குள்ளயும் பூஜை ரூமுக்கு உள்ளேயும் போனா அவ்வளவுதான். லைப் முடிஞ்ச உடனே தான் வெளிய வர மாதிரி இருக்கும்” என்று சிரித்தாள் அனு.&lt;br /&gt;&lt;br /&gt;கடல் அலைகளுக்கே அலுக்கும் வரை அவர்கள் அரட்டை அடித்துவிட்டு ஆளுக்கு ஒரு சாக்கோபார் வாங்கி வழிய வழிய சாப்பிட்டார்கள்.   &lt;br /&gt;&lt;br /&gt;”ஏய் காலேஜ் டேய்ஸ்க்கு போன மாதிரி இருக்குடி, அதுவும் சந்தியாவும் சாக்கோபாரும் மறக்கவே முடியாது” என்று உரக்க சிரிக்க ஆரம்பித்தாள் அனு. வைஷுவால் அதை அவ்வளவாக ரசிக்க முடியவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;”ஏய் அடி வாங்கப் போறே நாயே...அதை மறந்து தொலைக்க மாட்டியா?”&lt;br /&gt;&lt;br /&gt;”எப்படிடி மறக்க முடியும். ஒரு சாக்கோ பாருக்காக...அய்யோ அம்மா என்று மறுபடி சிரிக்க ஆரம்பித்தாள். &lt;br /&gt;&lt;br /&gt;அவள் வாயை இறுக மூட யத்தனித்த சந்தியாவின் கைகளில் சாக்கோபார் பிசுபிசுத்தது. அதைப் பார்த்து அனு கண்ணில் நீர் வரும் வரை சிரித்தாள்.&lt;br /&gt;&lt;br /&gt;”போதும்டி....இவ மாறலைடி அதே சிரிப்பு இன்னும் மிச்சம் இருக்கு” என்றாள் சந்தியா அவளை கிண்டல் செய்த கோபத்தை மறந்துவிட்டு.&lt;br /&gt;&lt;br /&gt;”ஆமாமா...ஏன் வைஷு சிரிக்க கூட மாட்டேங்கறே..அடிக்கடி மைண்ட் ஆஃப் ஆகுது? என்ன பிரச்சனைன்னு ப்ராங்கா சொல்லுடி..”&lt;br /&gt;&lt;br /&gt;”நீங்க வரதுக்காக வெயிட் பண்ணிட்டு இருந்தப்ப ஒரு ஜோடியைப் பாத்தேன். ரொம்ப அன்னோன்யமான லவ்வர்ஸ் போல....”&lt;br /&gt;&lt;br /&gt;” அது சரி, பீச்சுன்னா லவ்வர்ஸ் வரத்தான் செய்வாங்க. அப்படித்தான் க்ளோஸா இருப்பாங்க. இதுக்கெல்லாம் அப்செட் ஆற அளவுக்கு சமுதாய பொறுப்புணர்ச்சி உனக்கு வந்திருச்சாடி?”&lt;br /&gt;&lt;br /&gt;”அதில்லை சந்தியா....அந்த பொண்ணோட லவ்வர் அச்சு அசலா ஜீவா மாதிரியே இருந்தான்....”&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு நொடி அனைவரும் அமைதியாகிவிட, வைஷ்ணவி தொடர்ந்து,&lt;br /&gt;&lt;br /&gt;” அவனைப் பாத்ததும் எனக்கு பழசு எல்லாம் ஞாபகம் வர ஆரம்பிச்சிருச்சு... ரொம்ப தனிமையாயிட்ட மாதிரி இருந்துச்சு”&lt;br /&gt;&lt;br /&gt;அவள் லேசாக கலங்குவதைப் பார்த்து பதறிய அனு,&lt;br /&gt;&lt;br /&gt;”ஏய் இன்னுமாடி அவனை நீ மறக்கலை?”&lt;br /&gt;&lt;br /&gt;”எப்படி மறக்க முடியும் அனு, என்ன பேசறே நீ? நான் சாகற வரைக்கும் ஜீவாவை மறக்க முடியாது. அடிக்கடி எதாவது ஒரு விஷயத்துல அவன் நினைப்பு வரும். ஆனா இன்னிக்கு அவனை மாதிரியே ஒருத்தனை பாத்ததும் மனசுக்கு ரொம்ப கஷ்டமாயிருச்சு...&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;”சரி விடு....அதையே நினைச்சுட்டிருக்காதே....நான் எவ்வளவு தூரத்திலேர்ந்து உங்களை எல்லாம் பாக்க வந்திருக்கேன்....”&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;”என்னைப் பத்தி உனக்குத் தெரியும் இல்லையா? இன்னும் ரெண்டு நாளாவது ஆகும், இதிலேர்ந்து நான் மீள....பெருமூச்சுடன் சொன்னாள் வைஷு&lt;br /&gt;&lt;br /&gt;சந்தியா அவள் கைகளைப் பிடித்து, “ஜஸ்ட் பர்கெட் தி பாஸ்ட் வைஷு உனக்கு நாங்க சொல்ல வேண்டியதே இல்லை....”&lt;br /&gt;&lt;br /&gt;”முடியாது சந்தியா.....அது ஒண்ணுதாண்டி நான் லைப்லேயே சந்தோஷமா இருந்த பீரியட் அதையும் மறந்துட்டு மண்ணு மாதிரி எப்படி வாழ முடியும்?”&lt;br /&gt;&lt;br /&gt;”சரி ரமணன் எப்படி இருக்காரு?” என்றாள் அனு.&lt;br /&gt;&lt;br /&gt;”நீ தான் நாளைக்கு வீட்டுக்கு வர்றே இல்லை. நேர்ல பாத்துக்க...”&lt;br /&gt;&lt;br /&gt;”ஏண்டி இப்படி விட்டேத்தியா பேசறே?”&lt;br /&gt;&lt;br /&gt;”ப்ச்...ஒண்ணுமில்லை....சரி லேட்டாகுது கிளம்பலாம். சந்தியா நீயும் நாளைக்கு வாயேன். சின்ன கெட்டுகெதரா இருக்கும்...” என்றாள் வைஷ்ணவி&lt;br /&gt;&lt;br /&gt;”சாரிடி...எனக்கு நிறைய வேலை இருக்கு, அதோட அஸ்வினோட அத்தை மாமா எல்லாம் ஊர்லேர்ந்து வராங்க. எங்க வீடு ஏற்கனவே ஜேஜேன்னு கூட்டமா இருக்கும். ஒத்தைல எங்க மாமியாரால சமாளிக்க முடியாது. ப்ளீஸ் கோச்சுக்காதேடி...”&lt;br /&gt;&lt;br /&gt;”ஹே நோ இஷ்ஷுஸ்....சரிடி நான் கிளம்பறேன். நைட் கால் பண்றேன்.”&lt;br /&gt;&lt;br /&gt;”சரி வைஷு”&lt;br /&gt;&lt;br /&gt;வைஷ்ணவி ஒரு நொடி அனுவையும் சந்தியாவையும் பர்ர்த்து &lt;br /&gt;&lt;br /&gt;’சாரி ரொம்ப மூட் அவுட்டா இருந்துட்டேனா?’&lt;br /&gt;&lt;br /&gt;’ஹேய் எங்களுக்கு உன்னைத் தெரியாதா....நீ இப்ப பத்திரமா வீட்டுக்குப் போய் ப்ரெஷ் ஆயிட்டு எங்களுக்கு ஃபோன் ப்ண்ணு என்ன?’ என்றாள் சந்தியா.&lt;br /&gt;&lt;br /&gt;அவர்கள் மூவரும் மெயின் ரோட்டுக்கு வந்து தனித் தனி ஆட்டோ பிடித்தார்கள். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;வீட்டுக்கு வந்து அலுப்புத் தீரக் குளித்தாள் வைஷ்ணவி. ஸ்ரீநிதி தூங்கி விட்டது. ரமணன் லாப்டாப்பில் எதையோ நோண்டிக் கொண்டிருந்தான். இவள் வந்ததை ஓரக்கண்ணால் பார்த்தும் எதுவும் பேசாமல் வேலையில் கவனமாக இருந்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;கிச்சனுக்குள் சென்று அடுப்பைப் பற்ற வைத்தாள். சூடாக ஒரு காபி இப்போதைய மனநிலைக்கு சரியாக இருக்கும். காபி கலந்து ஹாலுக்கு வந்தாள். சுபாஷினி சீரியலில் மூழ்கிக் கொண்டிருந்தாள்.&lt;br /&gt;&lt;br /&gt;”ஒரு வாய் காபி வேணுமாம்மா?” என்று கேட்டாள்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு நிமிஷம் இரு என்று சைகை காட்டிவிட்டு மறுபடியும் டீவியில் மூழ்கினாள் சுபா, ஐந்து நொடியில் ப்ரேக் விட்டதும்...&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;”என்னடி கேட்டே? காபியா? இப்ப எதுக்கு காபி? சாப்பிடற டைம் ஆச்சே?”&lt;br /&gt;&lt;br /&gt;டீவி திரையில் விளம்பரங்கள் மட்டும் இல்லையென்றால் வைஷுவிடம் பேசக் கூட சுபாஷணிக்கு நேரம் இருககாது. ஒரு முறை தனக்கு பிடித்த தொடரைப் பார்க்க முடியாமல் ஊருக்குப் போய் திரும்பியதும். வைஷ்ணவியை துளைத்து எடுத்து நெட்டில் அதை டவுன்லோட் செய்து பார்த்ததும்தான் அவளுக்கு திருப்தியாக இருந்தது. எவ்வளவு யோசித்துப் பார்த்தும் வைஷ்ணவியால் ஏன் இப்படி அம்மா மாறிப்போனாள் என்று புரிந்து கொள்ள முடியவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;சுபாஷினி ரிட்டயர்ட் டீச்சர். அதுவும் ஆங்கில ஆசிரியை. டீச்சராக இருப்பதற்கே பிறந்தவள் போன்ற தோற்றம் உடையவள். வைஷுவையும் டீச்சர் பொண்ணு என்று சிலர் பிரத்யேக உபசரிப்பு செய்வார்கள்.  ஆனால் எப்படியோ வயதாகிவிட்டால் எல்லாரும் மாறிப் போவார்கள் போலிருக்கிறது. வேலை செய்தும், குடும்பத்தைப் பராமரித்து களைத்துப் போயும் அவர்கள் ஓய்வெடுக்க ஓரிடம் தேவைப்படுகிறது. அது தொலைக்காட்சியாக இருந்தால் என்ன, கோவில் குளமாக இருந்தால் என்ன, அவர்கள் நிம்மதியாக இருந்தால் போதும் என்று தோன்றியது வைஷ்ணவிக்கு.&lt;br /&gt;&lt;br /&gt;அம்மா டீவி பார்க்கட்டும் என்று விட்டுவிட்டு பெட்ரூமுக்குச் சென்றாள். ரமணன் இன்னும் அதே பொசிஷனில் இருந்தான். பத்து நாட்களாக அவர்களுக்குள் பேச்சு வார்த்தை இல்லை. சின்ன சண்டையில் ஆரம்பித்து வழக்கம் போல வேலையை விடு என்ற பல்லவியில் முடித்திருந்தான். அவனுக்கு வைஷ்ணவி வேலைக்கு போவது பிரச்சனை இல்லை, வேலை செய்யும் இடம் தான் பிரச்சனை. &lt;br /&gt;&lt;br /&gt;ஓம் அட்வர்டைஸிங் கம்பெனியில் சீஃப் டிசைனரான வைஷ்ணவிக்கு அங்கு ஓரளவுக்கு நல்ல சம்பளம். அதைவிட மனநிறைவு அதிகம். அவளுடைய பாஸ் யோகேஷ் ரமணனின் பழைய நண்பன். ஏதோ பிரச்சனையில் இப்போது இருவரும் பேசிக் கொள்வதில்லை. அவனைப் பற்றி ரமணனுக்கு சரியான அபிப்ராயம் இல்லை. பத்து நாளுக்கு முன் வேலையை விடச் சொல்லி வற்புறுத்தினான். வைஷ்ணவி மறுக்கவே அவளிடம் பேசுவதில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;ரமணன் பிடிவாதக்காரன், கொஞ்சம் கூட இறங்கி வரமாட்டான். வைஷணவிக்கு இது போன்ற சண்டைகள் மிகவும் அலுப்பாகிவிட்டது. இன்று அவனிடம் பேசாவிட்டால் பிரச்சனை பெரிதாக வாய்ப்பு இருக்கிறது என்று நினைத்தாள்.&lt;br /&gt;&lt;br /&gt;மெல்ல அவன் அருகில் வந்து ’ரமணன்’ என்று அழைத்தாள்&lt;br /&gt;&lt;br /&gt;அவன் திரும்பவில்லை....&lt;br /&gt;&lt;br /&gt;”நான் வேலையை ரிசைன் பண்ணிடறேன் போதுமா?” என்றவளை ஆச்சரியமாகத் திரும்பிப் பார்த்து&lt;br /&gt;&lt;br /&gt;”நிஜமாவா சொல்றே?”&lt;br /&gt;&lt;br /&gt;”ஆமா....”&lt;br /&gt;&lt;br /&gt;”எனக்காக இந்த முடிவை எடுத்தியா இல்ல அங்க எதாவது பிரச்சனையா?”&lt;br /&gt;&lt;br /&gt;”இதான் உங்ககிட்ட எனக்கு பிடிக்காதது. எனக்கு எங்கேயும் எப்பவும் பிரச்சனை வராது. அப்படி வந்தா என்னால சமாளிக்க முடியும். ஓடி ஒளியிற டைப் நான் இல்லைன்னு உங்களுக்குத் தெரியாது?”&lt;br /&gt;&lt;br /&gt;”தெரியும்...இருந்தாலும் திடீர்னு இப்படி சொல்றியே அதான் கேட்டேன்....”&lt;br /&gt;&lt;br /&gt;”உங்களுக்காகத் தான் விடறேன் போதுமா? .ஆனா சீக்கிரம் வேற வேலைக்குப் போவேன். ”&lt;br /&gt;&lt;br /&gt;”வேற எங்க வேணா வேலைக்கு போ. எனக்கு பிரச்சனையே இல்லை. இது என்னோட ஈகோ விஷயம்னு எத்தனையோ தடவை உன்கிட்ட சொல்லிட்டேன். இன்னிக்குத்தான் உனக்கு புரிஞ்சிருக்கு. எனிவே  தேங்க்ஸ் வைஷு....”&lt;br /&gt;&lt;br /&gt;”இட்ஸ் ஓகே...நைட் என்ன சாப்படறீங்க?”&lt;br /&gt;&lt;br /&gt;”நீதான் சமாதானக் கொடியை காட்டிட்டியே நீ போட்டாலும் சாப்பிடறேன்....உன்னையே கூட சாப்பிடலாம் போலத்தான் இருக்கே, மேடத்துக்கு எப்படி வசதி?”&lt;br /&gt;&lt;br /&gt;”உங்களை மாதிரி நினைச்ச உடனே மூடை மாத்திக்க என்னால முடியாதுங்க.... கிவ் மி சம் டைம். இப்ப இட்லி வேணுமா தோசையான்னு சொல்லுங்க...&lt;br /&gt;&lt;br /&gt;அவளையே பார்த்த ரமணன், ”உன் கூட ஆறு வருஷம் ஒரே கூரைக்குக் கீழே இருக்கேன் வைஷு. நீ எப்ப சிரிப்பே எதுக்கு கோபப்படுவே ஏன் சோகமா இருக்கேன்னு என்னால இன்னும் புரிஞ்சுக்கவே முடியல்லை. தட்ஸ் மை ஃபால்ட்...படி நீ ரொம்ப சென்சிட்டிவ் அண்ட் எமோஷனல் மட்டும் தெரியுது....எனக்கு ரெண்டு தோசை போதும். என்றான்&lt;br /&gt;&lt;br /&gt;அவள் திரும்ப யத்தனிக்க,&lt;br /&gt;&lt;br /&gt;”ஆமா இன்னிக்கு உன் ப்ரெண்ட்ஸை மீட் பண்ணியே. ஜாலியா டைம் ஸ்பெண்ட் பண்ணீங்களா?”&lt;br /&gt;&lt;br /&gt;’அதெப்படி உங்களுக்குத் தெரியும்?”&lt;br /&gt;&lt;br /&gt;:உன் தோழிகள் கிட்ட மாத்தி மாத்தி போன்ல பேசினது இந்த காலனிக்கே தெரியும் எனக்குத் தெரியாதா?....”என்று சிரித்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;”ஓ...அப்ப தெரிஞ்சுக்கிட்டே சைலண்டா இருந்தீங்க இல்லை?”&lt;br /&gt;&lt;br /&gt;”ஆமா நீ தான் என்கூட பேசலையே? அப்ப எப்படி அனு எப்படி இருக்கான்னு எங்க மீட் பண்ணப் போறீங்கன்னு உன்கிட்ட கேக்க முடியும்?”&lt;br /&gt;&lt;br /&gt;”பீச்ல மீட் பண்ணோம். அப்பறம் எல்லா கதையும் சொல்றேன். முதல்ல சாப்பிட்டுட்டு தூங்குங்க். டைம் ஆகுது.”&lt;br /&gt;&lt;br /&gt;அவசர அவசரமாக தோசையை சுட்டுக் கொண்டிருந்த போது செல்போன் அடித்தது.&lt;br /&gt;&lt;br /&gt;சந்தியா காலிங் என்று வந்தது. சரி அப்பறம் எடுத்துக் கொள்ளலாம் என்று விட்டுவிட்டாள். ஆனால் மறுபடியும் அது அடிக்கவே எடுத்தாள்.&lt;br /&gt;&lt;br /&gt;”ஹலோ சொல்லுடி ”&lt;br /&gt;&lt;br /&gt;”வைஷு.....நம்ம அனு அனு”&lt;br /&gt;&lt;br /&gt;”அனுவுக்கு என்னடி பதறாம சொல்லு”&lt;br /&gt;&lt;br /&gt;”அனுவை ஹாஸ்பிடல்ல அட்மிட் பண்ணிருக்காங்களாம்..... அவ ஹஸ்பெண்ட் இப்பத்தான் போன் பண்ணி சொன்னார்.&lt;br /&gt;&lt;br /&gt;”என்ன ஆச்சுடி? எந்த ஹாஸ்பிடல் என்ன ஏதுன்னு கேட்டியா?”. &lt;br /&gt;&lt;br /&gt;“என்னன்னு தெரியலை”&lt;br /&gt;&lt;br /&gt;”இல்லைடி அவரே ரொம்ப டென்ஷனா இருந்தார். காலைல தான் மறுபடியும் போன் பண்ணி கேக்கணும்”&lt;br /&gt;&lt;br /&gt;”நல்லாதானேடி பேசிட்டிருந்தா? என்ன ஆயிருக்கும்?”&lt;br /&gt;&lt;br /&gt;”ஒண்ணுமே புரியலைடி....சரி நீ இப்போதைக்கு ப்ரே பண்ணிக்கோ நமக்கு வேற வழி இல்லை...”&lt;br /&gt;&lt;br /&gt;”சரி சந்தியா’ என்றபடி போனை வைத்த வைஷு கறுகி இருந்த தோசையை எடுக்கத் தோன்றாமல் அதையே பார்த்துக் கொண்டிருந்தாள்.&lt;br /&gt;&lt;br /&gt;(தொடரும்)&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/748309637854531092-1759409832119642183?l=umashakthi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://umashakthi.blogspot.com/feeds/1759409832119642183/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=748309637854531092&amp;postID=1759409832119642183' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/748309637854531092/posts/default/1759409832119642183'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/748309637854531092/posts/default/1759409832119642183'/><link rel='alternate' type='text/html' href='http://umashakthi.blogspot.com/2011/05/2.html' title='இப்போதும் இருக்கும் கதை - 2'/><author><name>உமாஷக்தி</name><uri>http://www.blogger.com/profile/15892356572198993991</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='21' src='http://1.bp.blogspot.com/-gipY35ryk84/TlTuZmGcnbI/AAAAAAAAA6w/jFm_Na-18o4/s220/umashakthi%255B1%255D.JPG'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-748309637854531092.post-8515703564726187926</id><published>2011-04-05T02:19:00.000-07:00</published><updated>2011-04-05T02:51:03.685-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='இவள் புதியவள்'/><title type='text'>1. இப்போதும் இருக்கும் கதை</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://1.bp.blogspot.com/-xwJ0wAwC1a8/TZrknmGqtAI/AAAAAAAAA1M/kfGfsIFam2Q/s1600/kajol.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 257px; height: 320px;" src="http://1.bp.blogspot.com/-xwJ0wAwC1a8/TZrknmGqtAI/AAAAAAAAA1M/kfGfsIFam2Q/s320/kajol.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5592033256228434946" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;”அருவருப்பான விஷயமே கணவர்களை கையாளுவதுதான். சுடுதண்ணீரிலேயே வைத்திருந்தால் கூட அவர்களை மென்மையாக்க முடியாது” – மேரி பக்லே&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt; &lt;br /&gt;&lt;br /&gt; &lt;br /&gt;&lt;br /&gt;கடலையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள் வைஷ்ணவி. அலைகள் ஒன்றைத் தொடர்ந்து மற்றொன்று எழும்பி விரைந்து கடற்கரை மணலில் விழுந்து சிதறி மீண்டும் தணியும் காட்சி அலுக்காதவை. கடற்கரையும் அந்த ஈரக் காற்றும், அதன் எதிரே தெரியும் வானமும், அச்சூழலும் அவளால் எவ்வித மன நிலையிலும் ரசிக்கக் கூடியவை..&lt;br /&gt;&lt;br /&gt; &lt;br /&gt;&lt;br /&gt;சந்தியாவும் அனுவும் வருவதற்காக காத்திருந்தாள். சில வருடங்கள் கழித்து இப்படி தனியாக பீச்சில் காத்திருப்பது முதல் தடவை.&lt;br /&gt;&lt;br /&gt; &lt;br /&gt;&lt;br /&gt;சற்று தூரத்தில் ஒரு காதல் ஜோடி நெருக்கமாக உட்கார்ந்து கொண்டு தங்கள் செல்போனில் மாற்றி மாற்றி புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்தார்கள். அந்த இளைஞனை எங்கோ பார்த்த மாதிரி இருக்கவே சற்று உற்றுப் பார்த்தாள். சட்டென்று அவள் முதுகுத் தண்டில் ஏதோ செய்தது. அவன் அச்சு அசலாய் ஜீவாவைப் போலிருந்தான். ஜீவா.....ஒரு காலத்தில் தன் உயிர்மூச்சாக இருந்த பெயர். இப்போது நினைத்தாலும் நிம்மதியை இழக்கச் செய்துவிடும் ஆவேசக் காதல்.....&lt;br /&gt;&lt;br /&gt; &lt;br /&gt;&lt;br /&gt; &lt;br /&gt;&lt;br /&gt;”ஏய் அம்புஜம் எங்க இருக்கே உன்கிட்ட அவசரமா பேசணும்...&lt;br /&gt;&lt;br /&gt; &lt;br /&gt;&lt;br /&gt;”வீட்ல ஜீவா...இன்னும் தூக்கமே கலையல மணி என்ன?&lt;br /&gt;&lt;br /&gt; &lt;br /&gt;&lt;br /&gt;”ஆறு மணி வரைக்கும் தூங்கறே உன் வீட்டுல இதையெல்லாம் கேக்கறது இல்லையாடி அம்புஜம்...?”&lt;br /&gt;&lt;br /&gt; &lt;br /&gt;&lt;br /&gt;”எத்தனை தடவை சொல்றது என்னை அம்புஜம்னு கூப்பிடாதேனு.....&lt;br /&gt;&lt;br /&gt; &lt;br /&gt;&lt;br /&gt;’அடியே வருங்காலப் பொண்டாட்டி உங்க அப்பா வைஷ்ணவின்னு பேர் வச்சா அதை அப்படியே நாங்க கூப்பிடணுமா....உன்னை லவ் பண்ண ஆரம்பிச்ச நாள்லேர்ந்து உனக்கு நான் வச்ச பேர் அம்புஜம்....கடைசி வரைக்கும் அப்படித் தான் கூப்பிடுவேன் அம்பு டார்லிங்....&lt;br /&gt;&lt;br /&gt; &lt;br /&gt;&lt;br /&gt;’ஏன் ஜீவா இப்படி காலங்கார்த்தால கால் பண்ணி கடுப்படுக்கறே..”&lt;br /&gt;&lt;br /&gt; &lt;br /&gt;&lt;br /&gt;”சரி நீ இப்ப தூங்கி உன் யூஷுவல் டைம் வந்ததும் எந்திரிச்சு எனக்கு போன் பண்ணு என்ன?”&lt;br /&gt;&lt;br /&gt; &lt;br /&gt;&lt;br /&gt;”அதான் எழுப்பிட்டே இல்ல சொல்லித் தொலை...”&lt;br /&gt;&lt;br /&gt; &lt;br /&gt;&lt;br /&gt;”அப்படி எல்லாம் சொல்ல முடியாது. பேசாம இன்னிக்கு காலேஜுக்கு லீவ் போட்டறியா?&lt;br /&gt;&lt;br /&gt; &lt;br /&gt;&lt;br /&gt;”அதெல்லாம் முடியாது என்னடா ப்ராப்ளம்?”&lt;br /&gt;&lt;br /&gt; &lt;br /&gt;&lt;br /&gt;”ப்ராப்ளம் எதுவும் இல்லை நைட் முழுக்க ஒர்க் பண்ணி ஒரு கதை எழுதினேன். உன்கிட்ட சொல்லணும்”&lt;br /&gt;&lt;br /&gt; &lt;br /&gt;&lt;br /&gt;”ரெண்டே லைன்ல சொல்லு”&lt;br /&gt;&lt;br /&gt; &lt;br /&gt;&lt;br /&gt;அவன் இரண்டு லைனில் சொல்லாமல் பதினைந்து நிமிஷம் அந்தக் கதையைப் பற்றி உணர்வு பொங்க சொன்னான்.&lt;br /&gt;&lt;br /&gt; &lt;br /&gt;&lt;br /&gt;ஜீவாவின் கூர்மையான பேச்சும் அவனுடைய சுறுசுறுப்பும் அறிவுத் தேடலும் அவனைச் சுற்றி இருக்கும் அனைவருக்கும் பிடித்துவிடும். ஆனால் அவன் விருப்பப் பட்டு சேர நினைத்த இயக்குனர் அப்போது படம் எதுவும் எடுக்கவிலலை, காத்திருக்கும்படி சொல்லிவிட்டார்கள். அவனால் காத்திருக்க முடியவில்லை மற்றொரு இயக்குனர் ராமசுப்புவிடம் சேர்த்துவிட்டான். இரண்டு படங்கள் அவருக்கு வொர்க் செய்தபின் இயக்குனர் மாறனிடம் சேர்ந்துவிட்டான்.&lt;br /&gt;&lt;br /&gt; &lt;br /&gt;&lt;br /&gt;அவன் மாறனிடம் சேர்ந்துவிட்ட பின்பு ரொம்பவும் பிஸியாகிவிட்டதால் வைஷ்ணவியை அடிக்கடி சந்திக்க முடியாமல் போனது. யார் மூலமாவது லெட்டர் குடுத்து அனுப்புவான். இல்லையென்றால் அழகான க்ரீடிங் கார்ட் வாங்கி அதில் காதில் சொட்டச் சொட்ட கடிதமொன்றை எழுதி அனுப்புவான். அவன் எழுதிய கடிதங்களின் ஒவ்வொரு வரியையும் வைஷ்ணவியால் இன்றளவும் மறக்க முடியவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt; &lt;br /&gt;&lt;br /&gt;அன்பின் அம்புஜத்திற்கு,&lt;br /&gt;&lt;br /&gt; &lt;br /&gt;&lt;br /&gt;உன்னை எனக்குப் ஏன் பிடிக்கிறது என்று அடிக்கடி கேட்பாய். செல்லம், என்னை எனக்கு எதனால் பிடிக்கிறதோ அது போல்தான் இதுவும். உன் மீதான என் நேசம் இன்னும் கூட உயர்வானதுடா தங்கம்..எனக்கு பனியைப்பிடிக்கும் .நிலவைப் பிடிக்கும் .கடலைப் பிடிக்கும். அதன் காரணங்கள் என்ன? அவை யாவும் எனக்கு சந்தோஷம் தருபவை.பார்த்ததும் மனசுக்கு இதம் தருகிற மகிழ்ச்சி தருகிற அவை போலத்தான் நீயும் .ஆனால் அவற்றுடன் எனக்கு உரையாடல் சாத்தியமில்லை. உன்னோடு அது முடியும்.&lt;br /&gt;                                   இவை கவித்துவமான காரணங்கள் . இவை ஒரு புறமிருக்கட்டும்..அது தவிரவும்  உன்னை  மிகவும்  பிடிக்கிறது. உன் முகம் , உன் புன்னகை, உன் கனிவான பேச்சு, பிரியமான இயல்பு, நீ காட்டுகிற அக்கறை ,உனது பேச்சில் தென்படும் தெளிவு, உனது புத்த்சாலித்தனம், உனது பக்குவம்......அன்பை நாம் உணரத்தான் முடியும் என்பது பொதுவான நம்பிக்கை..உன்னைப் பார்தத பிறகுதான் அன்புக்கு ஒரு பெண் வடிவத்தைப் பார்த்ததாய் நான் உணர்ந்தேன்.( மிகையாகச் சொல்லவில்லை. அம்மா, சகோதரி ,மனைவி போன்ற உறவுகளில் தென்படுகிற அன்பு வேறு.உன்னிடம் நான் கண்ட அன்பு வேறு).`செம்புலப் பெயர் நீர் என்று சொல்லுகிறார்களே அந்த வகைப்பட்ட அன்புடா இது.&lt;br /&gt;                        &lt;br /&gt;                                    அறிவான விஷயங்கள் பல நீ பேசும் போது உன்னிடம் நான் காண்கிற அந்த உறுதி, என்ன நடந்தாலும், எவ்வளவு பெரிய துன்பம் வந்தாலும் உடைந்து போகாமல் அதை இலகுவாக எடுத்துக்கொண்டு மெல்லிய புன்னகையுடன், சில நேரம் நகைச்சுவையுடன் நீ பேசும் போது நான் பிரமித்துப்போகிறேன். அந்த பிரமிப்பு உன் மீதான காதலை அதிகரிக்கச்செய்கிறது. உனது பக்குவமும் உறுதியும் அன்பும் கனிவும்...நீ பேசப் பேச நான் உன் ரசிகனாகிப் போனேன் செல்லம். அதிகம் கனவு கண்டவனில்லை நான்.சின்னதாய் ஒரு சித்திரம் என் மனதில் இருந்தது எனக்கு பிடித்த ஒரு பெண் வடிவம் பற்றி....அன்பு செலுத்துகிறவள், என்னோடு அறிவார்த்தமாய் உரையாடுகிறவள்,எனக்கு பலவற்றைக் கற்றுத் தருகிறவள்,என்னிடம் என் போலவே அன்பு செய்கிறவள்,எனக்கு சமமானவள் சமயங்களில் என்னிலும் சிறப்பானவள்,நான் அழுதால் என்னைத் தேற்றி தைரியம் சொல்கிறவள்,சமயங்களில் என்னையே தாங்கக்கூடிய வலிமை கொண்டவள்...இப்படியாக...&lt;br /&gt;                                 &lt;br /&gt;                                          எல்லாம் உன்னில் பார்க்கிறேன். என் அன்பு, என் ரசனை,எனக்குப் பிடித்த சிரிப்பு, உதடுகளீல் இருந்து உதிர்கிற ஒவ்வொரு வார்த்தையும் என் வார்த்தையாய் எனக்கானதாய்..நான் நினைப்பதாய்..மனசு தவித்து ஏங்கிப் பித்தாய் துடிக்கிறது. நான் என்பது நீ தானே என் கண்ணே!&lt;br /&gt;&lt;br /&gt; &lt;br /&gt;&lt;br /&gt;இந்த ஷெட்யூலை முடித்துவிட்டு சீக்கிரம் வந்துவிடுகிறேன். ரொம்ப படித்து உடம்பைக் கெடுத்துக் கொள்ளாதே. அவ்வப்போது முடியும் சமயங்களில் தொலைபேசுகிறேன்....&lt;br /&gt;&lt;br /&gt; &lt;br /&gt;&lt;br /&gt;என்றும் அன்புடன்&lt;br /&gt;&lt;br /&gt;உன் ஜீவா&lt;br /&gt;&lt;br /&gt; &lt;br /&gt;&lt;br /&gt;கண்ணில் நீர் துளிர்க்க ஜீவாவைப் போலிருக்கும் அந்த இளைஞனை மீண்டும் ஒரு முறை பார்க்க நிமிர்ந்த போது எதிரில் அனுவும் சந்தியாவும் நின்றிருந்தார்கள்&lt;br /&gt;&lt;br /&gt; &lt;br /&gt;&lt;br /&gt;அனு ஆரன்ஜ் கலரில் கறுப்பு டிசைன் போட்டு மிர்ரர் வொர்க் செய்யப்பட்டிருந்த அழகான சுரிதாரில் வந்திருந்தாள். சந்தியா எளிமையான சில்க் காட்டனில் ஓவியம் போல எத்னிக்காக இருந்தாள்.&lt;br /&gt;&lt;br /&gt; &lt;br /&gt;&lt;br /&gt;மூவரும் சந்தோஷத்துடன் கைகுலுக்கிக் கொண்டார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt; &lt;br /&gt;&lt;br /&gt;’ஏய் வைஷு ரொம்ப நேரமா வெயிட் பண்ணிறயா’ என்ற அனுவைப் பார்த்த வைஷ்ணவி ஆச்சரியப்பட்டுப் போனாள். ஒல்லிக் குச்சியாக இருந்தவள் இப்போது சற்று பூசினாற் போல இருந்தாள். பார்த்து ஆறு வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டதும் திருமணமாகி குழந்தைப் பெற்ற உடலின் வித்யாசம் அவள் உடம்பில் நன்றாகவே தெரிந்தது&lt;br /&gt;&lt;br /&gt; &lt;br /&gt;&lt;br /&gt;”ஆமா அனு நான் வந்து கிட்டத்தட்ட ஒன் அவர் ஆகுது. எப்படி இருக்கே? உக்காரு....&lt;br /&gt;&lt;br /&gt; &lt;br /&gt;&lt;br /&gt;இருவரும் அவள் அருகருகே அமர்ந்தார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt; &lt;br /&gt;&lt;br /&gt;”சாரிப்பா. நான் சந்தியா ஆபிசுக்கு போய் அவளைக் கூட்டிட்டு வரதுக்குள்ள லேட்டாயிருச்சு....”&lt;br /&gt;&lt;br /&gt; &lt;br /&gt;&lt;br /&gt;‘நாங்க ஒரே ஊர்ல இருக்கோம்னு தான் பேரு அனு...ரொம்ப ரேராத்தான் மீட் பண்ணுவோம்...எப்படி இருக்கே வைஷு&lt;br /&gt;&lt;br /&gt; &lt;br /&gt;&lt;br /&gt;”அது சரி நீங்க நினைச்சா எப்ப வேணா மீட் பண்ணிக்கலாம் ஆனா நான் இன்னும் ஒரு வாரத்துல ஜகார்தா கிளம்பிடுவேன் என்ற அனுவைப் பார்த்து&lt;br /&gt;&lt;br /&gt; &lt;br /&gt;&lt;br /&gt;”நாங்க நினைச்சா கூட வரமுடியாத இடத்துக்கு போயிட்டு ஏண்டி இவ்வளவு ஷார்ட் ட்ரிப்ல வந்தே என்றாள்  சந்தியா.&lt;br /&gt;&lt;br /&gt; &lt;br /&gt;&lt;br /&gt;”என் ஹஸ்பெண்ட் ரிலேட்டிவ் மேரேஜ்னு சொன்னேன் இல்ல....அப்படியே என் ப்ரெண்ட்ஸ் சொந்தக் காரங்க எல்லாரையும் பாத்துட்டு போலாம்னு ஒரு வாரம் இவர்கிட்ட கெஞ்சி கூத்தாடி டைம் வாங்கிருக்கேன்....”&lt;br /&gt;&lt;br /&gt; &lt;br /&gt;&lt;br /&gt;அனுவா பேசுவது என்று திகைத்தாள் வைஷ்ணவி...&lt;br /&gt;&lt;br /&gt; &lt;br /&gt;&lt;br /&gt;”என்னது! பர்மிஷன் கேட்டு கெஞ்சினியா? நீயாடி பேசறே?&lt;br /&gt;&lt;br /&gt; &lt;br /&gt;&lt;br /&gt;”நானேதான் வேற யாரு? பொம்பளைங்களுக்கு புருஷன் தாண்டி எல்லாம். அவாளை மீறி உலகத்துல என்ன வேண்டிக் கிடக்கு....&lt;br /&gt;&lt;br /&gt; &lt;br /&gt;&lt;br /&gt;அவளை மேலும் கீழும் பார்த்த வைஷ்ணவியை முறைத்த அனு,&lt;br /&gt;&lt;br /&gt;”ஏண்டி நீங்க ரெண்டு பேரும் ஆத்துக்காரரோட தானே இருக்கீங்க டைவர்ஸ் கிய்வர்ஸ் பண்ணிட்டீங்களா?&lt;br /&gt;&lt;br /&gt; &lt;br /&gt;&lt;br /&gt;அவளின் வினோதக் கேள்வியால் ஆச்சரியப்பட்ட வைஷ்ணவி&lt;br /&gt;&lt;br /&gt; &lt;br /&gt;&lt;br /&gt;”என்ன ஆச்சு அனு? வந்ததும் வராததுமா நீ பாட்டுக்கு ஏதோ கதா காலட்சேபம் மாதிரி ஏதோ பேச ஆரம்பிச்சிட்டே? காலேஜ் டேய்ஸ்ல எங்களோட லூட்டி அடிச்ச அனுதானா நீ இல்லை இது வேற யாரோவான்னு டவுட்டா இருக்கு....&lt;br /&gt;&lt;br /&gt; &lt;br /&gt;&lt;br /&gt;”உன் அனுதாண்டி....என்கிட்ட தெரியற சேன்ஜஸ் பார்த்து ஆச்சரியமா இருக்கு....இப்ப நீ பாக்கறியே இதான் உண்மையான அனுராதா....முன்ன பாத்ததது அரைவேக்காடு அனு புரியறதா?&lt;br /&gt;&lt;br /&gt; &lt;br /&gt;&lt;br /&gt;ஒரு நொடியில் வைஷ்ணவியின் மனத்திரையில் அனு இஸ்மாயிலுடன் ஓடிப் போக திட்டமிட்டது நினைவுக்கு வந்து தொலைத்தது.&lt;br /&gt;&lt;br /&gt; &lt;br /&gt;(தொடரும்)&lt;br /&gt;&lt;br /&gt;“இவள் புதியவள்” பெணள் மாத இதழில் வெளி வந்துக் கொண்டிருக்கும் எனது தொடர்க்தை&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/748309637854531092-8515703564726187926?l=umashakthi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://umashakthi.blogspot.com/feeds/8515703564726187926/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=748309637854531092&amp;postID=8515703564726187926' title='8 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/748309637854531092/posts/default/8515703564726187926'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/748309637854531092/posts/default/8515703564726187926'/><link rel='alternate' type='text/html' href='http://umashakthi.blogspot.com/2011/04/1.html' title='1. இப்போதும் இருக்கும் கதை'/><author><name>உமாஷக்தி</name><uri>http://www.blogger.com/profile/15892356572198993991</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='21' src='http://1.bp.blogspot.com/-gipY35ryk84/TlTuZmGcnbI/AAAAAAAAA6w/jFm_Na-18o4/s220/umashakthi%255B1%255D.JPG'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/-xwJ0wAwC1a8/TZrknmGqtAI/AAAAAAAAA1M/kfGfsIFam2Q/s72-c/kajol.jpg' height='72' width='72'/><thr:total>8</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-748309637854531092.post-9153223834249276486</id><published>2011-02-09T10:07:00.000-08:00</published><updated>2011-02-09T10:11:48.608-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='வாசிப்பு'/><title type='text'>கடவுளைக் கண்டுபிடிப்பவன் -  கவிஞர் அமிர்தம் சூர்யா</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://3.bp.blogspot.com/_9vV1GQrxDFE/TVLYRL_eaRI/AAAAAAAAAzA/K9k2y0Axt2Q/s1600/surya1.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 203px; height: 320px;" src="http://3.bp.blogspot.com/_9vV1GQrxDFE/TVLYRL_eaRI/AAAAAAAAAzA/K9k2y0Axt2Q/s320/surya1.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5571753478799124754" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கவிஞர் அமிர்தம் சூர்யாவின் படைப்புலகம் கேள்விகளாலும் தேடல்களினாலும் ஆனது.  ஒரு சமயம் சிறுவனாகவும் மற்றொரு சமயம் முதிர்ந்த ஞானத் தேடல் உடையவராகவும் எழுத்துக்களை சலித்து சலித்து அதன் மூலம் தன்னைத் தெளிவு படுத்திக் கொள்கிறார்.  இக்கதைகளினூடே அவரின் நீண்ட நெடிய பயணத்தில் இளைப்பாறுவதற்கே இடமில்லை. நீர்சுழற்சிப் போல சில கதைகளும். புதிர்களின் களன்களாய் சிலவும், மிகவும் எளிமையான அங்கதத்துடன் சிலவும் என கதைகள் பிரிவுகள் எண்களால் வகைப்பட்டுள்ளது, எல்லாமே சரியாகத் தானே இருக்கிறது, வரமாய் கிடைத்த வாழ்வினை ஏனிப்படி சிக்கலாக்கிக் கொள்கிறீர்கள் எனும் கேள்வியை சூர்யா முன்வைக்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt; &lt;br /&gt;“புனைவிற்கும் வாழ்வுக்குமான இடைவெளி அழிந்து வாழ்வே ஒரு புனைவாகியிருப்பதை, புனைவு மெல்ல மெல்ல வாழ்வாக உருமாற்றம் அடைவதை தரிசிக்கும் சாத்தியத்தை” அமிர்தம் சூர்யா சில கணங்களேனும் உணர்ந்திருக்கிறார். அதனால் தான் இத்தனை செறிவாய் எழுத முடிந்திருக்கிறது. மேலும், இக்தொகுப்பின் தலைப்பிலிருந்து வித்யாசங்கள் தொடங்குகின்றன. கடவுளை உதாசீனப் படுத்துபவன் இருக்கிறான், கொண்டாடுபவன் இருக்கிறான், இவன் யார் புதியதாக கண்டுபிடிப்பவன் என யோசிக்க வைக்கும் தலைப்பு. அடுத்து முகப்பு ஓவியம். ஓவியர் சந்ருவின் கைவண்ணத்தில் பத்மாசனத்தில் அமர்ந்திருக்கும் சிலை புத்தரா, வேறு ஏதேனும் கடவுளரா என்று கண்டுணர முடியாதபடியாக கடவுளும் பக்தனும் ஒரே ஓவியத்தில் சிதறிக் கிடக்கிறார்கள். பிம்பங்களை சிதைத்துவிட்டு அரூபமாக கடவுளைத் தேடிச் செல்வதாய் ஒரு குறியீடும் அதில் தென்படுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt; &lt;br /&gt;&lt;br /&gt;மற்றொரு முக்கியமான வித்யாசம், இத்தொகுப்பில் உள்ள பதினான்கு கதைகளுக்கும் தலைப்புக்கள் கிடையாது. 1 லிருந்து 14- வரையிலான எண்கள்தான் தலைப்புகள். எந்தவித பாசாங்கும் இல்லாத கதைகள் இவை என்பதற்கு சூர்யாவின் வெள்ளை அறிக்கையே சான்று. ”இதை விளையாட்டாக மட்டுமன்றி கால மாயைக்குள்ளிருந்து ஒரே பாத்திரம் ஒரு இடத்தில் குழந்தையாகவும் ஒரு கதையில் வில்லனாகவும் மாறி மாறி நடிப்பதாய் நான் நம்புதலின் முயற்சியாகவும் இருக்கிறது. ஒரு பெரிய நாவலின் வெட்டியெடுக்கப்பட்ட சில பகுதிகளாய் என் வாழ்வு தோன்றுவதால் இக்கதைகளுக்குத் தலைப்பிடாமல் எண்களைப் பொறித்தேன். இது வாசிப்பின் ருசி கூட்டவும், இப்படித்தான் புனைவின் வாழ்வாய், வாழ்வே புனைவாய் இருக்கிறது என்று நம்புவதாலும்’ என்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அறிந்து முடியாத பிடிக்குள் அடங்காத படைப்புத் திறத்தை இந்த மென்மனதை உடைய எழுத்தாளர் கொண்டுள்ளார், அவருடைய கவிதை ஒன்றுக்கும் இத்தொகுப்பிற்கும் ஒற்றுமை இருப்பதைக் காண்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;”புத்த பிட்சுகளின் கூடாரத்திற்குள்&lt;br /&gt;ஆல விழுதுகள் துளைத்து மண் ருசிக்கு அலைகிறது&lt;br /&gt;ஆசையாய் - இழுத்து கட்டிய கூடார கயிற்றில் சாய்ந்து,&lt;br /&gt;85 வயதில் பன்றி இறைச்சியை ருசித்துக்&lt;br /&gt;கொண்டிருக்கிறான்....&lt;br /&gt;நீங்கள் பார்க்க தவறிய புத்தன்.”&lt;br /&gt;&lt;br /&gt; &lt;br /&gt;&lt;br /&gt;கதைகளை வாசிக்கையில் நாம் பார்த்து நெகிழ்ந்த புத்தர்களை விட பார்க்கத் தவறிய புத்தன் ஒருவன் மோனத்தில் ஆழ்ந்து கிடக்கிறான்.&lt;br /&gt;&lt;br /&gt; &lt;br /&gt;&lt;br /&gt;மரபில் தோய்ந்த புதுமையான கதைக் களன்களான இவற்றை நாம் வாசித்துக் கொண்டிருக்கிறோமா அல்லது கதையிலிருந்து யாரோ ஒருவர் வெளியில் வந்து நம்முடன் சேர்ந்து இதையெல்லாம் வேடிக்கைப் பார்க்கின்றாரா அல்லது நாமும் அவர்களும் ஒன்றுதானோ எனும் சந்தேகத்தை நமக்குள் முகிழ்க்கச் செய்யும் வித்தைக்காராய் இருக்கிறார் இக்கதாசிரியர். மேஜிக்கல் ரியலிசத்தில் முற்றிலும் மூழ்கிவிடாமல் அவ்வப்போது மின்னற் பொழுதில் அதை உணர்த்தி பெரும்பான்மையாக யதார்த்த நிகழ்வுகளைச் சொல்லும் கதைகள் இவை.&lt;br /&gt;&lt;br /&gt; &lt;br /&gt;&lt;br /&gt; &lt;br /&gt;&lt;br /&gt;அவரின் மொழியில் ‘கதை என்ன என்று கேட்டால் ஒற்றை வரியில் சொல்லிவிட முடியாதபடி அமைவதுதான் நவீன சிறுகதை.” ”உருப்படியாக ஒரு கதையை சொல்ல முடியாதவன் தான் மேஜிக்கல் ரியலிஸத்துக்குள் ஒளிந்து கொள்வான் அல்லது பின்நவீனத்துவம் என்ற பெயரில் கலைத்து போடுவான்.” கற்பனைக்கு எட்டாத சில கவித்துவமான வர்ணணைகளை ரசிக்கையில் கடந்து போக முடியாதபடி வெவ்வேறு இடங்களுக்கும் காலகட்டத்திற்கும்  நம்மை இழுத்துச் செல்கின்றன. கதைகளை நேசித்து உயிர் வாழும் மனங்களுக்கு இவை சில சமயம் உணவாகவும் சில சமயம் அருமருந்தாகவும் உள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt; &lt;br /&gt;&lt;br /&gt;இக்கதைகள் ஒரே நேர்க்கோட்டில் பயணம் செய்யாவிட்டாலும் ஒரே கதாபாத்திரத்தின் பல்வேறு பரிமாணங்களை வெவ்வேறு சூழ்நிலைகளில் மனப்போக்குகளை ஆழமாகப் பதிவு செய்கின்றது. ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் எனும் சொலவடைக்குத் தகுந்தாற்போல் அத்தனைக் கதைகளும் அருமையாக பின்னப் பட்டிருக்கிறது. எனது விருப்பமாக மூன்று கதைகளைச் சொல்வேன்..&lt;br /&gt;&lt;br /&gt; &lt;br /&gt;&lt;br /&gt;மூன்றாவது எண் அதாவது ”ஆட்டச்சுழல்” எனும் ஆதித் தலைப்புடைய கதையின் முகப்பில் “நீங்க என்னை மன்னிக்கணும். கிருஷ்ணனை நான் கொன்னுட்டேன்’  இக்கதை அனைத்துக் கதையிலும் ஆகச் சிறந்த கதை இதுதான். ஆழ்ந்த தத்துவ விசாரணைகளுடன் வாசிக்க வாசிக்க புதுவித அனுபவத்தை வாசகனுக்குச் சலிக்காமல் அளிக்கிறது. இக்கதையை விவரிக்க முடியாது, வாசித்து உணர்ந்து கொள்ளவே முடியும். அதுவே அதன் தனிச்சிறப்பு. இளம் வயதில் மேதயான சிறுவன் ஒருவனுக்கும், அவர் அறிவின் மீதேறி பயணம் செய்யும் எழுத்தாளனான அவன் தந்தைக்கும், அந்த எழுத்தின் மீது கவரப்பட்டு மீண்டும் மீண்டும் அவனைத் தேடி வரும் வாசகனுக்கும் இடையில் நடக்கும் உணர்வுப் போராட்டமே இக்கதை. நவீன கதை என்ற  மிரட்சியைத் தராமல் கதை அதன் போக்கிலே சென்று வாசிப்பவைக் கதைக்குள் கட்டிப் போட வைக்கின்றன.&lt;br /&gt;&lt;br /&gt; &lt;br /&gt;&lt;br /&gt;ஆயாவை சிறுகதையாக்குவது எப்படி (கதை எண் 4) யதார்த்த நிகழ்வுகளை சற்றும் மிகைப்படுத்தாமல் இந்தச் சமூகத்தில் சாதி இன்னும் எப்படி விரவிக்கிடக்கிறது என்றும், சாதிவெறியில் உயிர் இழந்த நண்பனின் மரணத்திற்கு மனம் கொதித்து எதுவும் செய்ய முடியாத கையறு நிலையில் தன் பாட்டியை கதைக்குள் கொண்டு வந்து சகலரையும் எள்ளலுடன் சாடியிருப்பது தனித்துவமானது. முதல் வாசிப்பிற்கு ஒன்றாகவும் மீள் வாசிப்பிற்கு வேறொன்றாகவும் தென்படும் செய் நேர்த்தியுடைய கதை இது.&lt;br /&gt;&lt;br /&gt; &lt;br /&gt;&lt;br /&gt;பதினான்காம் கதையின் ஆதித் தலைப்பு ஜிலேபி. தன்னுடன் வேலைப் பார்க்கும் தன் வயதில் சரி பாதி வயதுடைய ராதாவின் மீது கிருஷ்ணனுக்கு காதல் அல்லது காமம். குடும்ப வாழ்க்கையில் மனைவியுடன் அடிக்கடி சண்டை போடும் இயல்பை உடையவன். அவளும் இவனது எழுத்தாளன் எனும் அடையாளத்தை விரும்பாதவளாய் சமயம் கிடைக்கும் போதெல்லாம் வார்த்தைகளால் அவனைக் குத்திக் காயப்படுத்துகிறாள். இந்நிலையில் அவன் கலங்கிக் கிடந்த ஒரு நாளில் ஆறுதலாய் ராதா பேசியதும் இருவருக்கும் இனம் தெரியாத மன நெருக்கம் ஏற்படுகிறது. ராதா தன்னுடைய முன் ஜென்மத்து மனைவி என்று நம்பத் தொடங்கி அவளிடமும் அதையே சொல்கிறான். தங்களுடைய உறவுக்கு என்ன பெயர் அதற்குத் தருவது என்று இருவருமே குழம்பிப் போகிறார்கள். வேறு வழியின்றி பெயர் சொல்ல முடியாத அன்பில் இருவரும் திளைக்கிறார்கள். ’ஜிலேபி’ என்பது அவன் விட்டுவிட்டு மீண்டும் ஆசைப்பட்டு சாப்பிட ஆரம்பித்த ஒரு மீன் வகை அதையே ராதாவை செல்லமாக அழைக்கும் பெயராக்குகிறான் கவிஞனாகிய கிருஷ்ணன்.&lt;br /&gt;&lt;br /&gt; &lt;br /&gt;&lt;br /&gt;இந்நிலையில் ஒரு முறை நண்பர்களுடன் சதுரகிரி மலைக்கு காரில் பயணம் மேற்கொள்ளும் கிருஷ்ணன் திடீரென்று ஒரு இடத்தில் இப்போது தாமரைக் குளம் வரப் போகிறது என்று சொல்கிறான். அடுத்து என்ன இடம் வரப் போகிறது ட்ரைவர் உட்பட காரில் செல்லும் யாருக்கும் தெரியாத நிலையில் கிருஷ்ணனின் வார்த்தை நகைப்பூட்டுகிறது. ஆனால் அவன் சொன்னது போல தாமரைக்குளம் வந்துவிடவே அனைவருக்கும் திகைப்பு.&lt;br /&gt;&lt;br /&gt; &lt;br /&gt;&lt;br /&gt; &lt;br /&gt;&lt;br /&gt;‘இது போல எனக்கு அடிக்கடி தோணுதே. ஒருவேளை பூர்வ ஜென்ம வாசனையா இருக்குமோ? விடுபட்ட போன வாழ்க்கையைத் தான் நான் வாழ வந்திருக்கேனோ?’  என்ற கிருஷ்ணனின் கேள்விக்கு நண்பன் பதில் சொல்கிறான்.&lt;br /&gt;&lt;br /&gt; &lt;br /&gt;&lt;br /&gt;‘கிருஷ்ணா! படைப்பாளிகளின் மனம் சராசரியானதல்ல. அது சூட்சமான விழிப்பை கொண்டு இருக்கும். அதனுடைய டிராவலும் ஸ்பீடும் அதிகம். நமக்கு முன்பாகவே நமது மனம் வேகமாக டிராவல் பண்ணி அதைப் பாத்துடும். நமக்கு எப்பவோ பாத்த மாதிரி தோணும். ஆனா உண்மையிலேயே நாமத்தான் உட்கார்ந்த இடத்திலிருந்தே அதைப் பார்த்திடறோம். நாம பார்த்ததை நாம நம்பாம அதை ப்ழைய ஜென்மம் என்ற படிமத்துல வெச்சிடுறோம். எப்பவாவது தோணுச்சினா தப்பில்ல எப்பவும் தோணுனா சிகிச்சை எடுக்க வேண்டி வரும். புரியுதா” என்றார்&lt;br /&gt;&lt;br /&gt;’எதற்கோ யாருக்காகவோ நான் பிறந்துள்ளதாய் உணரத் துவங்கினேன். அதுவே சுகமாயும் தேடலாகவும் இருந்தது.’ &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தன்னை எப்போதும் மிகவும் வித்யாசமானவகாக வெளிக்காட்ட விரும்பும் கிருஷ்ணனை அவன் தோழி பாஞ்சாலி சகட்டு மேனிக்கு போனில் திட்டுகிறாள்.&lt;br /&gt;&lt;br /&gt;’டேய் உங்களுக்கெல்லாம் ஒரு அடிமை வேணும். ஆதிக்கம் பண்ண, கேள்விக் கேட்டாலோ அறிசாப் பேசினாலோ ஆகாது. உங்களை ரசிக்கணும், வியக்கணும். உன்னோடவே இருக்கிறவகிட்ட உன் பலவீனமும் சேர்ந்து தெரியுதே....எப்படி ரசிப்பா? பொண்டாட்டிய உங்கள சார்ந்தே இருக்க வெச்சிட்டீங்க. புருஷன் இல்லாத பொண்டாட்டி தனியா வாழ வீடு கொடுப்பீங்களா? இத நீங்க தானே உருவாக்கி வெச்சிருக்கீங்க? ஆக, பொண்டாட்டி கவனம் முழுக்க உங்கமேல இருக்கு. ஒரு சின்ன அசைவும் அவளை சந்தேகப்பட வெச்சிடும். திடீர்னு நீங்க அவளைக் கவனிக்கலேன்னு தோணுச்சிடுச்சின்னா உப்பு சப்பு இல்லாத விஷயத்துக்கு வேணும்னு சண்டை போடுவா. ’சண்டை‘ உங்களுக்கு அவமானம் நிம்மதி குலைக்கிற விஷயம். ‘&lt;br /&gt;&lt;br /&gt;மேலோட்டமாகப் பார்த்தால் காதல் கதையாக புரிந்து கொள்ளும் சாத்தியங்கள் உடைய கதை உண்மையில் ஆழ்ந்த தேடல்களின் விதையைத் தன்னுள் ஒளித்து வைத்துக்கொண்டிருக்கிறது. கதையின் மையமாக நான் கருதுவது பாஞ்சாலியின் வெளிப்படையான சாடல்களை. காலம் காலமாக ஆண்களின் மனதில் ஊறிக் கிடக்கும் ஆதிக்க மனப்போக்கு அவன் எழுத்தாளனாக இருந்துவிட்டால் மட்டும் அவனை விட்டு விலகிவிடுவதில்லை என்று கிருஷ்ணனை திட்டுகிறாள். கதையின் முடிவு எதிர்ப்பார்த்த ஒன்றுதான். ராதாவுக்கு வேறு ஒருவனுடன் திருமணம் முடிந்துவிட கிருஷ்ணன் புதிய காதலி ஒருத்தியுடன் தன் மனதிற்கு இனிய ஜிலேபியுடன் பேசிய அதே முன் ஜென்ம விஷயங்களைச் சொல்லிக் கொண்டிருக்கிறான்.&lt;br /&gt;&lt;br /&gt; &lt;br /&gt;தோல்பாவைக்கூத்து நிகழ்த்தும் சூத்திரதாரியாக கதையினூடே அவ்வப்போது கதாசிரியர் தன் இருப்பை உணர்த்துகிறார். சில கதைகளில் தன்னிலையிலும் சிலவற்றில் முன்னிலையிலும் படர்க்கையிலும் பேசி சீட்டுக் கட்டைப் பிரித்துப் போடுவதைப்ப் போல கதைகளை நம்முன் காட்சிப்படுத்துகிறார். எல்லாக் கதைகளிலும் கிருஷ்ணன் தோன்றுகிறான். அவன் இருப்பை உணர்தியும் அழித்தும் இக்கதைகள் மாய வித்தைகளைக் காட்டுகின்றன. முடிவில்லாக் கேள்விகளையும் தீவிரமான தேடல்களையும் பரிசாகக் கிடைக்கச் செய்பவை இத்தொகுப்பு.&lt;br /&gt;&lt;br /&gt; &lt;br /&gt;இக்கதைகளை வாசித்த சில நாட்களில் புரசைவாக்கத்தில் நடந்த கிருஷ்ண பஜனைக் கூட்டத்திற்கு சென்றேன். ‘ஹரே கிருஷ்ணா, ஹரே கிருஷ்ணா, கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே. என்று மீண்டும் மீண்டும் கிருஷ்ண நாமத்தை உச்சரித்துக் கொண்டிருந்தார்கள். மனம் சிறிது நேரம் அதில் லயித்து பஜனையில் திளைத்திருந்தாலும் ஒரு கணத்தில் அனைத்துமே பொய்யாகத் தோன்றியது. இப்போது என் கண்முன்னே தென்படும் மெலிந்த தேகத்தையுடைய வயோதிகர் ஒருவரே உண்மையாகப் பட்டது. மூப்பு, மரணம்...இவற்றை அடையவே இத்தனை பிரயத்தனங்களா? இவ்விதமான உணர்வு இதற்குமுன் இத்தனை ஆழமாக வந்ததில்லையே?”. ‘ஹரே கிருஷ்ணா, ஹரே கிருஷ்ணா, கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே.’ என்று சற்று குரல் ஓங்கி கிருஷ்ணனை ஆராதிக்க ஆரம்பித்தார்கள்.  கடவுள் என்பவன் இருக்கிறானா, கிருஷ்ணன் உண்மையாக இருப்பவனா? பித்து பிடித்துவிடும் நிலையில் மனம் பிறழ்ந்து சற்று நேரம் அங்கேயே செயலற்று அமர்ந்து கொண்டிருந்தேன்&lt;br /&gt;&lt;br /&gt; &lt;br /&gt;கண்களுக்கு புலப்படாத சித்தனாய் கடவுளை கண்டுபிடித்த எழுத்தாளர் அமிர்தம் சூர்யா எங்கிருந்தோ பார்த்துக் கொண்டிருப்பது போன்ற பிரமை ஏற்பட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;(நன்றி - அகநாழிகை ஜனவரி 2011)&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/748309637854531092-9153223834249276486?l=umashakthi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://umashakthi.blogspot.com/feeds/9153223834249276486/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=748309637854531092&amp;postID=9153223834249276486' title='1 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/748309637854531092/posts/default/9153223834249276486'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/748309637854531092/posts/default/9153223834249276486'/><link rel='alternate' type='text/html' href='http://umashakthi.blogspot.com/2011/02/blog-post.html' title='கடவுளைக் கண்டுபிடிப்பவன் -  கவிஞர் அமிர்தம் சூர்யா'/><author><name>உமாஷக்தி</name><uri>http://www.blogger.com/profile/15892356572198993991</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='21' src='http://1.bp.blogspot.com/-gipY35ryk84/TlTuZmGcnbI/AAAAAAAAA6w/jFm_Na-18o4/s220/umashakthi%255B1%255D.JPG'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/_9vV1GQrxDFE/TVLYRL_eaRI/AAAAAAAAAzA/K9k2y0Axt2Q/s72-c/surya1.jpg' height='72' width='72'/><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-748309637854531092.post-8286746985050339359</id><published>2011-01-23T23:32:00.000-08:00</published><updated>2011-01-23T23:41:18.779-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நிகழ்வு'/><title type='text'>வண்ணதாசன் கடிதங்கள்</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://1.bp.blogspot.com/_9vV1GQrxDFE/TT0s-ye25zI/AAAAAAAAAy0/t-n-xDYVuTY/s1600/vd1.jpg"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 65px; height: 100px;" src="http://1.bp.blogspot.com/_9vV1GQrxDFE/TT0s-ye25zI/AAAAAAAAAy0/t-n-xDYVuTY/s320/vd1.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5565654171714512690" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;16.01.2010 அன்று தமிழ்ச்சங்கமத்தில் “கடித இலக்கியம்” எனும் அமர்வில் ”என்றும் அன்புடன்” என்ற தலைப்பில் வண்ணதாசன் எழுதிய கடிதங்களைப் பற்றிய கட்டுரை வடிவில் என் பதிவு&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அனைவருக்கும் வணக்கம்&lt;br /&gt;&lt;br /&gt;சென்னை சங்கமத்தின் முக்கிய அங்கமான தமிழ்ச் சங்கமத்தில் நமது மதிப்பிற்கும் நேசத்திற்கும் உரிய வண்ணதாசன் ‘எல்லோர்க்கும் அன்புடன்’ எழுதிய கடிதங்களைப் பற்றிப் பேச வாய்ப்பளித்தவர்களுக்கு நன்றி!&lt;br /&gt;&lt;br /&gt;நாம் எத்தகைய காலகட்டத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்று யோசிக்கையில் சில சமயம் மனச் சோர்வு ஏற்பட்டுவிடுகிறது. அழகியல் சார்ந்த பல விஷயங்களை நம்மை அறியாமலேயே இழந்து கொண்டிருக்கிறோம். மென் உணர்வுகளையும் ரசனைகளையும் புறம் தள்ளியபடி அதி வேகமாக விரைந்து செல்கின்றது வாழ்க்கை. நமது பால்யத்தில் தெருப் புழுதியில் விளையாடி களித்துள்ளோம். ஆனால் எட்டு அடுக்கு, பத்து அடுக்ககங்களில் வாழும் நம் பிள்ளைகளுக்கு விளையாட வீதிகள் இல்லை. கான்க்ரீட் தரையில் சில குழந்தைகள் ரப்பர் பால் வைத்து கிரிக்கெட் எனும் ஒரே விளையாட்டை விளையாடி சலித்துப் போவார்கள். ராகுலிடம் பேசாதே ரஞ்சித் சரியாக படிப்பவனில்லை என்று பெற்றோர்களே குழந்தைகளிடையே நெருக்கத்தையும் நேசத்தையும் வளரவிடாமல் அவர்களைத் தனிமைச் சிறைப்படுத்துகிறார்கள். நண்பர்கள் அற்ற அவர்கள் சரண் அடைவது கணினியிடம்.  அதில் சாதக பாதங்கள் இருந்தாலும் கணினியின் மாயக்கரங்களில் இன்றைய குழந்தைகள் சிக்கி மயங்கிக் கிடக்கிறார்கள். பாலுவும் சின்னுவும். ப்ரியாவும் அல்ல அவர்களின் தோழமைகள், பென் டென்னும், டோராவும், புஜ்ஜியும் தான். நிஜமற்ற வெளியில் அவர்கள் அலைந்து திரிவது மிகவும் பரிதாபமான ஒரு சூழல்.&lt;br /&gt;&lt;br /&gt;குழந்தைகளிடமிருந்து விளையாட்டைப் பறித்த கணினி இளைஞர்களிடமிருந்து கடிதங்களைப் பறித்துவிட்டது. எல்லாம் மின் மயமாகிவிட்ட உலகில் அஞ்சல்கள் அருகிப் போய்விட்டன. அனைத்தும் மின்னஞ்சல்தான். வரி வரியாக அழகிய அல்லது அழகற்ற கையெழுத்தில் நம் உள்ளத்தை வார்த்தைகளாக எழுதிக் கொட்டிய காலங்கள் போய், உயிறற்ற நான்கைந்து வரிகள் ”ஹாய் டா....எப்படி இருக்கே? டேக் கேர், பை பை” என்று கணினித் திரையில் நலம் விசாரித்துக் கொள்ளும் நிலைதான் தற்போது நிலவுகிறது.  மேலும் தங்களின் மெயில் அக்கவுண்டில் உள்ள chat ல் அரட்டை அடிப்பது, face book எனும் சமூக வலைத்தளத்தில் தனது அப்போதைய மனநிலையை பதிவு செய்வது, (அது விகடனில் வெளியிடப்படலாம் என்ற ஆசையை உள்ளடக்கி) ட்விட்டர் எனும் மற்றொரு தளத்தில் வார்த்தைகளை குறுக்கி தங்களின் கருத்தை பகிர்ந்து கொள்வது என்று மனிதர்களின் பெயர் உள்ளவர்களாகவும், புனைவான பெயர்களுடனும் பெயரிலிகளாகவும் வலம் வநது கொண்டிருக்கிறார்கள். உதிர்ந்து போயின உண்மையான வார்த்தைகள். கண்ணுக்குப் புலப்படும் பக்கத்து வீட்டுக்காரனின் பெயர் கூட தெரியாத ஒருவருக்கும் ஆண்டிப்பட்டியில் ஆரம்பித்து ஆஸ்த்ரேலியா வரை நண்பர்கள் கூட்டம். முரண்பட்ட மனிதர்கள் முரண்பட்ட வாழ்க்கை முறை. யாரும் யாரைப் பார்த்தும் புன்னகைப்பதில்லை. லேசான தலையசைப்பு அல்லது கை அசைப்புக்கள்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;கடிதங்கள் அற்ற வாழ்க்கையில் என்ன சுவாரஸ்யம் இருக்க முடியும்? வீட்டினுள் நுழையும் போதே “எனக்கு எதாவது லெட்டர் வந்திருக்கா” என்று ஆவலுடன் கேட்ட தினங்கள் ஞாபகத்துக்கு வருகிறது. இன்றும் வீட்டுக்கு கூரியர்கள் வரத்தான் செய்கின்றன. ஆனால் அவை பெரும்பாலும் செல்போன் போன் பில்கள், விழா அழைப்பிதழ்கள், வங்கிக் கடன் அட்டைகள், அல்லது அதை அடைக்கச் சொல்லிய நினைவுருத்தல், அல்லது உத்திரகிரியை பத்திரிகை.... இவ்வளவு தான் பெரும்பான்மையினருக்கு தற்போதைய சூழலில் வந்து கொண்டிருக்கும் தபால்கள்.. எழுதப்பட்ட கடிதங்களின் ஊறிக் கிடக்கும் பேனா வாசமும் அனுப்பியவர்களின் பாசமும், வெள்ளைத் தாளின் வாசனையும் இழந்துவிட்ட சோகத்தை என்னவென்று சொல்லி ஆற்றுப்படுத்திக் கொள்ள முடியும்? அற்புதமான எழுத்தாளர்கள் தங்கள் சக படைப்பாளிகளுக்கும், நண்பர்களுக்கும், உற்றவர்களுக்கும் எழுதிய கடிதங்களின் தொகுப்பைப் படித்து மகிழ்வது ஒன்றுமட்டுமே இதற்கான மாற்றாக இருக்க முடியும் என நினைக்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://2.bp.blogspot.com/_9vV1GQrxDFE/TT0s0jRYviI/AAAAAAAAAys/3_m--gbCGOo/s1600/kalyanji.jpg"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 188px; height: 320px;" src="http://2.bp.blogspot.com/_9vV1GQrxDFE/TT0s0jRYviI/AAAAAAAAAys/3_m--gbCGOo/s320/kalyanji.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5565653995832786466" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கல்யாண்ஜியின் கவிதைகள் வசீகரிக்கும்; வண்ணதாசனின் கதைகள் நெகிழ்ச்சியின் உச்சத்தைத் தொட வைக்கும். இதை எல்லாம் தாண்டி கல்யாணி.சி யின் கடிதங்களை நம்மை கனிய வைக்கும், கரைந்து காணாமல் போகச் செய்யும். இக்கடிதங்களை அவர் பேனாவினால் மட்டும் எழுதியிருக்கவில்லை, தனது அனுபவங்களின் ரேகையிலிருந்து ஒவ்வொரு வரிகளையும்  சுரண்டி எடுத்து எழுதியிருக்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;என்றும் மாறாத அன்புடன் வண்ணதாசன் முப்பத்தி மூன்று பேர்களுக்கு எழுதிய தனிப்பட்ட கடிதங்களின் தொகுப்பு இந்நூல். அந்த முப்பத்து மூன்று பேரும் முப்பத்து முக்கோடி தேவர்களின் பேரு பெற்றவர்கள், அதில் ஒன்றாக நாம் இருந்திருக்கக் கூடாதா என்று ஏங்க வைக்கும் கடிதங்கள் அவை. வாழ்வின் மீதும், மனிதர்கள் மீதும் வண்ணதாசனுக்கு இருக்கும் நம்பிக்கையும் தீராக்காதலும் ஒவ்வொரு சொல்லிலும் கண்ணாடி போன்று தெரிகிறது. சக உயிர்கள் மீதான அன்பும் அக்கறையும் அவர் எழுத்தை உயிரோட்டமாக்குகிறது. வெவ்வேறு காலகட்டங்களில் அவரது மனநிலையை, அவரைச் சுற்றி நடந்த நிகழ்வுகளை, (மற்றவர்களுக்கு அவை முக்கியமற்ற நிகழ்வுகளாகவோ அல்லது நிகழ்வே அற்றவைகளாகவோ இருக்கலாம், வண்ணதாசனைப் பொருத்தவரை நிலாப் பார்த்தலும், பூ உதிர்தலும், பூனைக் குட்டிகள் தொலைவதும் எல்லாமே நிகழ்வுகள் தான்) உதிரும் பூக்களுக்காக பதறும் கலைஞன் வண்ணதாசன். தொலைக்கப்பட்ட பூனைக வழியில் தென்படுமா என்று வழிநெடுகத் தேடிச் செல்லும் ஈர நெஞ்சம் அவருடையது. வள்ளலார் வாடிய பயிரைக் கண்டபோது வாடினார், வண்ணதாசன் பூக்கும் பூக்களில் எல்லாம் மலர்ந்து கொண்டிருக்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;வண்ணதாசன் தனக்கான மனிதர்களுக்கு மட்டும் கடிதம் எழுதியிருந்தாலும், பெயரையும் ஊரையும் அழித்துவிட்டு அக்கடிதங்களைப் படித்தால் அது அனைவருக்குமான கடிதமாக மாறிவிடும். இதுவே அக்கடிதங்களின் தனிச் சிறப்பு. ஆங்கிலத்தில் “Aesthetic intelligence” என்று சொல்லுவார்கள். அதன் உதாரணமாக வண்ணதாசன் ஒருவரை மட்டும் தான் சொல்ல முடியும். அவரது உள்மன அடுக்குகளில் பொங்கிப் பிரவாகம் எடுக்கும் பேரன்பும் பெரும் கருணையும் தன்னைச் சுற்றி இயங்கிக் கொண்டிருக்கும் உலகில் படிந்து அனைவரின் மீதும் வழுந்தோடுகிறது. மின்சார கம்பியில் நிற்கும் காக்கை முதல் வேகமாக ரயில் தண்டவாளத்தை கடக்கும் மனிதர்கள் வரை அவர் கவலைப்படும் உயிர் இனங்கள் கொஞ்ச நஞ்சமல்ல. அழகியலும், ரசனையும், மென் மனதும். நுண் உணர்வுகளும் நிறைந்த நிகறற்ற கலைஞன் தன் வாழ்வை தனக்கு விருப்பமான வகையில் வரைந்து வைத்து அதை ‘இன்னொரு கேலிச் சித்திரம்’ என்கிறான். வண்ணதாசன் போன்றவர்கள் நம்மிடையே இருக்கத் தான் செய்கிறார்கள். நாம்தான் பஸ்ஸைப் பிடிக்க, ரயிலை பிடிக்க விமானத்தைப் பிடிக்க என ஓடித் திரிகிறோம். அவரைப் போன்ற ஒருவரை தெரிந்து கொள்ளாமல் இருப்பதில் அவருக்கு எவ்வித இழப்பல்ல, அது காலத்தின் இழப்பு. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கடிதங்களை வாசிக்கையில் அங்கங்கே தட்டுப்படுகின்றன சில மரணத்ச் செய்திகள். ஆதவன், கங்கை கொண்டான், ஆறுமுகம் என வண்ணதாசனின் ப்ரியத்துக்கு உரியவர்களின் மறைவு அவரை உலுக்கி எடுத்திருக்கிறது. அம்பைக்கு அவர் எழுதியிருக்கும் கடிதமொன்றில் “மரண பயமல்ல, மரணம் ஏற்படுத்தும் வெற்றிடம் சுழல்களை உண்டாக்கக் கூடிய வல்லமை உடையது” என்கிறார். எத்தகைய உண்மை இது? நேற்று இரவு நம்முடன் தொலைபேசியில் உரையாடியவர் இன்று அதிகாலை மாரடைப்பில் இறந்து போய்விடும் நிச்சயமற்ற இவ்வுலக வாழ்க்கையில் எதை தூக்கி நிறுத்த நாமெல்லாம் ஓடிக் கொண்டிருக்கிறோம் எனும் கேள்வியையும் இனம் தெரியாத ஒரு வெறுமையையும் அவ்வரிகளை வாசித்தபோது ஏற்பட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;”என் வானத்தின் சாயல் எனக்குத் தெரியாதா” என்ற அவரின் எழுத்தைப் படிக்கும் போது நமக்குள் ஏற்படும் மனச் சித்திரத்தை வார்த்தைகளின் துணை கொண்டு எப்படி வரைந்துவிட முடியும்? கடிதத்தின் சில வரிகள் கவித்துவமாகவும், சில இயல்பான இனிமையுடனும், சில எள்ளலுடனும், ரசனையில் ஊறித் திளைத்து உள் மனதில் ஏதேதோ நெகிழ்வுகளை நிகழ்த்தி விடுகிறது. மேலும் ஒவ்வொரு கடிதத்தையும் படிக்கையில் எழுதப்படுகிறவர் தன்னை விட வயதில் இளையவராக இருந்தாலும் மரியாதையாக ”நீங்கள்” என்றே விளிக்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;வண்ணதாசனின் கடித வரிகள் சில :&lt;br /&gt;&lt;br /&gt;கைவல்யம் எனும் நண்பருக்கு வண்ணதாசன் எழுதுகிறார் “மிகச் சிறு பொழுதே எனினும் உங்களுடன் இருக்க முடிந்த நேரம் அருமையானது. அந்தப் பொழுதை ஏந்திக் கொண்டே அந்த நாள் முழுவதும் அலைந்தேன்”  எப்பேர்ப்பட்ட மனம் இது! அந்தக் கணத்தை எப்படி உணர்ந்திருப்பாரோ அதை அப்படியே வார்த்தையில் எப்படி அவரால் மட்டும் சொல்ல முடிகிறது? தன் உள்ளொளியின் வெளிச்சத்தில் அவர் காணும் மனிதர்களுக்கும் முழுவதுமான வெளிச்சத்தை தெளித்துச் செல்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;ஞானிக்கு எழுதிய கடிமொன்றில்,&lt;br /&gt;&lt;br /&gt;“அவர் என் எழுத்துக்களைப் பாராட்டியதை என்னால் மறந்துவிட முடியும். ஆனால் அந்த உள்ளங்கைகளை மறந்துவிட முடியாது. இன்னும் எழுதாத ஒரு வரிக்கான தூண்டுதலைத் தர வல்லது இது போன்ற உள்ளங்கைகளே இருக்கின்றன”  எத்தகைய பிரியம் இது! உள்ளங்கையில் அன்பின் பரிமாற்றத்தை உணர்ந்து அதையே தனது எழுத்தின் source of inspiration ஆக உணர்ந்து வண்ணதாசனை இயங்கச் செய்கிறது. அசலான கலைஞன் இப்படித்தான் இருப்பான். அவன் நகல் எடுக்க உள்ளங்கைச் சூடு மட்டும் போதுமானது!&lt;br /&gt;&lt;br /&gt;அய்யனாருக்கு எழுதுகையில் “மனிதர்களை சம்பாதிப்பதற்காக முதலில் ஓடுங்கள், சம்பாதிப்பதற்காக அப்பறம் ஓடுங்கள். ஒன்றுடன் ஒன்று சம்பந்தப்படுகிற புள்ளியின் சூட்சுமம் பிடிபடுகிறபோது நீங்கள் வெற்றி பெற ஆரம்பிக்கிறீர்கள்” என்கிறு எழுதுகிறார். அப்போது இளம் படைப்பாளியாக இருந்த அய்யனாருக்கு மட்டும் இல்லாமல் அனைவருக்கும் இது பொருத்தமான வரிகள். தகப்பனைப் போன்ற பரிவுடன் புதிதாக எழுத வருபவனின் தோளை மிக மென்மையாகத் தட்டி ‘கவலைப்படாதே நீ ஜெயித்துவிடுவாய்” என அதிராத வார்த்தைகளின் மூலம் ஆர்வமூட்டுகிறார்.  &lt;br /&gt;&lt;br /&gt;ரமேஷ் என்பவருக்கு வண்ணதாசன் எழுதிய கடித வரிகளில் ரமேஷுக்கு சில options தருகிறார். அது நமக்குமானது.&lt;br /&gt;&lt;br /&gt;”எழுதாவிட்டால் பரவால்லை. வரையுங்கள், வரையாவிட்டால் பரவாயில்லை படியுங்கள், படிக்காவிட்டால் பரவாயில்லை பழகுங்கள் (இவர் பழகச் சொல்வது வேறு “வாங்க பழகலாம் என்று தமிழ்ச் சினிமாவில் சொல்லப்பட்ட பழக்கம் அல்ல) ஏதோ ஒரு வகையில் மனதின் கதியில் இயங்கிக் கொண்டிருங்கள். அதுவே போதுமானது’ எளிமையாகச் சொல்லப்பட்டிருந்தாலும் இது மிகவும் ஆழமான பார்வை. நாம் இயங்கிக் கொண்டிருக்காவில்லை என்றால் முடங்கிப் போவோம். &lt;br /&gt;&lt;br /&gt;கி.ரா மாமா என்று அன்புடன் விளித்து அவருக்கு வண்ணதாசன் எழுதிய கடிதம் ஒன்றில் சுய எள்ளல் கலந்திருக்கிறது “என்னைப் போல அவ்வளவு கெட்டிக்காரத்தனமும் சூட்டிகமும் இல்லாத ஆண்பிள்ளைகளுக்கு’ என்கிறார். கெட்டிக்காரத்தனம் என்ற பதத்திலேயே லேசான ஒரு சூழ்ச்சி தென்படுகிறது. அகம் மலர்ந்த வண்ணதாசனுக்கு அத்தகைய வெளியுலகக் கலைகள எளிதில் வராமல் போனதில் ஆச்சரியம் ஏதும் இல்லை. அவரைத் தொடர்ந்து நானும் கனவுலகவாசியே. எங்கள் உலகில் வஞ்சக மனிதர்கள் கிடையாது, இருந்தாலும் எங்களை எளிதில் நெருங்கிவிட முடியாது. எல்லோர்க்கும் புன்னகையை பரிசாக்கிவிட்டால் விஷம் தோய்க்கப்பட்ட முட்கள் புதைந்துவிடும்தானே?&lt;br /&gt;&lt;br /&gt;இப்படி ஒவ்வொரு கடிதமாக சொல்லிக் கொண்டே போகலாம். கால நேரம் கருதி தொகுப்பில் கடைசியாக கவிஞர் இளையபாரதிக்கு எழுதியுள்ள கடித வரிகளை வாசித்து நிறைவு செய்கிறேன். “எந்தக் கதவு எப்போது திறக்கம் என்று தெரியாத ரகசியத்தின் சுவாரசியத்தில்தான் இந்த வாழ்வின் பந்தயம் நிகழ்ந்து கொண்டே இருக்கிறது.” என்றும் “ஏதோ ஓர் அன்பின் மாயத்தை நீங்கள் நிகழ்த்தி இருக்கிறீர்கள்” என்றும் “ஒரு ஓவியம் பூரணம் அடைகிற போது அது வரைந்த ஓவியன் முன்பிருந்ததை விடவும் பூரணம் அடைகிறான். நான் இந்தச் சிறுகதைகளை எழுதிய போதெல்லாம் பூரணம்டைந்திருக்கிறேன். அல்லது என் ரணங்கள் குறைந்திருக்கின்றன. &lt;br /&gt;&lt;br /&gt;மிகவும் நெகிழ்ச்சியான தருணங்களை உணர்ந்து அதை வார்த்தைகளின் மீதேற்றி திகட்ட திகட்ட நமக்களிப்பவர் வண்ணதாசன். அலங்காரங்கள் மற்றும் வெளிப்பூச்சுக்கள் அற்ற, எளிய வார்த்தைகளுக்கு எல்லாம் சொந்தக்காரரான இந்த நெல்லைக்காரர் நிஜமாக்வே எனக்கும் சொந்தக்காரர் என்பதில் நான் பெருமிதம் அடைகிறேன். அவர் எனக்கு distant relative என்று சொன்னார்கள், அந்த தூரம் நெல்லைக்கும் சென்னைக்கும் இடையில் தானே தவிர மனங்களில் இல்லை. நினைக்கும் தோறும் மனதில் நெகிழ்வை ஏற்படுத்த அவரைத் தவிர யாரும் இருக்கிறார்களா என்றுத் தெரியவில்லை. என் அப்பாவுக்கு வண்ணதாசன் எழுதிய கடிதமொன்றை பொக்கிஷமாக அவர் பாதுகாத்துவருகிறார். அதன் முதல் வரி இப்படி ஆரம்பிக்கிறது, “நவநீதன், எப்படி உங்களால் மட்டும் போகின்ற வழி எல்லாம் சந்தோஷப் பூக்களை இறைத்துக் கொண்டே செல்ல முடிகிறது?” மாறாப் புன்னகைக்குச் சொந்தக்காரரான என் அப்பாவின் சிரிப்பை மேலும் அகலமாக்கியது இவ்வரிகள்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்நிகழ்ச்சில் பேசுவதற்காக வண்ணதாசனின் கடிதங்களை மீள்வாசிப்பு செய்தபின் யாருக்காவது உடனடியாக கடிதம் எழுதியே தீர வேண்டும் என்ற எண்ணம் மிகத் தீவிரமாய் தோன்றியது. அதை அவருக்கே எழுதி விட்டேன்....இன்று இரவோ, நாளையோ பதில் நிச்சயமாக வரும்.....காத்திருப்பேன்&lt;br /&gt;&lt;br /&gt;நன்றி. வணக்கம்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/748309637854531092-8286746985050339359?l=umashakthi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://umashakthi.blogspot.com/feeds/8286746985050339359/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=748309637854531092&amp;postID=8286746985050339359' title='10 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/748309637854531092/posts/default/8286746985050339359'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/748309637854531092/posts/default/8286746985050339359'/><link rel='alternate' type='text/html' href='http://umashakthi.blogspot.com/2011/01/blog-post_23.html' title='வண்ணதாசன் கடிதங்கள்'/><author><name>உமாஷக்தி</name><uri>http://www.blogger.com/profile/15892356572198993991</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='21' src='http://1.bp.blogspot.com/-gipY35ryk84/TlTuZmGcnbI/AAAAAAAAA6w/jFm_Na-18o4/s220/umashakthi%255B1%255D.JPG'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/_9vV1GQrxDFE/TT0s-ye25zI/AAAAAAAAAy0/t-n-xDYVuTY/s72-c/vd1.jpg' height='72' width='72'/><thr:total>10</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-748309637854531092.post-5848675136318323885</id><published>2011-01-02T11:08:00.000-08:00</published><updated>2011-01-02T11:15:23.195-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='வாசிப்பு'/><title type='text'>வெயில் தின்ற மழை</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://3.bp.blogspot.com/_9vV1GQrxDFE/TSDNgARYTJI/AAAAAAAAAxo/RImZfUYXAxQ/s1600/book-veyilnila.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 130px; height: 190px;" src="http://3.bp.blogspot.com/_9vV1GQrxDFE/TSDNgARYTJI/AAAAAAAAAxo/RImZfUYXAxQ/s320/book-veyilnila.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5557667889887595666" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;”வெயில் தின்ற மழை” நிலாரசிகனின் கவிதை நூலில் தலைப்பே வாசகனை கவிதைக்குள் இழுத்துச் செல்லும் மந்திரச் சொல்லாக இருக்கிறது. &lt;br /&gt;&lt;br /&gt;தனிமையும் அது தரும் தீரா துயரும் மனிதகுலத்திடமிருந்தே சிலசமய்ம நம்மை விலகிப் போகச் செய்வதாக இருக்கிறது. ஆனாலும் தனிமையின் ருசியை உணர்ந்துவிட்டால் விட்டு விலகுவதும் சாத்தியமன்று. இக்கவிதைகளில் பெரும்பான்மையானவை தனித்த மனதொன்று சில வார்த்தைகள் மூலம் தன் இறுக்கத்தை களைய முயல்கின்றது. அலைக்கழிக்கப்படும் ஆத்மாவின் துயரை கவிதை வரிகளாக்குகிறான் இக்கவிஞன். &lt;br /&gt;&lt;br /&gt;’வெயில் தின்ற மழை’யில் சிறுவர்கள் உலகமும் அழகாக விரிந்திருக்கின்றது. கனவுகள், தேவதைகள், நட்சத்திரா, கடல் என்று இயற்கை தனக்குள் நிகழ்த்திக் காட்டும் பரவசத்தை, ஆச்சரியங்களை, அழகாகப் படம் பிடித்துள்ளார். &lt;br /&gt;&lt;br /&gt;சில வரிகளை வாசிக்கையில் அவற்றை கடந்து போக முடியாமல் கவனம் முழுவதும் அங்கேயே மூழ்கிவிடுகிறது. உதா &lt;br /&gt;&lt;br /&gt;“நீ நகர்ந்த பின்னும்&lt;br /&gt;பிம்பங்களை காண்பிக்கிறது&lt;br /&gt;கண்ணாடி”&lt;br /&gt;&lt;br /&gt;இவ்வரிகளின் ஆழம் ஸ்தம்பிக்க வைக்கிறது. எதிலிருந்து விலகி விட்டாலும் விலகாத மனதங்கே புலப்படுகிறது. &lt;br /&gt;&lt;br /&gt;”குளிரில் நடுங்கும் நாய்க்குட்டிகளின்&lt;br /&gt;கதறல்களை நீ&lt;br /&gt;கேட்கவில்லை”&lt;br /&gt;&lt;br /&gt;மேலோட்டமாக வாசிக்கையில் இது ஜீவகாருண்ய விஷயம் போல இருந்தாலும் இவ்வரிகள் நிராகரிக்கப்பட்ட் ஒரு மனிதனின் அதிகப்பட்ச அலறலாக செவிக்குள் ஒலிக்கிறது.   “ஒரு பறவை உதிர்த்துச் சென்ற இறகை நனைத்துக் கொண்டே இருக்கிறாள் மழைப்பெண் என முடிகிறது அக்கவிதை. மனதை வலிக்கச் செய்யும் பல கவிதைகளை நிலாரசிகனால் அனாயசமாக எழுதிச் செல்ல முடிகிறது. &lt;br /&gt;&lt;br /&gt;மாய எதார்த்தவாத கதைகளை வாசித்திருக்கிறோம். கவிதைகளில் அதை சாத்தியப்படுத்தியிருக்கிறார் நிலா. இவரின் சில கவிதைகள் வேறு ஒரு உலகிற்குள் நம்மை பிரவேசிக்கச் செய்கின்றன. முற்றிலும் மாயத்தன்மை வாயந்த அவ்வெளிகளில் நமக்கு சில சிற்குகள் பரிசாகக் கிடைக்கின்றன. &lt;br /&gt; &lt;br /&gt;"பழுத்த மஞ்சள் இலைகளை&lt;br /&gt;ஒடித்துப்போடுகிறாள் வனத்தை&lt;br /&gt;சுத்தம் செய்வதாக திரியும்&lt;br /&gt;பாவனைப்பெண்.&lt;br /&gt;பச்சை இலைகள் துயர்மிகுந்த&lt;br /&gt;தலையசைப்புடன் &lt;br /&gt;விடைகொடுக்கின்றன.&lt;br /&gt;இளைப்பாற இலைதேடும்&lt;br /&gt;&lt;br /&gt;வண்ணத்துப்பூச்சிகள் &lt;br /&gt;வீழ்ந்து மரித்த மஞ்சள்&lt;br /&gt;இலைகள் மீது வந்தமர்கின்றன.&lt;br /&gt;பாவனைப்பெண்ணின் உடல்&lt;br /&gt;கணப்பொழுதில்&lt;br /&gt;நிறமிழந்து மண்ணில்&lt;br /&gt;சரிகிறது.&lt;br /&gt;அவள் உடலுக்குள்ளிருந்து&lt;br /&gt;வெளியேறுகின்றன &lt;br /&gt;அடர் மஞ்சள் நிற வண்ணத்துப்பூச்சிகள்."&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இக்கவிதையில் அடர்ந்த மஞ்சள் நிற வண்ணத்துப்பூச்சிகள் படிமம் எத்தனை விதமான மன உணர்வுகளை நமக்குத் தருகின்றது என வரையறுத்துச் சொல்ல முடியவில்லை.&lt;br /&gt;மிகவும் பிடித்த கவிதைகள் எவை என்றால் “என்னைச் சுற்றிய”. மெல்ல மெல்ல ஆட்கொள்கிறது, முதலில் அது நத்தை என்றே, உனக்கான கடைசி, கனவுகள் தகர்த்தெறிந்து (கடைசி நான்கு வரிகள் மிகவும் அற்புதம்) உதிர்ந்த முத்தங்களைப் பொறுக்கும் அந்த நட்சத்திராவை நாம் நேசிக்காமல் இருக்க முடியாது. ‘காயத்தின் ஆழத்தில்’ மழை ருசித்துக் கொண்டிருக்கும், தவிர்த்தலையும் ரசனையுடன், தெரிந்தே நிகழவிருக்கும் பிரிவை, கடல் குடிக்கும் பறவைகள், மூன்று முறை என்னை நான், என அத்தனை கவிதைகளும் அற்புதம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;எல்லாக் கவிதைகளுமே தன்னளவில் நிறைவானதாய் உளளது. கவிஞனின்  உள்மனது தவிப்பும் தகிக்கும் ஒவ்வொரு வரிகளிலும் தெறிக்கிறது. பல கவிதைகள் அனலாய் தகிக்கிறது. கட்டற்ற பிரியமும், களங்கமில்லா பேரன்பும், பெருங்காதலும், அதன் மறுப்பும், கனவுலகில் வசிப்புமாக நிலாரசிகனின் இக்கவிதைத் தொகுப்பு சொல்லில் அடங்காத வாசிப்பானுபவத்தை தருகிறது. அழகியலுடன் கூடிய செறிவான வார்த்தைகள், அலங்காரங்கள் அற்ற நேரடியான கவிதைகள் இத்தொகுப்பின் சிறப்பு. &lt;br /&gt;இத்தொகுப்பினை ஒரே மூச்சில் வாசிக்க நேர்கையில் இது ஒரு நீண்ட கவிதைப் போலத்தான் தெரிகிறது. மேலும் கவிதைகள் எழுதப்பட்ட காலக்கட்டம் ரிசிஷன் பீரியட். அதில் ஏற்பட்ட மன உளைச்சல்களை வேறு விதமாக பதிவு செய்கிறார். &lt;br /&gt;&lt;br /&gt;பிரமிள், ஆத்மாநாம், தேவதேவன், பிரம்மராஜன், விக்ரமாதித்யன், கல்யாண்ஜி, கலாப்ரியா வரிசையில் அமைத்த  சாலையில் நிலாரசிகன்  தனக்கென ஒரு தனித்துவமான கோலத்தை வரைந்து கொண்டுள்ள தொகுப்பாக வெயில் தின்ற மழை அமைந்திருக்கிறது. வாழ்த்துகிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;(வெயில் தின்ற மழை - கவிஞர் நிலாரசிகன், உயிர்மை வெளியீடு, விலை Rs.50)&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/748309637854531092-5848675136318323885?l=umashakthi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://umashakthi.blogspot.com/feeds/5848675136318323885/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=748309637854531092&amp;postID=5848675136318323885' title='7 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/748309637854531092/posts/default/5848675136318323885'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/748309637854531092/posts/default/5848675136318323885'/><link rel='alternate' type='text/html' href='http://umashakthi.blogspot.com/2011/01/blog-post.html' title='வெயில் தின்ற மழை'/><author><name>உமாஷக்தி</name><uri>http://www.blogger.com/profile/15892356572198993991</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='21' src='http://1.bp.blogspot.com/-gipY35ryk84/TlTuZmGcnbI/AAAAAAAAA6w/jFm_Na-18o4/s220/umashakthi%255B1%255D.JPG'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/_9vV1GQrxDFE/TSDNgARYTJI/AAAAAAAAAxo/RImZfUYXAxQ/s72-c/book-veyilnila.jpg' height='72' width='72'/><thr:total>7</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-748309637854531092.post-8407863769699359261</id><published>2010-12-31T08:21:00.000-08:00</published><updated>2010-12-31T09:45:02.102-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நண்பர்களால் ஆனது என் உலகம்'/><title type='text'>ஹாப்பி நியூ இயர் 2011</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://3.bp.blogspot.com/_9vV1GQrxDFE/TR4WdHIaBSI/AAAAAAAAAxg/fx4T55kEL5c/s1600/new-year-greetings-23.jpg"&gt;&lt;img style="float:right; margin:0 0 10px 10px;cursor:pointer; cursor:hand;width: 240px; height: 320px;" src="http://3.bp.blogspot.com/_9vV1GQrxDFE/TR4WdHIaBSI/AAAAAAAAAxg/fx4T55kEL5c/s320/new-year-greetings-23.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5556903679608096034" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://3.bp.blogspot.com/_9vV1GQrxDFE/TR4V93FH3pI/AAAAAAAAAxQ/YoVaehVaZOY/s1600/new-year.gif"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 240px;" src="http://3.bp.blogspot.com/_9vV1GQrxDFE/TR4V93FH3pI/AAAAAAAAAxQ/YoVaehVaZOY/s320/new-year.gif" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5556903142723411602" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;எப்போதும் கேட்டுச் சலித்த வாசகம் இந்த வருஷம் ரொம்ப வேகமா ஓடிருச்சு! எதை எதையோ துரத்திக் கொண்டு நாம்தான் மூச்சிரைக்க ஓடிக் கொண்டே இருக்கிறோம். இந்த ஓட்டம் சற்று நிற்கையில் வாழ்க்கை எங்கோ விலகிக் கிடக்கும். ஆனாலும் வேறு வழியில்லை ஓடித் தான் ஆக வேண்டும், கொஞ்சம் பணத்திற்காகவும், நிறைய புகழுக்காகவும், மேலும் சில வாழும் கணங்களுக்காகவும்....&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://4.bp.blogspot.com/_9vV1GQrxDFE/TR4Vlv3tdKI/AAAAAAAAAw4/1VEMb3AxyhM/s1600/2011.jpg"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 259px; height: 194px;" src="http://4.bp.blogspot.com/_9vV1GQrxDFE/TR4Vlv3tdKI/AAAAAAAAAw4/1VEMb3AxyhM/s320/2011.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5556902728471245986" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இந்த வருடத்தின் கடைசி நாளான இன்று நான் சிலருக்கு நன்றி சொல்ல விரும்புகிறேன். என்னை சகித்துக் கொண்டு, என் அலைக்கழிப்பை எல்லாம் உடனிருந்து பார்த்து செய்வதற்கு ஏதுமின்றி ஆனால் என்னை புரிந்து கொண்டு என்னுடன் எப்போதும் இருக்கும் என் சராவுக்கு, &lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://3.bp.blogspot.com/_9vV1GQrxDFE/TR4WK3M_yYI/AAAAAAAAAxY/Yjh8vvNHCQs/s1600/new-year-greetings-22.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 292px; height: 320px;" src="http://3.bp.blogspot.com/_9vV1GQrxDFE/TR4WK3M_yYI/AAAAAAAAAxY/Yjh8vvNHCQs/s320/new-year-greetings-22.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5556903366094735746" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அம்மா எதோ படிக்கறாங்க, நிறைய எழதறாங்க என்று அவர்களின் சின்னஞ் சிறு மனதின் புரிதலுக்கும், அலுக்காமல் சலிக்காமல் வீட்டை காப்பாற்றி வரும் என் அம்மாவுக்கும், சராவின் அம்மாவுக்கும், நன்றி சொல்வது சிறுசெயல். தினமும் காலையில் குறுஞ்செய்தி அனுப்பும் என் பிரியமான தம்பி சரவணனன் (தம்பியின் பெயரும் சரவணன், சரவணன்களால் ஆனது எனது உலகம்), தினந்தோறும் நெல்லையிலிருந்து போனில் நலம் விசாரிக்கும் இனிய நண்பர் தங்கராஜ், என் பிரியமான சந்திரா, தமிழ்நதி, பாஸ்கர், பாஸ்கர் மனைவி ஈஸ்வரி, ஒவ்வொரு ஆண்டும் சென்னை சங்கமம் நிகழ்ச்சி சமயத்தில் சந்திக்கும்  கவிஞர் இளையபாரதி, சிறுவயது முதல் என் உடன் வெற்றித் தோல்விகளில் என் கரம் பிடித்து என்னை ஆற்றுப்படுத்திய உயிர்த் தோழி கீதாவுக்கும், ஷியாமுக்கும், பாபுவிற்கும் எப்படி நன்றி சொல்வது? வாழ்த்தும் நன்றிகளும் நிறைந்து கொண்டே இருக்கிறது முடியப் போகும் இந்நாளைப் போலவே....&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://1.bp.blogspot.com/_9vV1GQrxDFE/TR4VyoNK2II/AAAAAAAAAxI/nMTypEtkGqY/s1600/new%2B1.jpg"&gt;&lt;img style="float:right; margin:0 0 10px 10px;cursor:pointer; cursor:hand;width: 167px; height: 167px;" src="http://1.bp.blogspot.com/_9vV1GQrxDFE/TR4VyoNK2II/AAAAAAAAAxI/nMTypEtkGqY/s320/new%2B1.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5556902949752068226" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;”அடங்குநாள் இல்லாதமர்ந்தானைக் காணற்கே&lt;br /&gt;தொடங்கு நாள் நல்லதன் றோ- நெஞ்சே&lt;br /&gt;    தொடங்குநாள் நல்லதன் றோ.&lt;br /&gt;&lt;br /&gt;வல்லவா றெல்லாம் வல்லானைக் காணற்கே&lt;br /&gt;நல்லநாள் எண்ணியநாள் - நெஞ்சே&lt;br /&gt;     நல்லநாள் எண்ணிய நாள்.&lt;br /&gt;&lt;br /&gt;காலங்கடந்த கடவுளைக் காணற்குக்&lt;br /&gt;காலங் கருதுவ தேன் - நெஞ்சே &lt;br /&gt;     காலங் கருதுவ தேன். &lt;br /&gt;                 ( திருஅருட்பா)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://1.bp.blogspot.com/_9vV1GQrxDFE/TR4VqKWwIjI/AAAAAAAAAxA/Nzdbn-C4_HQ/s1600/Happy%2BNew%2BYear%2B2011_32573.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 240px;" src="http://1.bp.blogspot.com/_9vV1GQrxDFE/TR4VqKWwIjI/AAAAAAAAAxA/Nzdbn-C4_HQ/s320/Happy%2BNew%2BYear%2B2011_32573.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5556902804300243506" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அனைவருக்கும் மனமார்ந்த புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/748309637854531092-8407863769699359261?l=umashakthi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://umashakthi.blogspot.com/feeds/8407863769699359261/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=748309637854531092&amp;postID=8407863769699359261' title='3 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/748309637854531092/posts/default/8407863769699359261'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/748309637854531092/posts/default/8407863769699359261'/><link rel='alternate' type='text/html' href='http://umashakthi.blogspot.com/2010/12/2011.html' title='ஹாப்பி நியூ இயர் 2011'/><author><name>உமாஷக்தி</name><uri>http://www.blogger.com/profile/15892356572198993991</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='21' src='http://1.bp.blogspot.com/-gipY35ryk84/TlTuZmGcnbI/AAAAAAAAA6w/jFm_Na-18o4/s220/umashakthi%255B1%255D.JPG'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/_9vV1GQrxDFE/TR4WdHIaBSI/AAAAAAAAAxg/fx4T55kEL5c/s72-c/new-year-greetings-23.jpg' height='72' width='72'/><thr:total>3</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-748309637854531092.post-6805452571844141067</id><published>2010-12-15T05:28:00.000-08:00</published><updated>2010-12-15T05:39:59.710-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='இவள் புதியவள்'/><title type='text'>அஞ்சலி மேனன்</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://1.bp.blogspot.com/_9vV1GQrxDFE/TQjEffQVMFI/AAAAAAAAAwU/3rhg5GDwhMo/s1600/anja1.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 259px; height: 194px;" src="http://1.bp.blogspot.com/_9vV1GQrxDFE/TQjEffQVMFI/AAAAAAAAAwU/3rhg5GDwhMo/s320/anja1.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5550902585979121746" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அஞ்சலி மேனன் – மலையாளத் திரையுலகம் இந்திய சினிமாவுக்குக் கொடுத்த மற்றொரு முக்கியமான இயக்குனர். பிரித்திவிராஜ் நடித்து அஞ்சலி மேனன் இயக்கியுள்ள ‘மஞ்சாடிகுரு” (2008) எனும் திரைப்படம் சிறந்த மலையாளப் பட வரிசையில் 2008-க்கான ”இண்டர்னேஷனில் ஃபிலிம் பெஸ்டிவல் ஆஃப் கேரளா” (International Film Festival Of Kerala) வில் ”FIPRESCI” எனும் விருது பெற்றது. 2009-ல் நியூயார்க்கில் நடைப்பெற்ற “சவுத் ஏஷியன் இண்டர்னேஷனல் ஃப்லிம் பெஸ்டிவல்” (South Asian International Film Festival)லில்  பங்கு பெற்று க்ராண்ட் ஜூரி விருது பெற்றது. மேலும் அத்திரைப்படம் சிறந்த திரைப்படம், சிறந்த இயக்குனர், சிறந்த திரைக்கதை, சிறந்த ஒளிப்பதிவு மற்றும் சிறந்த வளரும் திறமையாளர் ஆகிய பல விருதுகளை அள்ளிக் குவித்து அஞ்சலிக்கு மிகப் பெரிய பேரையும் புகழையும் அள்ளித் தந்தது. மலையாளத் திரையின் பரிசோதனைப் படமான ’கேரளா காஃபே’யின் (Kerala Café) ஒரு பகுதியான ‘ஹேப்பி ஜர்னி’ (Happy Journey) அஞ்சலி மேனன் இயக்கியிருக்கும் சமீபத்திய திரைப்படம். இத்திரைப்பட வெற்றியும் பெரும் கவனிப்பை அவருக்குக் கிடைக்கச் செய்தது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://4.bp.blogspot.com/_9vV1GQrxDFE/TQjEXZYYSUI/AAAAAAAAAwM/hoSGin2zuPY/s1600/kkcc.jpg"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 318px; height: 159px;" src="http://4.bp.blogspot.com/_9vV1GQrxDFE/TQjEXZYYSUI/AAAAAAAAAwM/hoSGin2zuPY/s320/kkcc.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5550902446963312962" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அஞ்சலி மேனன் கோழிக்கோட்டில் பிறந்து துபாயில் படித்து வளர்ந்தவர். உயர்நிலைக் கல்வி படிக்கும் போது மீண்டும் கோழிக்கோட்டிற்கு திரும்பி வந்தார். அதன் பின் திரைக் கல்வி கற்க புனே, லண்டன் என்று அவரது படிப்பிற்கான தேடல் தொடர் பயணத்தை மேற்கொள்ளச் செய்தது. பூனேயில் திரைப்பட உயர்கல்வியும் அதன்பின் லண்டன் ப்லிம் ஸ்கூலில் இயக்குனர் பயிற்சியும் பெற்றிருக்கிறார். லண்டனில் படிக்கையில் எடிட்டிங், படத் தயாரிப்பில் மற்றும் இயக்கத்திற்கு என எல்லா பாடங்களிலும் டிஸ்டிங்ஷன் (Distintion) வாங்கினார்..&lt;br /&gt;&lt;br /&gt;துபாயில் அஞ்சலியின் கனவு சினிமாவாக இருக்கவில்லை. திரைப்படங்களை பார்ப்பதும், ரசிப்பதும், கருத்துக்களை பரிமாறுவதும் மட்டுமே அவருக்கு விருப்பமான ஒன்று. உயர்நிலைக் வகுப்பில் காமர்ஸை க்ரூப்பை அஞ்சலி எடுத்ததும் தங்கள் குடும்ப பிஸினெஸை அஞ்சலி முன்னெடுத்துச் செல்வாள் என்று பெற்றோர்களும் நண்பர்களும் நினைத்தார்கள். அவர்கள் வீட்டில் பிள்ளைகளை அப்படிச் சொல்லித்தான் வளர்த்தார்கள். அவருக்கேத் தெரியாமல் அஞ்சலியின் உள்மனதிலோ திரைப்படங்களின் மீதான ஈர்ப்பு நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டிருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;அக்காலகட்டத்தில் படிப்பில் மட்டுமன்றி டான்ஸ், ம்யூசிக், ட்ராமா மற்றும் கதைகள், கட்டுரை எழுதுததல் என எல்லாவற்றிலும் சிறப்பாக விளங்கினார்.. பள்ளிப் படிப்பும், எழுத்தாற்றலும், கலையும் அஞ்சலி வளர வளர அவருடன் சேர்ந்தே வளர்ந்தது. பி.காம் பட்டம் பெற்றதும் வீட்டினர் எம்.பி.ஏ படிப்பார் என எதிர்ப்பார்க்க, அஞ்சலி திடீரென்று வேறு முடிவை எடுத்தார். அஞ்சலியின் மாமா அவரிடம் ’உன் மனதின் அடி ஆழத்தில் இருக்கும் ஆசை என்னவோ அதன்படி படி, இருப்பது ஒரு வாழ்க்கை, அதை நமக்கு பிடித்த விஷயங்கள் செய்து வாழ வேண்டும்’ என்று அறிவுறுத்தினார். அஞ்சலிக்கு தன்னுடைய உள்மன விருப்பமான திரைப்படம் கண் முன்னே நிழலாய்த் தெரிய அதை நிஜமாக்க பூனே ப்லிம் இன்ஸ்டியூட்டில் உடனே சேர்ந்துவிட்டார். ஏதோ ஆசைக்கு ப்டிக்கிறாள் போகட்டும் என்று பெற்றோரும் அனுமதி தந்துவிட, பூனே படிப்பை வெகு சிறப்பாக முடித்த பின் குறுகிய காலம் துபாயில் வேலை செய்து தனக்கு தேவையான பணத்தை சேர்த்த பின், சொந்தப் பணத்தில் ”லண்டன் ஃப்லிம் ஸ்கூலில் (London Film School) சேர்ந்து சினிமாவில் தீவிரமாக இறங்கிவிடுவார் என்று எதிர்ப்பார்க்கவில்லை. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;’லண்டன் ஃப்லிம் ஸ்கூலைப்’ பற்றி அஞ்சலி கூறுகையில், ‘திரைப்பட இயக்கத் துறையில், என்னுடைய எல்லா ஆர்வங்களையும் பூர்த்தி செய்து கொள்ள முடிந்தது. லண்டன் ஃப்லிம் ஸ்கூலில், திரைபப்ட இயக்கத்தின் எல்லா நுணுக்கங்களும் கற்றுத் தரப்படுகின்றன. காஸ்ட்யூம் முதல், செட் டிசைன் செய்வது வரை, திரைக்கதையிலிருந்து இயக்கம் வரை என அனைத்து விஷயங்களும் அஞ்சலி தேர்ச்சி பெற்றார். அங்கு அவர் எடுத்த குறும்படம் படிக்கும் போதே பாராட்டும் விருதும் அவருக்குக் கிடைக்கச் செய்தது. அஞ்சலி எடுத்த குறும்படத்தில் எளிமையான கதை. இந்திய இளைஞன் ஒருவன் லண்டனுக்கு புலம் பெயர்ந்து போது அவனுடைய வாழ்க்கையின் முக்கியமான முடிவுகளை அவனைச் சுற்றியுள்ள பெண்களையே எடுக்க விடுகிறான். ஏன் அப்படி செய்கிறான் என்ற திருப்பத்தைக் கொண்ட இக்கதையில் அஞ்சலியின் புதிய கதை சொல்லும் உத்தியும், சிறந்த எடிட்டிங்கும் கவனத்தை பெறச் செய்தது.  &lt;br /&gt;&lt;br /&gt;லண்டனில் பெற்ற முதல் விருதைத் தொடர்ந்து மும்பாயில் ஆரம்பிக்கப்பட்ட அவருடைய சொந்த படக் கம்பெனி “லிட்டில் ப்லிம்ஸ்” சார்பாக அவர் இயக்கிய டாக்குமெண்டி மற்றும் குறும்படங்கள் அனைத்தும் பலப் பல விருதுகளை அவருக்குப் பெற்றுத் தந்தன. &lt;br /&gt;கேரள மீடியாக்களின் கவனம் முழுவதும் அஞ்சலி மேனனின் மீது குவிந்து அவரை மிகவும் கொண்டாடினார்கள். சமீபத்தில் அஞ்சலி இயக்கி மிகவும் கவனம் பெற்ற ’கேரளா காஃபே’யில் அஞ்சலியின் பங்களிப்பைப் பற்றி பேட்டியொன்றில் அவர் கூறியது :&lt;br /&gt;&lt;br /&gt;1. ’கேரளா காஃபே’யின் கான்செப்ட் என்ன?&lt;br /&gt;&lt;br /&gt;பத்து இயக்குனர்கள், பத்து சின்னஞ் சிறு கதைகள், ’பயணம்’ எனும் ஒரே தலைப்பில் உருவான இப்படங்களைத் தனித்தனியாக பார்த்தாலும் புரியும், ஒன்றுடன் ஒன்று மெல்லிய சரடாக இணைக்கும் ஒரு காபி கடையை மையப்படுத்திப் பார்த்தாலும் ரசிக்கபபடும். பார்வையாளருக்கு புது விதமான சினிமாவைக் காட்சிப்படுத்துவதே தயாரிப்பாளர் ரஞ்சித்தின் நோக்கமாக இருந்தது.&lt;br /&gt;எனக்குக் குடுக்கப்பட்ட பகுதியில் எனது ‘லிட்டில் ப்லிம்ஸ்’ சார்பாக ‘ஹேப்பி ஜெர்னி’ (Happy Journey) எனும் குறும்படத்தை நான் இயக்கினேன். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;2.   ‘ஹேப்பி ஜெர்னி’ கதை என்ன?&lt;br /&gt;&lt;br /&gt;மிகச் சிறிய பொறிதான் பெரும்தீயை உருவாக்குகிறது. ஹேப்பி ஜர்னி வெளிப்பார்வைக்கு சாதரணமான கதையாகத் தெரிந்தாலும் காலம் காலமாக இருக்கும் ஆண் பெண் உறவின் அடிப்படையில் உருவாக்கப்பட்டு. கதை நாயகி (நித்யா மேனன்) அலுப்பான வேலை முடிந்து வார இறுதியை கழிக்க கொச்சியிலிருந்து கோழிக்கோட்டிற்கு ஏறுகிறாள். அவளுடைய பக்கத்து சீட்டுக்காரரான பயணி (ஜகதி ஸ்ரீகுமார்) எரிச்சலூட்டும் அளவிற்கு தேவையில்லாமல் பேசுவதும் அவளைத் தொட்டுப் பேச முயற்சிப்பதுமாக நித்யாவை எரிச்சலடைய வைக்கிறார். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://3.bp.blogspot.com/_9vV1GQrxDFE/TQjEoZA3FMI/AAAAAAAAAwc/s3Ubl1SeXGk/s1600/anja2.jpg"&gt;&lt;img style="float:right; margin:0 0 10px 10px;cursor:pointer; cursor:hand;width: 259px; height: 195px;" src="http://3.bp.blogspot.com/_9vV1GQrxDFE/TQjEoZA3FMI/AAAAAAAAAwc/s3Ubl1SeXGk/s320/anja2.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5550902738922443970" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு கட்டத்தில் அவரின் அலப்பறைகளை தாங்க இயலாத நித்யா ஒரு ரகசியத்தை ஜகதியிடம் சொல்கிறாள். அதைக் கேட்டதிலிருந்து அதிர்ந்து போன ஜகதி அவளை பயத்துடனும் ஒரு வித நடுக்கத்துடனும் பார்க்க ஆரம்பிக்கிறார். இப்படி செல்லும் கதையில் நித்யா கூறிய விஷயம்தான் ஹைலைட். தான் ஒரு போராளி என்றும் தனி மனித தற்கொலைப் படை என்றும் நித்யா கூறியிருந்ததால் சராசரி மனிதனான ஜகதி பதைபதைத்துப் போனார். மற்ற பயணிகளை காப்பாற்ற முதலில் அவளுக்கு அட்வைஸ் செய்ய ஆரம்பித்து இறுதியில் தன் ஒருவனாவது தப்பித்தால் போதும் எனும் நிலைக்கு அவள் தள்ளப்பட்ட போது நித்யா பஸ்சிலிருந்து இறங்கி அவரைப் பார்த்து குறும்பாக புன்னகைக்க இத்தனை நேரம் தான் அனுபவித்த துடிப்பு பொய்யான ஒரு விஷயத்திற்கு என அறிந்து அவர் ஆறுதல் அடையும் முன் பஸ் கிளம்பிச் செல்கிறது. இதுதான் கதை. இதை இயக்கிய விதத்தை பலரும் பாராட்டினார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://2.bp.blogspot.com/_9vV1GQrxDFE/TQjE8SAi3wI/AAAAAAAAAws/18qy47TJpsk/s1600/anja4.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 215px; height: 235px;" src="http://2.bp.blogspot.com/_9vV1GQrxDFE/TQjE8SAi3wI/AAAAAAAAAws/18qy47TJpsk/s320/anja4.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5550903080639454978" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;3. ’கேரளா காஃபே’ இயக்க உங்களுக்கு இன்ஸ்பிரேஷனாக இருந்தது என்ன?&lt;br /&gt;&lt;br /&gt;இத்திரைப்படத்தில் தயாரிப்பாளரான ரஞ்சித்தான் என்னைவிட இக்கேள்விக்கு சரியாகவும் சிறப்பாகவும் பதில் சொல்லக் கூடியவர்..ஏன் என்றால் அது முழுக்க முழுக்க அவருடைய ஐடியா, அவர் சொல்லிய கான்செப்டின் கீழ் தான் அத்தனை இயக்குனர்களும் செயல்பட்டோம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://1.bp.blogspot.com/_9vV1GQrxDFE/TQjExZzNuzI/AAAAAAAAAwk/owKXjeEIoJE/s1600/anja3.jpg"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 270px; height: 186px;" src="http://1.bp.blogspot.com/_9vV1GQrxDFE/TQjExZzNuzI/AAAAAAAAAwk/owKXjeEIoJE/s320/anja3.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5550902893752466226" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;4. இத்திரைபப்டத்தில் நடிக நடிகைகளை யார் முடிவு செய்தது?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அந்தந்த படத்தின் இயக்குனர் அவருடைய பகுதியில் நடிப்பவர்களை மட்டும் அல்லாமல் ஒளிப்பதிவாளர், எடிட்டர், இசையமைப்பாளர் என தங்கள் டீமை தாங்களே முடிவு செய்து கொள்ளும் சுதந்திரம் இதில் பணியாற்றிய அனைவருக்கும் இருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;5. ’கேரளா காஃபே’ உங்களுக்கு எவ்விதமாய் அமைந்தது?&lt;br /&gt;&lt;br /&gt;மலையாள திரையுலகிற்கு ’கேரளா காஃபே’ புதிய முயற்சி மட்டுமன்றி முக்கியமான திருப்பமாக அமைந்திருக்கிறது. மேலும் இது நான் இயக்கி முதல் முதலில் வெளிவந்த திரைப்படம். அவ்வகையில் இதில் நானும் பங்கு பெற்றிருப்பது எனக்கு சந்தோஷம் கலந்த பெருமை தந்தது. இன்னும் சொல்லப் போனால் மற்ற ஒன்பது கதைகளை இயக்கியவர்கள் எனக்கு மிகவும் பிடித்த இயக்குனர்கள் ஆவார்கள். லால் ஜோஸ், ஷாஜி கைலாஷ், ரேவதி, ஷியாம் பிரசாத், அன்வர் ரஷீத், உண்ணி கிருஷ்ணன், பத்மகுமார், ஷங்கர் ராமகிருஷ்ணன், உதய் அனந்தன் மற்றும் அஞ்சலி மேனனாகிய நான் ஆகிய பத்து பேரும் ஒன்றாகச் சேர்ந்து வேலை செய்தது சந்தோஷமாக இருந்தது. இதை சாத்தியப்படுத்திய தயாரிப்பு நிறுவனமான கேப்பிடல் தியேட்டர்ஸ்க்கு என் மனமார்ந்த நன்றி. &lt;br /&gt;&lt;br /&gt;6. கேரளா காஃபே இயக்குனர்களின் திரைப்படம் என சொல்லலாமா?&lt;br /&gt;&lt;br /&gt;ஆமாம்.. இது இயக்குனர்களின் திறமையைக் கொண்டாடும் விதமான கான்செப்ட் கொண்ட படம். இதில் இயக்குனர்  தலைமைப் பொறுப்பெடுத்து கதையை தனித்துவமான காட்சிகளின் மூலம் முன்னெடுத்துச் செல்லும் கேப்டனாக செயல்படுகிறார். ஒவ்வொரு இயக்குனரின் தனித்திறமை இதில் வெளிப்பட்டுள்ளது. நிச்சயமாக இது இயக்குனர்களின் திரைப்படம் என்றே சொல்லலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தற்போது மும்பாயில் ”The Little films” என்ற கம்பெனி ஆரம்பித்து தனக்கு மிகவும் பிடித்தமான சினிமாத் துறையில் முழுமூச்சாக இயங்கிவருகிறார் அஞ்சலி. அவர் இயக்கவிருக்கும் அனைத்துப் படங்களும் கேரளாவில் மட்டுமல்லாமல் உலகளாவிய புகழ்ப் பெற்று இந்தியாவிற்கு பெருமை சேர்க்க வாழ்த்துவோம்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/748309637854531092-6805452571844141067?l=umashakthi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://umashakthi.blogspot.com/feeds/6805452571844141067/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=748309637854531092&amp;postID=6805452571844141067' title='4 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/748309637854531092/posts/default/6805452571844141067'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/748309637854531092/posts/default/6805452571844141067'/><link rel='alternate' type='text/html' href='http://umashakthi.blogspot.com/2010/12/blog-post_15.html' title='அஞ்சலி மேனன்'/><author><name>உமாஷக்தி</name><uri>http://www.blogger.com/profile/15892356572198993991</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='21' src='http://1.bp.blogspot.com/-gipY35ryk84/TlTuZmGcnbI/AAAAAAAAA6w/jFm_Na-18o4/s220/umashakthi%255B1%255D.JPG'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/_9vV1GQrxDFE/TQjEffQVMFI/AAAAAAAAAwU/3rhg5GDwhMo/s72-c/anja1.jpg' height='72' width='72'/><thr:total>4</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-748309637854531092.post-4773553196370840099</id><published>2010-12-06T12:18:00.000-08:00</published><updated>2010-12-06T12:25:57.156-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அனுபவம்'/><title type='text'>மழை மழை மட்டுமே</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://1.bp.blogspot.com/_9vV1GQrxDFE/TP1FYL8ZGqI/AAAAAAAAAvc/2tpfb06cQVg/s1600/Rainy%2BDay%2Bon%2Bthe%2BCoast.JPG"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 240px;" src="http://1.bp.blogspot.com/_9vV1GQrxDFE/TP1FYL8ZGqI/AAAAAAAAAvc/2tpfb06cQVg/s320/Rainy%2BDay%2Bon%2Bthe%2BCoast.JPG" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5547666597815589538" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நேற்று இரவிலிருந்து இன்று இரவு வரை இடை விடாமல் மழை பொழிந்து கொண்டிருக்கிறது. சில கணங்கள் மழையை ரசித்தேன், சில கணங்கள் மழையில் திளைத்தேன், சில கணங்கள் மழையை மறந்தேன், சில கணங்கள் மழையை வெறுத்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://1.bp.blogspot.com/_9vV1GQrxDFE/TP1FiVlo1RI/AAAAAAAAAvs/cFMsrn3Xx-o/s1600/rainy_day2.jpg"&gt;&lt;img style="float:right; margin:0 0 10px 10px;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 244px;" src="http://1.bp.blogspot.com/_9vV1GQrxDFE/TP1FiVlo1RI/AAAAAAAAAvs/cFMsrn3Xx-o/s320/rainy_day2.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5547666772203197714" /&gt;&lt;/a&gt; &lt;br /&gt;&lt;br /&gt;பல வருடங்கள் கழித்து சென்னையில் இத்தகைய மழையையும் குளிரும் உயிர் வரை ஊடுருவிச் செல்கிறது. ஜன்னலுக்கு வெளியே நேற்றிரவிலிருந்து கேட்டுக் கொண்டிருக்கிற மழை சத்தம் இனிமையின் விளிம்பிலிருந்து வழிந்தோடிக் கொண்டிருக்கிறது. பெரும் காற்றும் கடும் மழையும் அடர்க் குளிரும் நள்ளிரவும் ஏதேதோ எண்ணங்களையும் கற்பனைகளையும் மனதினுள் ஊற்றெடுக்க வைக்கின்றன. வாசித்து முடிக்காத தோப்பில் முகமது மீரானும், ஆலிஸ் மன்றோவும், நாஞ்சில் நாடனும், ஜி.குப்புசாமியும் புத்தக அலமாரியிலிருந்து எட்டிப் பார்த்தனர். அவர்களைச் சமாதானப் படுத்திவிட்டு “Address Unknown” எனும் கிம் கி டுக்கின் திரைப்படத்தைப் பார்க்க ஆரம்பித்தேன். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://2.bp.blogspot.com/_9vV1GQrxDFE/TP1GrRj1KxI/AAAAAAAAAwE/wLDk3iYWomQ/s1600/images2.jpg"&gt;&lt;img style="float:right; margin:0 0 10px 10px;cursor:pointer; cursor:hand;width: 187px; height: 270px;" src="http://2.bp.blogspot.com/_9vV1GQrxDFE/TP1GrRj1KxI/AAAAAAAAAwE/wLDk3iYWomQ/s320/images2.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5547668025252326162" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இத்திரைப்படத்தில் எந்த மிருகத்தை வதைக்கவில்லை என்று டைட்டில் கார்ட் போடுகிறார்கள். ஆனால் படம் முழுக்க மிருகங்கள் மட்டுமல்லாது மனிதர்களும் வதைக்கப் படுகிறார்கள். சிற்சில கதாபாத்திரங்களே நிறைந்த இத்திரைப்படத்தில் ஒவ்வொரு காட்சியும் வலி சொல்கிறது, கற்பனைக்கு எட்டாத வன்முறையை கிம்மினால் மட்டுமே காட்சிப்படுத்த முடியும். இளமை ததும்பும் ஒற்றைக் கண் மட்டுமே உடைய கதை நாயகி, அவளை நேசிக்கும் வாய் பேச காது கேளாத இளைஞன், கால் ஊனமுற்ற கிராமத்து மனிதர்கள் சிலர் என்று கதையில் போரின் பாதிப்பில் உடல் ஊனமுற்றவர்கள் ஏதோ ஒரு வகையில் தங்களை மறைத்துக் கொண்டும் தங்கள் ஊனத்தைக் கடக்க விரும்பியும் வாழ்கிறார்கள். வெள்ளையனான தந்தை வெளியூரில் இருக்க, அவனுக்கு பதில் வராத கடிதங்களை அனுப்பிக் கொண்டிருக்கும் மத்திய வயது தாயை வெறுக்கும் மகன். அவனை கையில் வைத்துத் தாங்கும் அவள் அவன் கண் பார்வைக்கு மறைந்ததும் பழைய காதலனிடம் அடிக்கடி சோரம் போகிறாள்.  இதை அறிந்த அவன் ஒரு நாள் தன் முதலாளியான அம்மாவின் காதலனை கொன்றுவிட்டு பெற்ற தாயின் முலையை கத்தியால் அவள் கதறக் கதற அறுத்து எறிகிறான், அவளுக்கு அப்படியொரு கொடுமை செய்துவிட்டு அதே வேகத்தில் வண்டியை ஓட்டி வரும் போது விபத்துக்குள்ளாகி தலைகீழாக விழுந்து நாற்று நட வைத்துள்ள ஈர மண்ணுக்குள் புதைந்து இறந்து விடுகிறான். கால்கள் மேலே தூக்கிக் இருக்க உடல் நிலத்தினுள் மூழ்கி அச்சடலம் மழையிலும் குளிரிலும் உறைந்து போய் விடுகிறது. ரத்தம் தோய்ந்த மார்புடன் தேடிவரும் தாய் இறந்த மகனைப் பார்த்து கதறி அழுகிறாள். அந்தக் குளிரில் பனி பெய்திருக்கும் சாலையில் மண்வெட்டியை எடுத்து வந்து முதலில் மகனின் சிதைக்கு எரியூட்டி விட்டு மீதமுள்ள எலும்புகளையும் ஷூக்களையும் வண்டியில் ஏற்றிச் செல்கிறாள்.   ஒரு கட்டத்தில் படத்தை பார்க்க முடியாமல் அமர்த்தி விட்டு மீண்டும் பாதி முடித்திருந்த புத்தகத்தை வாசிக்க ஆரம்பித்தேன். ஏனோ வாசிப்பில் மனம் லயிக்காமல் ஏதோ ஒருவித தனிமைக் குழிக்குள் விழுந்துவிட்டது. உலகமே அமைதியான ஆழ் உறக்கத்தின் பிடியில் இருக்க,  நான் மட்டும் கொட்டும் மழைத் துளிகளின் சத்தம் கேட்டபடி படுத்திருந்தேன். ஏதோ ஒரு புள்ளியில் அனைத்தும் மறைந்துவிட உறக்கத்தின் மென்பிடிக்குள் என்னை ஒப்படைத்தேன். அதன் பிறகான கனவுலகில் மழையிருக்கவில்லை. ஆனால் நனையப் போகிறவர்களுக்கு பெயறற்ற தேவதைகள் குடைகள் கொண்டு வந்து தருகின்றனர். நானும் மஞ்சள் நிறத்திலான குடையொன்றினை மிகுந்த நன்றியுடன் பெற்றுக் கொண்டேன். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://1.bp.blogspot.com/_9vV1GQrxDFE/TP1GfqFPtAI/AAAAAAAAAv8/uhgHLNqz1IA/s1600/Yellow_Umbrella_by_sneekie_fochs.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 214px;" src="http://1.bp.blogspot.com/_9vV1GQrxDFE/TP1GfqFPtAI/AAAAAAAAAv8/uhgHLNqz1IA/s320/Yellow_Umbrella_by_sneekie_fochs.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5547667825676497922" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;காலை வெகு நேரம் கழித்து விழித்தபின் குழந்தைகள் இன்னும் தூங்கிக் கொண்டிருக்க பால் பாக்கெட் வராததால் வரக் காப்பி போட்டுக் குடித்தேன். மழை இன்னும் விடவில்லை. இறுகச் சாத்தியிருந்த ஜன்னல் கதவுகளைத் திறந்து பார்த்தேன். வானத்திற்கும் பூமிக்கும் ஏதோ கம்பி இணைப்பை ஏற்படுத்தியது போல் மழை விடாமல் தூறிக் கொண்டிருந்தது. பூமி குளிர்ந்து, தரையெல்லாம் பாதம் வைக்க முடியாமல் குளிர் பரவியது. தேனீரின் உடலில் சிறிது கதகதப்பை ஏற்றிக் கொடுக்க, இன்றைய தினம் தொடங்கியது. காலையில் தினப்படி வேலைகளை முடித்துவிட்டு கணினியின் முன் அமர்ந்தேன். முடித்தே ஆக வேண்டிய கட்டுரைகளை அடித்து விட்டு, ஜிமெயிலை திறந்தேன். கூகிள் பஸ்ஸில் கொஞ்ச நேரம் பயணம் செய்துவிட்டு பழைய நண்பர்களுடன் சேட்டில் அரட்டை அடித்தேன். பிள்ளைகளுக்கு நான் வெளியில் போகவில்லை என்றதும் ஒரே குஷி. உமா எனக்கு பேப்பர் போட் செஞ்சித் தா, என்றார்கள். எனக்கு செய்யத் தெரிந்தாலும் மழையில் அவர்கள் நனைவதை தடுக்க, அப்புறம் என்று சாக்குச் சொல்லி தப்பினேன். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://2.bp.blogspot.com/_9vV1GQrxDFE/TP1Fmxy7g9I/AAAAAAAAAv0/HHtQoPTb56A/s1600/RainyDayActivitiesForKids.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 213px;" src="http://2.bp.blogspot.com/_9vV1GQrxDFE/TP1Fmxy7g9I/AAAAAAAAAv0/HHtQoPTb56A/s320/RainyDayActivitiesForKids.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5547666848494617554" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;‘Work at home’ எனும் உடன்பாட்டில் வீட்டிலிருந்து என் வேலைகளை முடித்தேன். வீட்டில் இருக்கும் போது நிறைய நேரம் இருப்பது போன்ற எண்ணம் வருகின்றது. அது மழை நாளோ வெயில் நாளோ, நம் நேரம் முழுக்க நம் கையில்தான். கணினியில் எனக்குப் பிடித்த பாடல்களை சன்னமாக ஒலிக்கச் செய்தேன். ’பொன்னை உயர்வை புகழை விரும்பிடும் என்னைக் கவலைகள் தின்னத் தகாதென்று ....நின்னைச் சரணடைந்தேன்’ பாரதியின் வரிகளிலும் ராஜாவின் இசையிலும் கரைந்தேன். மதியம் மாலை போல இருக்க, மாலை இரவு போல் இருந்தது. தொலைக்காட்சியில் மழைச் செய்திகள், சாலைகள் நீரோட்டமாகி, எங்கெங்கு காணினும் நீர்க்காடாக இருந்தது. எல்லாச் சானல்களிலும் குழந்தைகளின் நண்பர் ரமணன் (பாவம் வானிலை ஆய்வாளர் என்றெல்லாம் யாரும் அவரை அழைப்பதில்லை) மழை அறிக்கை சொல்லிக் கொண்டிருந்தார்.மேலும் ஒரு நாள் பள்ளிகளுக்கு விடுமுறை என்றதும் குழந்தைகள் மகிழ்ச்சியில் மழைக்கும் ரமணனுக்கும் நன்றி சொன்னார்கள். மழை ஓய்வின்றி பெய்து கொண்டிருந்தது, யாரையோ எதன் பொருட்டோ வன்மத்துடனும் ஆவேசத்துடனும் தனக்குத் தெரிந்த மொழியில் திட்டிக் கொண்டிருந்தது. இரவு உணவிற்குப் பிறகு மீண்டும் கணினியின் முன் அமர்ந்தேன். மழை விட்டுவிட்டது. ஆனால் குளிர் உடலை ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. சரா இன்னும் வரவில்லை. அவர் வந்துவிட்டால் கதவை திறந்துவிட்டு விட்டு தூங்கலாம். கதவு தட்டப்படுகிறது. இதோ வந்துவிட்டார். குளிரில் நடுங்கிய பறவையாய் நின்றிருக்க அவசரமாக வென்னீர் போட்டுக் குடுத்தேன். இந்தக் குளிரிலும் தன் விரதத்தை விடாமல் குளித்து முடித்தார். அவரின் உள்ளங்கை கதகதப்பை உணர முடியாமல் தவிக்கும் என்னிடம் அவர் கேட்டது விக்ஸ் மட்டும் எடுத்துக் குடும்மா என்பதே....... ”ஸ்வாமியே சரணம் ஐயப்பா” என்று அவருடன் நானும் ஐயப்பனை தொழுதுவிட்டு உறக்கத்தினுள் வீழப் போகிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://1.bp.blogspot.com/_9vV1GQrxDFE/TP1FcVXYXlI/AAAAAAAAAvk/3t9lug2jAhA/s1600/rainy_day.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 240px; height: 320px;" src="http://1.bp.blogspot.com/_9vV1GQrxDFE/TP1FcVXYXlI/AAAAAAAAAvk/3t9lug2jAhA/s320/rainy_day.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5547666669064183378" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மின்விசிறியின் சப்தம் கேட்காமல் உறங்கப் பிடிக்காத மனது உறக்கத்தினுள் செல்ல மறுக்கிறது ஜன்னலுக்கு வெளியே ஏதேதோ சத்தம் கேட்டு அடங்கி இப்போது எங்கும் எல்லாவற்றிலும் அமைதி நிலவுகிறது. என் மனதில் ஒரு நிமிடமாவது அத்தகைய அமைதி ஏற்பட்டால் எல்லாவற்றையும் துறந்துவிட்டு அப்படியே அதனை நோக்கி சென்றுவிட மனம் விழைகிறது. மகிழ்ச்சியைவிட மேலானது நிம்மதி என்றே உணர்கிறேன்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/748309637854531092-4773553196370840099?l=umashakthi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://umashakthi.blogspot.com/feeds/4773553196370840099/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=748309637854531092&amp;postID=4773553196370840099' title='9 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/748309637854531092/posts/default/4773553196370840099'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/748309637854531092/posts/default/4773553196370840099'/><link rel='alternate' type='text/html' href='http://umashakthi.blogspot.com/2010/12/blog-post_06.html' title='மழை மழை மட்டுமே'/><author><name>உமாஷக்தி</name><uri>http://www.blogger.com/profile/15892356572198993991</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='21' src='http://1.bp.blogspot.com/-gipY35ryk84/TlTuZmGcnbI/AAAAAAAAA6w/jFm_Na-18o4/s220/umashakthi%255B1%255D.JPG'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/_9vV1GQrxDFE/TP1FYL8ZGqI/AAAAAAAAAvc/2tpfb06cQVg/s72-c/Rainy%2BDay%2Bon%2Bthe%2BCoast.JPG' height='72' width='72'/><thr:total>9</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-748309637854531092.post-8146217006634472466</id><published>2010-12-01T10:54:00.000-08:00</published><updated>2010-12-02T00:18:33.633-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சியாவும் சக்திவேலும்'/><title type='text'>சக்திவேல்</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://1.bp.blogspot.com/_9vV1GQrxDFE/TPacC6WJ7uI/AAAAAAAAAvU/2AXkMkoDw_Q/s1600/Image0095.jpg"&gt;&lt;img style="float:right; margin:0 0 10px 10px;cursor:pointer; cursor:hand;width: 240px; height: 320px;" src="http://1.bp.blogspot.com/_9vV1GQrxDFE/TPacC6WJ7uI/AAAAAAAAAvU/2AXkMkoDw_Q/s320/Image0095.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5545791564989198050" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நவம்பர் 22-ம் தேதி ஆறாம் வயது பிறந்த நாளைக் கொண்டாடிய சக்திவேலின் சில தீர்மானங்கள் / டயலாக்குகள் :&lt;br /&gt;&lt;br /&gt;காலை :&lt;br /&gt; &lt;br /&gt;’உமா, (மூடுக்கு தகுந்த மாதிரி அம்மா உமா என்று மாற்றி மாற்றி கூப்பிடுவான்....பெயர் சொல்லும் பிள்ளை!!!!)  ப்ளீஸ் நானே குளிச்சுக்குவேன். நீ எங்க சோப் போடணும்னு கைட் (guide) பண்ணு போதும்.’ ஏண்டா பாப்பா? நான் தான் பெரிய பையன் ஆயிட்டேன்னு நீ சொன்னே இல்லை...நானே குளிக்கறேன். குட் பாய்டா தங்கம்....&lt;br /&gt;&lt;br /&gt;புக்ஸ், பாக்ஸ் எல்லாம் நானே எடுத்து வைச்சுக்குவேன். &lt;br /&gt;&lt;br /&gt;ஸாக்ஸ் நானே போட்டுக்குவேன். ஷூ லேஸ் மட்டும் கட்டிவிடு...&lt;br /&gt;&lt;br /&gt;டிவி பாக்கும் போது மட்டும் ஊட்டி விடு....ஸ்பூன் எல்லாம் வேணாம் அப்படியே சாப்பிடுவேன்....&lt;br /&gt;&lt;br /&gt;ஸ்நாக்ஸுக்கு பிஸ்கெட் வைக்காதீங்கன்னு சொன்னா கேக்கறியா? ஏன்மா ஒரு நாளைக்காவது ஜெம்ஸ் வையேன்....ப்ளீஸ்...&lt;br /&gt;&lt;br /&gt;நிறைய வாட்டர் வைக்காதே....ஒன் பாத்ரூம் நிறைய வருது. சும்மா சும்மா கேட்டா மிஸ் விடமாட்டேங்கறா.....&lt;br /&gt;&lt;br /&gt;அப்பத்தா..(என் மாமியாரிடம்).. இன்னிக்கு லன்ஞ் என்ன வச்சிருக்கீங்க? அப்பளம் வைக்காதீங்கன்னு சொன்னா அதை வைக்கறீங்க, பதத்து போகுதுல்ல...அப்பறம் ஆண்ட் (ant) கு போட்றுவேன். உமா சொல்லியிருக்கா வாய்ல போனா சக்திக்கு கீழே விழுந்தா எறும்புக்குன்னு.....(பதிலுக்கு நான் டேய் தெரியாம கிழே விழ்ந்ததை எடுத்து சாப்பிடக் கூடாதுன்னு அப்படி சொன்னேன். நீ வேணும்னு கொட்டினா உன் தலைலையே கொட்டுவேன்...அப்பத்தாவுக்கு நிறைய வேலை நாளைக்கு உனக்கு பிடிச்ச பீன்ஸ் காய் வைக்கறோம் என்ன?)&lt;br /&gt;&lt;br /&gt;மாலை :&lt;br /&gt;&lt;br /&gt;என் ஷூவுல ஹரிணி மண்ணைக் கொட்டிட்டா, பிதாரி (பிடாரியாம்). நீ என்னடா செஞ்சே என்றால் அவ லன்ஞ் பேக்ல டூவே டூ கல்லை போட்டேன். (அடப்பாவி தப்பு செய்யக் கூடாது என்றால் நேத்து அவள் தள்ளிவிட்டதற்கு என்று சொல்லவே தொடரும் பழிவாங்கல்களின் எண்ணிக்கையை குறைக்க மாரல் ஸ்டோரி சொல்ல ஆரம்பித்தால் விளையாட எஸ்கேப்)&lt;br /&gt;&lt;br /&gt;உமா, தாத்தா வீட்டுக்கு என்னைக் கூட்டிட்டுப் போ, சரிடா...Saturday கூட்டிட்டு போறேன். இல்லை...இப்பவே, இன்னிக்கு ரெய்ன் ஸ்கூல் லீவ், ப்ளீஸ்மா...நீ என் செல்லக்குட்டி இல்லை...டேய் எனக்கு நிறைய வேலை இருக்குடா என்றால், நீ கூட்டிட்டு போ இப்பவே இல்லாக்காட்டி (பள்ளியில் கற்றுக் கொண்ட வார்த்தை) உன் கம்ப்யூட்டரை ஒடைச்சிடுவேன்....இல்லாகாட்டி உன் போனை சிங்க்ல போட்டுவேன் (ஏற்கனவே ஒரு முறை செய்திருக்கிறான்).கெஞ்சுதலில் ஆரம்பித்து மிரட்டலில் தொடர்ந்து ஹைபிட்சில் அழ ஆரம்பித்துவிடுவான். வேறு வழியின்றி என் அப்பாவிடம் அழைத்துச் செல்வேன். ட்ரெயினில் வரும் போது ஸ்டேஷன் பெயர்களை சரியாக சொல்வான். எங்களுடைய நிறுத்தம் வந்ததும் ஆர்வத்துடன் ஸ்டேஷன் வெளியில் வந்து வண்டியில் காத்திருக்கும் தாத்தாவிடம் ஓடோடிச் சென்று முத்த மழை பொழிவான். இந்தக் காட்சியை எத்தனை தடவை பார்த்தாலும் எனக்கு அலுக்காது. &lt;br /&gt;&lt;br /&gt;மாலை நேர மழை நாளில் தாத்தாவும் பேரனும் கேப் (cap) போட்டுக்கொண்டு தெருவில் ஜாலியாக பேசிச் சிரித்து நடந்து போவதை பார்ப்பவர்கள் அதிசயிப்பார்கள். இந்த மழையில் இந்த இருவர் எங்கு செல்லக் கூடும் என்று. இருவரும் சரவணபவனுக்குச் சென்று எதாவது டிபன் சாப்பிட்டுவிட்டு அப்படியே கேக் வாங்கி வருவார்கள். தாத்தா என்றால் சக்திவேலுக்கும் சக்திவேல் என்றால் தாத்தாவுக்கும் உயிர்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://1.bp.blogspot.com/_9vV1GQrxDFE/TPab4YKjP6I/AAAAAAAAAvM/MycdjZGUj0Y/s1600/Image0018.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 240px; height: 320px;" src="http://1.bp.blogspot.com/_9vV1GQrxDFE/TPab4YKjP6I/AAAAAAAAAvM/MycdjZGUj0Y/s320/Image0018.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5545791384015028130" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஒரே டயர்டா இருக்கு....ஆரன்ஞ் ஜுஸ் போடுங்க...வேணாம்டா சளி பிடிச்சிக்கும் போர்ன்விட்டா குடி...ச்சீ அது எனக்குப் பிடிக்காதுன்னு தெரியும் இல்ல...சாக்லேட்டை கரைச்ச மாதிரி உவ்வாக்....நீயே குடி உமா...&lt;br /&gt;&lt;br /&gt;எலக்டிக் (electric) ட்ரெயின் போரடிக்குதும்மா, எக்ஸ்பிளஸ் (express) ட்ளெயின்ல ஜாலியா ஏறி டூர் போகலாமா?&lt;br /&gt;&lt;br /&gt;நம்ம வீட்டுல ஒரு ரோபோ வாங்கிடலாமா (எந்திரன் பார்த்த விளைவு). ஆனா டிவியை போடச் சொன்னா கீழே போட்றும்...ஹா ஹா ஹா...எந்திரா...எந்திரா.....(ஹைபிட்சில் பாடுவது)&lt;br /&gt;&lt;br /&gt;ட்ரெயின் தண்டவாளத்தை யார் செய்தது என்ற பிரசித்திப் பெற்ற கேள்வி ஒரு நாள் அவன் கேட்கவே ஒரு கவிதை எழுதினேன். நீளும் அவன் ரயில் சந்தேகங்களில் பட்டியல், ஆனால் கவிதை எழுதத் தான் முடிவதில்லை. ட்ரெயின் தண்டவாளம் சூடா இருக்கும் உமா தொட்டுப் பாரு என்பான். எப்படிடா சொல்றே என்றால் அது கரெண்ட்ல ஓடுது இல்ல, கொஞ்சம் கரெண்ட் சிந்தி இருக்கும்...அதான் ஹாட்டா இருக்கும் தெரியுமா என்பான். அறிவுடா என்றதும் சிரிப்பான்.&lt;br /&gt;&lt;br /&gt;சிரிப்பென்றால் அப்படி ஒரு சிரிப்பு, அழுகை என்றால் நான் ஸ்டாப் அழுகை, அடம் என்றால் உலகையே புரட்டிப் போடும் அளவிற்கு அடம். என்னைப் போல சக்தியும் ஒரு எக்ஸ்டீரிமிஸ்டாக இருக்கிறான். இது சரியா தவறா என்றெல்லாம் என்னால் சொல்ல முடியவில்லை. அவர்கள் வளர்கிறார்கள், நானும் உடன் வளர்கிறேன். சில சமயம் சின்னக் கைகளுக்குள் எதையாவது பொத்தி வைத்து என்ன இருக்கு சொல்லு உமா என்பான். சாக்லெட் - இல்லை....ஜெம்ஸா இல்லைம்மா, டேய் நீயே சொல்லிடு....பாதாம்மா சாப்பிடு டயர்டா இருக்குன்னு சொன்னே இல்ல...ஸ்டென்த் கிடைக்கும் என்பான். நெகிழ்ந்துவிடுவேன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இரவு :&lt;br /&gt;&lt;br /&gt;அம்மா நைட் ஸ்கூல்ல யார் இருப்பாங்க....எங்க மிஸ் உன் போன் மாதிரியே போன் வச்சிருக்காங்க....மெசேஜ் கூட அடிப்பாங்க...&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;என் க்ளாஸ்லே டூ பேர் லவ் பண்றாங்களாம் (ஒரே சிரிப்பு) அடப்பாவி இதெல்லாம் யாருடா சொன்னது என்று கேட்டால், சாய் கிருஷ்ணா என்பான். சரி நீ யாரைக் கல்யாணம் பண்ணிக்குவே என்று கேட்டால் சீ எனக்கு கேர்ல்ஸ் பிடிக்காது என்பான். அப்ப கல்யாணம் என்றால், நான் கல்யாணமே பண்ணிக்க மாட்டேன்...அப்ப ராக்கேஷ் அவனுக்கும் கல்யாணமே பண்ண மாட்டான்...என்பான். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://2.bp.blogspot.com/_9vV1GQrxDFE/TPabve74vII/AAAAAAAAAvE/E2BzUn36TMc/s1600/uma%252Cchiya%2Band%2Bsakthi%2B032.jpg"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 240px; height: 320px;" src="http://2.bp.blogspot.com/_9vV1GQrxDFE/TPabve74vII/AAAAAAAAAvE/E2BzUn36TMc/s320/uma%252Cchiya%2Band%2Bsakthi%2B032.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5545791231213747330" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சியாவை (அக்கா ஸ்நேகா) ரொம்ப பிடிக்குது ஆனா சியாவுக்கு நர்மதா அக்கா தான் பெஸ்ட். எனக்கு சாய் தான் பெஸ்ட், ஆனா அவன்கிட்டேர்ந்து இந்த ரப்பரை நேத்து ஷூட் பண்ணிட்டேன்மா...ஸாரிம்மா இனிமே அப்படி செய்யமாட்டேன்...நீ நோட்புக் புதுநோட் புக் வாங்கித் தா அவனுக்கு கிப்ட் குடுத்திடறேன்&lt;br /&gt;&lt;br /&gt;பர்த்டேக்கு செல்லத்துக்கு என்ன வேணும் என்று கேட்ட போது நிறைய சாக்லேட், பெரிய கேக், அப்பறம் ரிமோட் ஹெலிகாப்டர், அப்பறம் கம்யூட்டர் கேம்ஸ். அப்பறம் அபிலாமி மாலுக்கு கூட்டிட்டு போய் நிறைய கேம்ஸ் விளையாடணும், ஐஸ்கீரிம் ஆங்கித் தரணும்...(எல்லாம் வாங்கித் தந்தாகிவிட்டது, தம்பியை கையில் பிடிக்க முடியவில்லை...)&lt;br /&gt;&lt;br /&gt;தினமும் இரவில் தூங்கும் போது மூன்று ஸ்லோகங்கள் சொல்ல வேண்டும் என அன்புக் கட்டளை போட்டிருக்கிறேன். ஒருவொரு நாள் ரொம்ப தூக்கம் வந்துவிட்டால் அம்மா ஷார்ட்டா சொல்லிடறேனே என்று கடகடவென்று வாய்க்கு வந்தவற்றை உளறிவிட்டு....முடித்த அடுத்த நொடி உறக்கத்தினுள் அமிழ்ந்துவிடுவான். தூங்கும் போது குழந்தைகள்தான் எவ்வளவு அழகு!&lt;br /&gt;&lt;br /&gt;உனக்கு உலகத்திலேயே யாரைடா ரொம்ப பிடிக்கும்? &lt;br /&gt;&lt;br /&gt;உமாக்கு உமா, அப்பாக்கு அப்பா, சியாவுக்கு சியா தாத்தாக்கு தாத்தா என்று சொல்லி சிரிக்கிறான். இந்த பதிலுக்குத் தான் அர்த்தம் தேடிக் கொண்டிருக்கிறேன்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/748309637854531092-8146217006634472466?l=umashakthi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://umashakthi.blogspot.com/feeds/8146217006634472466/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=748309637854531092&amp;postID=8146217006634472466' title='14 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/748309637854531092/posts/default/8146217006634472466'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/748309637854531092/posts/default/8146217006634472466'/><link rel='alternate' type='text/html' href='http://umashakthi.blogspot.com/2010/12/blog-post.html' title='சக்திவேல்'/><author><name>உமாஷக்தி</name><uri>http://www.blogger.com/profile/15892356572198993991</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='21' src='http://1.bp.blogspot.com/-gipY35ryk84/TlTuZmGcnbI/AAAAAAAAA6w/jFm_Na-18o4/s220/umashakthi%255B1%255D.JPG'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/_9vV1GQrxDFE/TPacC6WJ7uI/AAAAAAAAAvU/2AXkMkoDw_Q/s72-c/Image0095.jpg' height='72' width='72'/><thr:total>14</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-748309637854531092.post-4294965796607566188</id><published>2010-11-15T20:00:00.000-08:00</published><updated>2010-11-15T20:06:06.492-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சிறுகதை'/><title type='text'>உட்புறமாக தாழிடப்பட்ட கதவுகள்</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://1.bp.blogspot.com/_9vV1GQrxDFE/TOIC0S7Tz7I/AAAAAAAAAu8/B0l7NCvgkPw/s1600/teen-computer.jpg"&gt;&lt;img style="float:right; margin:0 0 10px 10px;cursor:pointer; cursor:hand;width: 319px; height: 208px;" src="http://1.bp.blogspot.com/_9vV1GQrxDFE/TOIC0S7Tz7I/AAAAAAAAAu8/B0l7NCvgkPw/s320/teen-computer.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5539993589076185010" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;’அம்மா அய்யோ ஓடுதே’ என்று கத்திக் கொண்டே வர்ஷா தூக்கத்திலிருந்து துள்ளி எழுந்து அறையின் குடுக்கும் நெடுக்கும் ஓட ஆரம்பித்தாள்.&lt;br /&gt;&lt;br /&gt;திடுக்கிட்டு விழித்த ஜோதி ’என்னடி ஆச்சு’ என்று கேட்பதற்குள் வர்ஷா காதைப் பொத்தி கொண்டு கம்யூட்டரை ஆன் செய்து கூகிளைத் திறந்தாள். &lt;br /&gt;&lt;br /&gt;‘என்ன வர்ஷா எதுக்கு கத்தினே என்னாச்சும்மா? என்ற ஜோதியிடம் ‘காதுக்குள்ள எறும்பு போயிருச்சும்மா’ அதை வெளிய எடுக்கறது எப்படின்னு கூகிள்ல சர்ச் பண்ணிட்டிருக்கேன். அதற்குள் மறுபடியும் காதில் ஏதோ நடந்து கொண்டிருப்பது போல் இருக்கவே, ‘மா நடக்குது அய்யோ எதாச்சும் பண்ணேன்’ என்று அலறினாள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;’அடிப்பாவி அதை கம்யூட்டர் கண்றாவிய அப்புறமா பாத்துக்க, இங்க வா’ என்று மகளை பாத்ரூமிற்கு அழைத்துப் போய் காதில் தண்ணீரை மெதுவாக ஊற்றினாள் ஜோதி. பொறுமையின்றிக் கத்திக் கொண்டே இருந்த வர்ஷாவின் வாய் வழியே தண்ணீர் வெளி வந்ததும் சட்டென்று எறும்பின் நடமாட்டம் நின்றுவிட்டது. ஆனால் காது ஒரேடியாக அடைத்துக் கொண்டது. ப்ரஷ் செய்யும் போது அந்த சத்தம் மண்டைக்குள் கேட்டது. &lt;br /&gt;&lt;br /&gt;ஒரு வழியாய் அவள் பல் விளக்கி விட்டு வருவதற்கு முன் கணினியில் வர்ஷா எதைத் தேடினாள் என்று பார்த்த ஜோதிக்கு அழுவதா சிரிப்பதா என்று தெரியவில்லை. ‘காதில் எறும்பு புகுந்தால் என்ன செய்வது’ (‘What to do when an ant goes inside the ear’) என்று கூகிளில் அடித்திருந்தாள். பதில் வருவதற்கு முன் எறும்பை எடுத்தாகிவிட்டது. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://2.bp.blogspot.com/_9vV1GQrxDFE/TOICHuKLNZI/AAAAAAAAAuc/w86aks3yawE/s1600/children-snws.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 180px;" src="http://2.bp.blogspot.com/_9vV1GQrxDFE/TOICHuKLNZI/AAAAAAAAAuc/w86aks3yawE/s320/children-snws.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5539992823292179858" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் எதற்கும் எப்போதும் கம்யூட்டர் வேண்டும் அவளுக்கு. கண்ணுக்குத் தெரியாத அதன் மாயக் கரங்கள் வர்ஷாவை பிடித்து அதன் முன்னால் பல மணி நேரங்கள் உட்கார வைத்திருந்தது. ஜோதியிடமோ அசோக்கிடமோ அதிகம் அவள் பேசுவதில்லை, அவளுடைய தோழிகள் மற்றும் கணினி தான் அவளின் உலகம். தேவைக்கு மட்டுமே பெற்றோர்கள் என்று அவள் மாறிப் போனதை சகஜமாக ஜோதியால் எடுத்துக் கொள்ள முடியவில்லை. பல மணி நேரம் வீட்டில் பிள்ளைகள் தனியாக இருக்க நேர்கையில் அதற்கு குடுக்கும் விலை இது போன்றவைதான் என்று அவள் அறிவுக்கு தெரிந்திருந்தாலும் மனம் சோர்வாகியது.&lt;br /&gt;&lt;br /&gt; &lt;br /&gt;வீட்டில் அன்லிமிடெட் இண்டர்னெட் கனெக்‌ஷன் குடுத்தது எவ்வளவு பெரிய தவறு என்று சில நாட்களாக உணர்கிறாள் ஜோதி. படிக்காவிட்டால் திட்டலாம் ஆனால் வர்ஷா மூன்று ரேங்கிற்குள் வந்துவிடுபவள். இதுவரை அவளைப் பற்றி சின்னதாக கூட புகார் பள்ளியில் இருந்து வந்ததில்லை. ஜோதியின் சமீபத்திய எதிரி வீட்டுக்குள் உட்கார்ந்து கொண்டிருக்கும் அந்தக் கறுப்பு நிற கணினிதான்.&lt;br /&gt;&lt;br /&gt;சின்னவன் வருண் வர்ஷாவிடம் கெஞ்சி கூத்தாடி தினமும் ஒரு மணி நேரம் கேம்ஸ் விளையாடிவிட்டு போய்விடுவான். இவள் அளவுக்கு அவன் கணினிக்கு அடிமைப்பட்டிருக்கவில்லை. அவன் கதை வேறு. ஹங்காமா டீவியில் வரும் சிங்சான், போகோவில் மாட், மற்றும் பவர் ரேஞ்சர்ஸ் இருந்தால் போதும் உணவு உறக்கம் படிப்பு இதெல்லாம் ஏதோ அவ்வப்போது நடக்கும் விஷயங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;வர்ஷாவையும் வருணையும் பள்ளிக்கு அனுப்பிவிட்டு ஜோதி அவசர அவசரமாகக் கிளம்பினாள். &lt;br /&gt;&lt;br /&gt;ஆபிஸ் பஸ் சரியாக 8.30 வந்தது. பஸ்ஸில் ஏறி சீட்டில் உட்கார்ந்தும் நினைவுகள் முழுக்க வர்ஷாவைச் சுற்றியே வந்து கொண்டிருந்தது. பதினைந்து வயது டீன் ஏஜ், எல்லாவற்றையும் அலட்சியப்படுத்தும் வயது. தான் அந்த வயதில் எப்படி இருந்தோம் என்று யோசிக்கையில், வர்ஷாவை விட பத்து மடங்கு ஆக்ரோஷமாக இருந்ததாகவே பட்டது. ஆனால் சில விஷயங்களில் அம்மாவுடன் அதிகமாக சண்டை போடாமல் சரண் அடைந்திருக்கிறாள். அப்போதைய பிரச்சனை விளக்கு வைக்கறதுக்கு முன்னாடி வீட்டுக்கு வந்துடணும், 24 மணி நேரமும் படிக்க வேண்டும், ஆண் நண்பர்கள் இருக்கக் கூடாது, கத்திப் பேசக் கூடாது, சைக்கிளில் ஊர் சுற்றக் கூடாது போன்ற விஷயங்கள் மட்டும் தான். தினமும் ஒரு சண்டை அம்மாவிற்கும் ஜோதிக்கும் நடக்கும். ஆனால் வர்ஷா அப்படியில்லை. சண்டை போட போட்டாள் மிகவும் நூதனமான முறையில் ஜோதியுடன் யுத்தம் செய்வாள். கதவை சாத்திக் கொண்டு மொபைலில் இருந்து மெசேஜ் அனுப்புவாள். ”என் அப்பாவை தான் எனக்கு மிகவும் பிடிக்கும். நீ திட்டறே எனக்கு அது புடிக்கலை, அப்பாகிட்ட சொல்லி ஹாஸ்டலுக்கு போயிடுவேன்” என்பது போன்று இருக்கும் அது. எங்கே அடித்தால் தனக்கு வலிக்கும் என அந்தச் சின்ன மூளைக்குத் தெரியும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://4.bp.blogspot.com/_9vV1GQrxDFE/TOICeHz3yqI/AAAAAAAAAus/7jzlO9qER-Y/s1600/gal%2Bhouse.jpg"&gt;&lt;img style="float:right; margin:0 0 10px 10px;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 254px;" src="http://4.bp.blogspot.com/_9vV1GQrxDFE/TOICeHz3yqI/AAAAAAAAAus/7jzlO9qER-Y/s320/gal%2Bhouse.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5539993208135076514" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இண்டர்நெட்டில் அவள் கண்டதைப் பார்த்து புத்தி கெட்டுவிடக்கூடாது என்று பேரண்டல் லாக் போட்டிருந்தாள். பல வலைத்தளங்களை அனுமதிக்காக ஃபயர் வால், மற்றும் வேறு சில சாப்ட்வேர்களை லோட் செய்திருந்தாள். வர்ஷாவின் தேடுதல் முதலில் படிப்புச் சார்ந்தும் பள்ளி ப்ரொஜெக்ட் சார்ந்தும்தான் இருந்தது. நாளாக ஆக பக்கத்தில் ஜோதி இல்லாத தைரியத்தில் அவள் பலவிதமான வலைத்தளங்களுக்கு போய் வெட்டிக் கதைகளைப் படிக்க ஆரம்பித்தாள். ஆங்கிலத்தில் தனக்கு ஒரு ப்ளாக் உருவாக்கிவிட்டாள். சில சமயம் அவள் செயல்கள் பாராட்டும் விதமாக இருந்தாலும் பெரும்பாலும் பொழுது போக்கான விஷயங்களில் மேலதிக கவனம் செலுத்த ஆரம்பித்ததும் ஜோதி தடை சொன்னாள். மேலும் வர்ஷா சமீபத்தில் ஃபேஸ் புக்கில் சேர்ந்ததிலிருந்து கணினிக்கு முழு நேர அடிமையாகிப் போயிருந்தாள். ஃபேஸ் புக் என்பது தி.நகர் ரங்கநாதன் தெரு போன்று நிறைய மனிதர்கள் குழுமியிருக்கும் இடம். யாரும் யாருடனும் நட்பு கொள்ளலாம் எனும்படியான கட்டற்ற சுதந்திரம், பேச்சு உரிமை என்று அதன் இயக்கங்கள் எல்லாரையும் ஈர்க்கக் கூடியவை. ஆனால் படிப்பைக் கெடுத்துக் கொண்டு இவள் அதில் விழுந்து கிடப்பது ஜோதிக்கு பெரும் எரிச்சலைக் குடுத்தது. மறைமுகமாகவும் நேரடியாகவும் சொல்லிப் பார்த்துவிட்டாள். அவள் கேட்கும்படியாக இல்லை. மேலும் தீவிரமாக அதில் இயங்க ஆரம்பித்துவிட்டாள். அவள் தோழமைகள் லிஸ்டில் புனைப் பெயரில் ஜோதி சென்று பார்த்தபோது ‘வீ ஹேட் மாம் ஹு ஆல்வேஸ் அட்வைஸ்’ என்ற தலைப்பின் கீழ் நிறைய பேசியவள் வர்ஷாதான்.&lt;br /&gt;&lt;br /&gt;வர்ஷாவிற்கு இசைப்பித்து அதிகம். நிறைய ஆல்பங்கள் வாங்கி அடுக்கி இருந்தாள். எல்லாம் அசோக் குடுத்த செல்லம். அவன் அமெரிக்காவிலிருந்து வரும் போது அவளுக்காக வாங்கி வருவது உடைகள் போக ஆல்பங்கள்தான். ஹான்னா மோண்டானா எனும் பாப் பாடகிதான் இவளுக்கும் ரோல் மாடல். அந்த ஹான்னா தலையை விரித்துக் கொண்டு முழுத் தொடைத் தெரியுமாறு போட்டுக் கொண்டிருந்த ஸ்க்ர்ட்தான் வர்ஷாவிற்கு மிகப் பிடித்த உடை. ஜோதியின் கண்டிப்புக்கு பயந்து அவ்வளவு குட்டைப் பாவடையை அணியாமல் ஜீன் க்ளாத்தில் முட்டி வரை உள்ள அரைப் பாவடையை அணிவாள். தவிர வர்ஷாவின் ஸ்கூல் பேக், வாட்டர் கேன், லன்ச் பாக்ஸ், பென் பாக்ஸ்,   எக்ஸாம் பேட் என அவள் உபயோகிக்கும் எல்லாப் பொருட்களுமே ஹானா மோண்டானா ப்ராண்ட்தான். &lt;br /&gt;&lt;br /&gt;”ஏண்டி இப்படி பைத்தியம் பிடிச்சு அலையறே?” என்று ஜோதி கேட்டதற்கு ஒரு சிரிப்பு சிரித்து விட்டு ’மா, ஐம் ஜஸ்ட் க்ரேஸி அபவுட் ஹான்னா இதுல என்ன தப்பு இருக்கு? என்றாள். பேஸ்புக்கில் ’ஹான்னா ஃபேன் க்ளப்’பில் வேறு சேர்ந்திருக்கிறாள். அடுத்து இவள் பித்து யார் மீது மாறப் போகிறதோ என்ற திகிலில் ஜோதிக்கு அமெரிக்காவில் இருக்கும் அத்தனை பாப் பாடகர்கள் மீதும் வெறுப்பு ஏற்பட்டது.  இளையராஜா, ரஹ்மான், ஹரிஹரன், மெஹ்தி ஹசன் இவர்களை எல்லாம் ஏன் வர்ஷாவிற்குப் பிடிக்கவில்லை என்று நினைத்தாள். &lt;br /&gt;&lt;br /&gt;காலங்கள் மாறி இருக்கலாம். பிள்ளைகளின் ரசனைகள் வேறுபடலாம் ஆனால் எதையும் காது குடுத்துக் கேட்க மறுக்கும் தன்மையை என்ன சொல்வது யாரிடம் இதையெல்லாம் போய் முறையிடுவது என ஜோதி குழம்பிப் போனாள். டெக்னாலஜி எனும் அசுரன் கண்ணுக்குள் விரலை விட்டு ஆட்டிக் கொண்டிருக்க தப்ப வழி தெரியாமல் கலங்கினாள். ஜோதி வர்ஷாவிடம் தன்னுடைய கருத்துக்களையோ விருப்பங்களையோ அதிகம் திணிப்பதில்லை. ஆனால் அளவுக்குமீறி இவர்களுக்குச் சுதந்திரம் குடுத்துவிட்டோமோ என்று கவலைப்பட ஆரம்பித்தாள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://2.bp.blogspot.com/_9vV1GQrxDFE/TOICq2KW5wI/AAAAAAAAAu0/MSUWh2pChVM/s1600/gal%2Bin%2Bcomp.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 300px; height: 225px;" src="http://2.bp.blogspot.com/_9vV1GQrxDFE/TOICq2KW5wI/AAAAAAAAAu0/MSUWh2pChVM/s320/gal%2Bin%2Bcomp.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5539993426735851266" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ந்யூ ஜெர்சியில் இருந்த அசோக் அடுத்த வாரம் லீவில் வரும் போது அவனிடம் இவர்களைப் பற்றிச் சொல்ல வேண்டும் என்று முடிவு செய்தாள். அதன்பிறகு ஜோதியின் உலகம் வேறானது. மகளைப் பற்றிய கவலை மங்கிக் கொண்டே போக கணினியும் கண்ணுக்குத் தென்படாமல் குரல் வழியே தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டிருக்கும் பாஸின் ஆணைகளுமே அந்த நாளை விரட்டி அடிக்க போதுமானதாக இருந்தது. &lt;br /&gt;&lt;br /&gt;ஆபிஸ் பஸ் தெருமுனையில் ஒன்பது மணிக்கு அவளை வெளித் தள்ளியதும், வெகுவாக களைத்து வீட்டினுள் நுழைந்தாள். நுழையும் போதே வர்ஷாவும் வருணும் தங்களுக்குள் நடந்து முடிந்த சண்டைகளின் விபரங்களை மாறி மாறி சொன்னார்கள். &lt;br /&gt;&lt;br /&gt;’அம்மா அக்காகிட்ட கம்யூட்டர் கேட்டேன் பாரு எப்படி கிள்ளி விட்டுட்டா என்றான்.&lt;br /&gt;&lt;br /&gt;தொடைகளில் நன்றாக கிள்ளி வைத்திருந்தாள். சிவந்திருந்தது. &lt;br /&gt;&lt;br /&gt;”ஏண்டி இப்படி செஞ்சே உன்னை விட எவ்வளவு சின்னவன் வருண். அறிவு இருக்காடி”?&lt;br /&gt;&lt;br /&gt;அவள் அலட்சியமாக ஜோதியைப் பார்த்து, ‘இவனை ஏன் பெத்தே’ என்ற வழக்கமான கேள்வியைக் கேட்டாள்.&lt;br /&gt;&lt;br /&gt;”கேட்டதுக்கு முதல்ல பதில் சொல்லுடி”&lt;br /&gt;&lt;br /&gt;”மா இப்படி இண்டீசண்டா டி சொல்றதை நிறுத்துங்க முதல்ல இந்தக் குட்டி பிசாசு பேசாம டீவியைப் பாத்துக்கிட்டு கிடக்க வேண்டியதுதானே சும்மா சும்மா என் மொபைல நோண்டறதும் கம்யூட்டர் கீ போர்டை உடைக்கறதும் சே நீ இவனை என் தலைல கட்டிட்டு ஜாலியா ஆபிஸ்ல இருக்கே ஒரு நாள் இருந்து பாரு அப்ப தெரியும் உன் பையனோட ஒரிஜினல் ஃபேஸ்...ஐ ஹேட் ஹிம்” என்று கத்தி விட்டு அறைக்குள் சென்று கதவை அடைத்துக் கொண்டாள்.&lt;br /&gt;&lt;br /&gt;வருண் இதைக் கேட்டதும் ஓவென்று அழ ஆரம்பித்தான். சாப்பாடு ஊட்டி மடியில் படுக்க வைத்து அவனை தூங்க வைத்த பின் அவன் நோட்டை எடுத்துப் பார்த்தாள். அதன் வெள்ளைத் தாள்கள் ஜோதியைப் பார்த்து வலியுடன் சிரித்ததைப் போல் இருந்தது. ஹோம்வொர்க் செய்திருக்கவில்லை. வர்ஷாவையும் ஒருவழியாய் சமாதானப் படுத்தி சாப்பிட வைத்தாள். அவள் எதுவும் பேசாமல் தூங்கிவிட்டாள்&lt;br /&gt;&lt;br /&gt;ஸ்கைப்பில் (நெட் போனில்) அழைத்த அசோக்கிடம் 12 மணிக்கு பிறகு அழைக்கச் சொன்னாள். ஆனால் பதினொரு மணிக்கே ஜோதிக்கு தூக்கம் வந்தது. முடிவற்ற பொருட் தேடலில் எத்தனை எத்தனை பிரிவுகள். பகல் முழுவதும் பிள்ளைகளைப் பிரிந்துவிட்டு இரவு அசோக்கை மிஸ் செய்ய வேண்டியிருந்ததை நினைத்து வாழ்க்கை சலிப்பாக இருந்தது. பல்லைக் கடித்துக் கொண்டு இன்னும் சில வருடங்களைக் கடத்திவிடலாம்தான். அதனோடு கடந்துவிடுவது இளமையும் கூடத்தானே! இதையெல்லாம் யோசித்தால் பைத்தியம் பிடித்துவிடும் என்று மனதை திசை திருப்ப முயன்றாள். எப்படி தூங்கிப் போனாள் என்றே தெரியவில்லை. நள்ளிரவைத் தாண்டி வந்த கனவின் தீவிரம் அவளை விழித்தெழச் செய்தது. &lt;br /&gt;&lt;br /&gt;வருணை டிவிக்குள்ளிருந்து சில வேற்றுக் கிரக மிருகங்கள் உள்ளே இழுத்துச் சென்றது அவன் அம்மா அம்மா என்று அழ அங்கு இருந்த வர்ஷா அதைக் கண்டு கொள்ளாமல் கம்யூட்டரில் எதையோ தட்டிக் கொண்டிருந்தாள்.&lt;br /&gt;&lt;br /&gt;திடுக்கிட்டு விழித்த ஜோதி பக்கத்தில் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த வருணைப் பார்த்தாள். நிம்மதியாகத் தூங்கிக் கொண்டிருந்தான். பக்கத்து பெட்டில் படுத்திருந்த வர்ஷாவின் கைகளுக்குள் டெட்டி அமைதியாக உறங்கிக் கொண்டிருந்தது. &lt;br /&gt;&lt;br /&gt;டீவியின் ரீமோட்டில் வருணுடைய வாழ்க்கையும் கம்யூட்டரின் கீபோர்டில் வர்ஷாவின் நேரமும் கரைந்து கொண்டிருப்பதை அறிந்தும் என்ன செய்வது என்று யோசித்தபடியே ஜோதி கணினியை ஆன் செய்தாள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://3.bp.blogspot.com/_9vV1GQrxDFE/TOICPXs1MII/AAAAAAAAAuk/GxxiJ9P6gAQ/s1600/DellComputer.jpg"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 234px;" src="http://3.bp.blogspot.com/_9vV1GQrxDFE/TOICPXs1MII/AAAAAAAAAuk/GxxiJ9P6gAQ/s320/DellComputer.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5539992954702475394" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;குழந்தைகளை இண்டர்நெட்டிலிருந்து காப்பாற்றுவது எப்படி என்று கூகிளில் தேட ஆரம்பித்தாள்.&lt;br /&gt;&lt;br /&gt; &lt;br /&gt;&lt;br /&gt; (’கல்கி’ தீபாவளி மலர் (நவம்பர் 2010 வெளிவந்த சிறுகதை)&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/748309637854531092-4294965796607566188?l=umashakthi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://umashakthi.blogspot.com/feeds/4294965796607566188/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=748309637854531092&amp;postID=4294965796607566188' title='11 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/748309637854531092/posts/default/4294965796607566188'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/748309637854531092/posts/default/4294965796607566188'/><link rel='alternate' type='text/html' href='http://umashakthi.blogspot.com/2010/11/blog-post_15.html' title='உட்புறமாக தாழிடப்பட்ட கதவுகள்'/><author><name>உமாஷக்தி</name><uri>http://www.blogger.com/profile/15892356572198993991</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='21' src='http://1.bp.blogspot.com/-gipY35ryk84/TlTuZmGcnbI/AAAAAAAAA6w/jFm_Na-18o4/s220/umashakthi%255B1%255D.JPG'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/_9vV1GQrxDFE/TOIC0S7Tz7I/AAAAAAAAAu8/B0l7NCvgkPw/s72-c/teen-computer.jpg' height='72' width='72'/><thr:total>11</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-748309637854531092.post-1670088021908610978</id><published>2010-11-02T02:32:00.000-07:00</published><updated>2010-11-02T02:47:17.409-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='இவள் புதியவள்'/><title type='text'>கல்பனா லாஜ்மி</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://3.bp.blogspot.com/_9vV1GQrxDFE/TM_c9HOd1nI/AAAAAAAAAt0/kB_5dJNnYyg/s1600/kal+1.jpg"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 186px; height: 271px;" src="http://3.bp.blogspot.com/_9vV1GQrxDFE/TM_c9HOd1nI/AAAAAAAAAt0/kB_5dJNnYyg/s320/kal+1.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5534885409531483762" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;திரையில் பெண்கள் அழகுப் பதுமைகளாகவும் காட்சி நுகர் பொருள்களாக மட்டுமே பங்கேற்று வருகிறார்கள். இன்றளவு அந்த நிலை மாறியிருக்கவில்லை. திரையின் பின் ஜெயித்த பெண்கள் உலக அளவில் கூட குறைவுதான். மற்ற துறைகளைவிட சினிமா பெண்களுக்கு பல விதத்திலும் சவாலான ஒரு துறை. அதில் தொடர்ந்து இயங்கிக் கொண்டிருக்கு மிகப் பெரிய எனர்ஜி தேவைப்படுகிறது. அவ்வகையில் பாலிவுட் என்று அறியப்படுகின்ற ஹிந்தி திரையுலகில் கல்பனா லாஜ்மி தவிர்க்க முடியாத பெண் இயக்குனர். கல்பனா லாஜ்மியின் அம்மா லலிதா லாஜ்மி பிரபல இந்தி திரைப்பட இயக்குனர் நடிகர் குரு தத்தின் சகோதரி ஆவார். அவ்ரும் ஒரு நடிகை. 1978-ல் ஆரம்பித்த கல்பனாவின் திரைப்பயணம் இன்றுவரை தொடர்கிறது. தனித்துவமான கலைப் படங்களை தயாரித்து இயக்கி தனக்கென ஒரு அழுத்தமான இடத்தை தக்க வைத்திருப்பவர் கல்பனா. &lt;br /&gt;&lt;br /&gt;1954 பிறந்த கல்பனா இளம் வயதிலிருந்து நாடகம் மற்றும் சினிமா மீது ஈடுபாடு கொண்டவர். புகழ்ப் பெற்ற இயக்குனர் ஷியாம் பெனகலிடம் உதவி இயக்குனராக பணி புரிந்த இவர் முதலில் சில டாக்குமெண்ட்ரி படங்கள் இயக்கினார். (D.G.Movie Pioneer – 1978, A work study in Tea Plucking – 1979, Along the Brahmaputra 1979) 1986-ல் ‘ஏக் பால்’ (ஒரு நிமிடம்) என்ற தனது முதல் திரைப்படத்தை எழுதி இயக்கி தயாரிக்கவும் செய்தார். ஷபானா ஆஸ்மி, நஸ்ரூதின் ஷா நடித்துள்ள இத்திரைப்படம் சர்ச்சைக்கு உரியதாக மட்டுமன்றி தேசிய விருதும் பெற்றது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சில வருடங்கள் இடைவெளிக்குப் பிறகு 1993-ல் டிம்பிள் கபாடியாவின் மிகச் சிறந்த நடிப்பில் கல்பனா இயக்கிய ’ருடாலி’ மிகப் பெரிய வெற்றியடைந்தது. கிட்டத்தட்ட முப்பது தேசிய மற்றும் உலக விருதுகளை அள்ளிக் குவித்த திரைப்படம் இது. சிறந்த வெளிநாட்டுப் படமாக ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டது. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://1.bp.blogspot.com/_9vV1GQrxDFE/TM_djwRgwHI/AAAAAAAAAuM/4AI-kQ-PUqc/s1600/rudali.jpg"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 192px; height: 256px;" src="http://1.bp.blogspot.com/_9vV1GQrxDFE/TM_djwRgwHI/AAAAAAAAAuM/4AI-kQ-PUqc/s320/rudali.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5534886073385140338" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தபு, கிரண் கேர் மற்றும் ஆரிப் சக்கரியாவை வைத்து 1997 தனது அடுத்த திரைப்படமான தர்மியானை இயக்கினார் கல்பனா. கலைத்தன்மை மாற்றுக் குறையாத கமர்ஷியல் ஹிட்டான அத்திரைப்படம் கல்பனாவிற்கு பெரும் புகழை அளித்தது. கிரண் கேர் சிறந்த நடிகைக்கான தேசிய விருதுக்காக பரிந்துரை செய்யப்பட்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;கல்பனாவின் அடுத்த திரைப்படமான தமான், சாயாஜி சிண்டே மற்றும் ரவீனா நடித்து வெளிவந்தது. திருமண உறவிற்குள் வன்முறையை நுட்பமாக பதிவு செய்த படமிது. கல்பனா லாஜ்மியின் ராசி தேசிய விருதுகளினால் ஆனது போலும். தமானில் சிறந்த நடிகைக்கான தேசிய விருதை ரவீனா தாண்டன் பெற்றார். &lt;br /&gt;&lt;br /&gt;ஐஸ்வர்யா ராய்க்காக அவர் எழுதி வைத்திருந்த அரசியல் ஸ்க்ரிப்ட் ‘சிங்ஹஸன்’ தவிர்க்க முடியாத சூழ்நிலையால் கல்பனாவால் திரையாக்கம் செய்ய முடியவில்லை. தன்னுடைய தூரத்து உறவினரான தீபிகா படுகோனை வைத்து இப்படத்தை எடுக்க நினைத்தார் கல்பனா. ஆனால் சொந்த வாழ்க்கையில் ஏற்பட்ட சில சோதனைகளால் தற்போது இதை தள்ளி வைத்துள்ளார். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://2.bp.blogspot.com/_9vV1GQrxDFE/TM_dZd3_GlI/AAAAAAAAAuE/jUmuSavwPac/s1600/k4.jpg"&gt;&lt;img style="float:right; margin:0 0 10px 10px;cursor:pointer; cursor:hand;width: 170px; height: 208px;" src="http://2.bp.blogspot.com/_9vV1GQrxDFE/TM_dZd3_GlI/AAAAAAAAAuE/jUmuSavwPac/s320/k4.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5534885896647547474" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;2003 ஆம் ஆண்டு கல்பனா இயக்கிய ’கியோன்’ என்ற திரைப்படம் எதிர்ப்பார்த்த வெற்றியை தரவில்லை. ஆனால் அதனால் சோர்வடையாத கல்பனா 2006-ல் தனது அடுத்த படமான சிங்காரியை இயக்கினார். சுஷ்மிதா சென் நடித்த அப்படம் பெரும் பரபரப்பையும் சர்சசையும் ஏற்படுத்தியது&lt;br /&gt;&lt;br /&gt;சாதிக்க நினைக்கும் பெண்களுக்கு பெரும் சவாலாக இருப்பது குடும்ப வாழ்க்கை. இரண்டையும் சமன் செய்ய தனித் திறமையும் மிகப் பெரிய பொறுமையும் வேண்டும். கல்பனா தன்னுடைய பதினேழு வயதில் சந்தித்த ஒரு மனிதரின் மீது காதல் வயப்பட்டு இன்றளவும் அவருடனே வாழ்ந்து வருகிறார். அவர் மிகச் சிறந்த பாடகர் மற்றும் பிரபலமான இசையமைப்பாளர் பூபன் ஹசாரிகா. அப்போது பூபனுக்கு 45 வயது. 38 ஆண்டுகள் தொடர்ந்து அவருடன் வாழ்ந்த கல்பனாவை தனது 80 வயதில் பூபன் திருமணம் செய்ய முடிவெடுத்தார். தன்னுடைய அன்பான காதலிக்கு மனைவி என்ற அங்கீகாரத்தை தான் இறக்கும் முன் குடுக்க நினைத்திருப்பார் பூபன் என்கிறார் கல்பனா. தன்னைப் பொறுத்தவரை மனைவி என்பது வெறும் வார்த்தை, சமூகத்திற்கான ஒருவித அடையாளம் அவ்வளவுதான். ஆனால் எல்லாவற்றையும் கடந்து எங்கள் உறவில் புற விஷயங்களுக்கு அவசியம் இல்லை என்று ’மனைவி பதவி’யை மறுத்துவிட்டார்.&lt;br /&gt;மேலும் தனக்கு அதில் துளியும் விருப்பமில்லை. திருமண உறவை விட மேலதிக நம்பிக்கையும் மரியாதையும் நாங்கள் ஒன்றாக வாழ்ந்து கொண்டிருக்கும் காலகட்டத்தில் ஒருவருக்கொருவர் அளித்துள்ள நிலையில் இது சாதாரண விஷயம் தான்,&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பூபனை முதன்முதலாக தன் மாமா ஆத்மா ராம் மூலமாக சந்தித்தார் கல்பனா. ஆரன்ஞ் நிற சட்டை அணிந்திருந்த அந்த ஒடிசலான உருவத்தைப் பார்த்ததும் கல்பனாவிற்கு பிடித்துப் போய்விட்டதாம். கிட்டத்தட்ட ஒரு வருடம் பழகிய பின் பூபனின் ஹசாரிக்காவின் மனதிற்குள்ளும் வீட்டினுள்ளும் புகுந்தார் கல்பனா லாஜ்மி..&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://2.bp.blogspot.com/_9vV1GQrxDFE/TM_d7Tgz-TI/AAAAAAAAAuU/x6xkNEK-yv0/s1600/k3.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 280px; height: 150px;" src="http://2.bp.blogspot.com/_9vV1GQrxDFE/TM_d7Tgz-TI/AAAAAAAAAuU/x6xkNEK-yv0/s320/k3.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5534886477981546802" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;38 வருட காலமாக ஒரே கூரையின் கீழ் ’லிவ்விங் டுகெதர்’ . முறையில் வாழ்ந்து வந்த கல்பனாவின் வாழ்வு முறை அவருடைய அம்மாவிற்கு பிடிக்கவில்லை. பூபனின் குடும்பத்தார் இதை வரவேற்கவில்லை. இது சராசரி இந்திய மனப்பான்மை இதைப் பற்றி நான் பெரிதாக கவலைப்படவில்லை. என் மனதின் உண்மையான விருப்பத்திற்கு செவி குடுத்தே இன்று வரை வாழ்ந்து வருகிறேன். திருமணம் செய்ய வற்புறுத்துவது, குழந்தைப் பெற்றுக் கொள்ள நிர்பந்திப்பது போன்றவற்றிலிருந்து தள்ளியே இருந்து வருகிறேன். எனக்குக் குடுக்கப்பட்ட வாழ்க்கையை எனக்குப் பிடித்த வகையில் வாழ்கிறேன். இதில் என்ன தவறு என்கிறார் கல்பனா.&lt;br /&gt;&lt;br /&gt;கல்பனாவும் பூபனு வெற்றிகரமாக 38 வருடம் ஒன்றாக வாழ்கிறார்கள். அதற்கு காரணம் அவர்களுக்குள் பொஸஸிவ்னெஸ் இருப்பதில்லை. தனி மனித சுதந்திரத்தை மதித்தார்கள். பூபனின் வாழ்வில் பிற பெண்கள் இருந்தது போல கல்பனாவும் தனக்கு பிடித்த மற்றொருவரை சிறிது காலம் காதலித்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;பூபனின் முன்னாள் மனைவி பிரியம்வதா அடிக்கடி போன் செய்து பூபனின் நலம் விசாரிப்பார் மும்பாயில் இருக்கும் இவர்கள் வீட்டிற்கும் அடிக்கடி வந்து செல்வார். தற்போது ப்ரியம்வதா கனடாவில் குடியுரிமை பெற்று மகனுடன் வசிக்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;பூபனின் வெற்றிக்கு 95% காரணம் கல்பனாதான். குடிகாரர். மேலும் கோபக்காரரான பூபனை சரிப்படுத்தி அவரை புகழின் படிக்கட்டுகளை மேன்மேலும் அடையச் செய்தார் கல்பனா. பூபனைப் பற்றி கூறுப்போது மிகவும் எமோஷனலானவர், மிகவும் அன்பானவர் எங்கள் இருவருக்கும் பல சண்டைகள் வந்துள்ளன.ஆனால் அதையும் மீறி எங்களுடைய கெமிஸ்ட்ரியும் மாறாத அன்பும் எங்களை பிரிய விடாமல் ஒன்றாகவே வாழ வைத்திருக்கிறது என்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://4.bp.blogspot.com/_9vV1GQrxDFE/TM_dIAuKszI/AAAAAAAAAt8/n7_PpgAfhW0/s1600/k2.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 240px; height: 179px;" src="http://4.bp.blogspot.com/_9vV1GQrxDFE/TM_dIAuKszI/AAAAAAAAAt8/n7_PpgAfhW0/s320/k2.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5534885596763960114" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;84 வயதான அந்த இசைமேதை பூபன் ஹசாரிகா தற்போது உடல் நலம் குன்றி படுத்த படுக்கையாக இருக்கிறார். காதல் துணைவி கல்பனா அருகிலேயே இருந்து முழுக்க முழுக்க அவரை கவனித்துக் கொண்டிருக்கிறார். இதனால் அவரால் படம் எடுக்க முடியவில்லை மற்ற வேலைகளை திறம்பட செய்ய முடியவில்லை. ஆனால் அது எல்லாம் தன்க்கு முக்கியமில்லை என்கிறார் கல்பனா பூபனை நான் பெரிதும் காதலிக்கிறேன். அவருடன் இருக்கும் ஒவ்வொரு நிமிஷமும் முக்கியமானது என்கிறார்.  எல்லாவற்றையும் கடந்த அன்பு இதை சாத்தியப்படுத்தியிருக்கிறது. பாசிட்டிவ் பெண்னான கல்பனா சொல்கிறார் ‘இருளுக்குப் பின் நிச்சயம் ஒளி வரும். நான் ஒரு இருட்டான காலகட்டத்தை கடந்து மூன்று வருடமாக கடந்து வருகிறேன், என்னால் ஒரு படத்தைக் கூட அந்த நேரத்திலியக்கமுடியவில்லை. ஆனால் வெளிச்சம் வெகு தூரத்தில் இல்லை. நிச்சயம் மீண்டு வருவேன். என்கிறார்&lt;br /&gt;&lt;br /&gt; &lt;br /&gt;(நன்றி - ‘இவள் புதியவள்’ அக்டோபர் இதழ்)&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/748309637854531092-1670088021908610978?l=umashakthi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://umashakthi.blogspot.com/feeds/1670088021908610978/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=748309637854531092&amp;postID=1670088021908610978' title='1 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/748309637854531092/posts/default/1670088021908610978'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/748309637854531092/posts/default/1670088021908610978'/><link rel='alternate' type='text/html' href='http://umashakthi.blogspot.com/2010/11/blog-post.html' title='கல்பனா லாஜ்மி'/><author><name>உமாஷக்தி</name><uri>http://www.blogger.com/profile/15892356572198993991</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='21' src='http://1.bp.blogspot.com/-gipY35ryk84/TlTuZmGcnbI/AAAAAAAAA6w/jFm_Na-18o4/s220/umashakthi%255B1%255D.JPG'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/_9vV1GQrxDFE/TM_c9HOd1nI/AAAAAAAAAt0/kB_5dJNnYyg/s72-c/kal+1.jpg' height='72' width='72'/><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-748309637854531092.post-3600835520020704181</id><published>2010-10-26T04:37:00.000-07:00</published><updated>2010-10-26T06:13:26.760-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கவிதை'/><title type='text'>ஓட்டம்</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://2.bp.blogspot.com/_9vV1GQrxDFE/TMbSjBnF6EI/AAAAAAAAAtc/UZTravTvE54/s1600/15-train-track.jpg"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 214px;" src="http://2.bp.blogspot.com/_9vV1GQrxDFE/TMbSjBnF6EI/AAAAAAAAAtc/UZTravTvE54/s320/15-train-track.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5532340691440887874" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;1) &lt;br /&gt;&lt;br /&gt;வீட்டை விட்டு வெகுதூரம் வந்தபின்னும்&lt;br /&gt;நினைவெல்லாம் சுட்டெரிக்கிறது&lt;br /&gt;அவனது வசீகரமான அழைப்புக்கள்!&lt;br /&gt;&lt;br /&gt;எப்போதுமே என் பெயர் சொல்லிக் கூப்பிடுவான்&lt;br /&gt;அபூர்வமாய் அம்மாவென்றும் அழைப்பான் &lt;br /&gt;அணைத்த கைகளின் கதகதப்பை &lt;br /&gt;முகர்ந்து பார்க்கிறேன்&lt;br /&gt;&lt;br /&gt;உறக்கத்திலிருந்து திடீரென விழித்து&lt;br /&gt;எதை எதையோ வெறித்துப் பார்த்தபின்&lt;br /&gt;கைசூப்பியபடி மீண்டும் ஆலிசின்&lt;br /&gt;உலகிற்குச் சென்றுவிடுவான்&lt;br /&gt;&lt;br /&gt;பகல் இரவு தெரியாது&lt;br /&gt;வாரங்கள் மாதங்களின் சுமைகள் கிடையாது&lt;br /&gt;அவனது உலகிற்குள்தான்&lt;br /&gt;எத்தனை எத்தனை அதிசயங்கள்?&lt;br /&gt;&lt;br /&gt;சிந்துபாத்தின்&lt;br /&gt;சாகஸங்களைச் சொன்னால்தான்&lt;br /&gt;ஒரு உருண்டைப் பருப்புச் சாதம் &lt;br /&gt;உட்செல்லும்&lt;br /&gt;இடையிடையே &lt;br /&gt;”ஃபோன் எப்படி பேசுது&lt;br /&gt;தண்டவாளத்தை யார் செஞ்சாங்க&lt;br /&gt;எறும்பு மூச்சா எங்க போகும்&lt;br /&gt;உதிர்ந்து கொண்டே இருக்கும்&lt;br /&gt;முடிவில்லா அவனது கேள்விகள்&lt;br /&gt;&lt;br /&gt;அவனைப் பார்க்க விழிகள் ஏங்கி&lt;br /&gt;கடைசி ரயிலைப் பிடிக்க ஓடுகிறேன்&lt;br /&gt;இப்படிப்பட்ட தண்டவாளத்தை &lt;br /&gt;யார் செய்தார்கள் என்று யோசித்தபடி..&lt;br /&gt; &lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://2.bp.blogspot.com/_9vV1GQrxDFE/TMbS5ZLITeI/AAAAAAAAAtk/DKuiXWa2yRs/s1600/traintrack.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 213px; height: 320px;" src="http://2.bp.blogspot.com/_9vV1GQrxDFE/TMbS5ZLITeI/AAAAAAAAAtk/DKuiXWa2yRs/s320/traintrack.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5532341075723177442" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://1.bp.blogspot.com/_9vV1GQrxDFE/TMbTUOuQsLI/AAAAAAAAAts/8pSZR_gqUlQ/s1600/untitled.jpg"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 216px;" src="http://1.bp.blogspot.com/_9vV1GQrxDFE/TMbTUOuQsLI/AAAAAAAAAts/8pSZR_gqUlQ/s320/untitled.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5532341536774205618" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;2)&lt;br /&gt;&lt;br /&gt;வெகு தூரத்தில் இருந்து&lt;br /&gt;ஊடுறுவிப் பார்க்கிறாய்&lt;br /&gt;மிகப் பரிச்சியமான&lt;br /&gt;என் சோகங்களின் நிழல்களை...&lt;br /&gt;குரல்வளை இறுக்கப்படும் வேளை&lt;br /&gt;வார்த்தையின்றி பரிதவிக்கிறாய்&lt;br /&gt;உயிர்சிதைவு சிறிது சிறிதாய்&lt;br /&gt;நடந்தேறும் தருணம்&lt;br /&gt;எனக்கான கவிதையை &lt;br /&gt;நீ எழுதத் துவங்குவாய்&lt;br /&gt;எங்குமே சொல்லப்படாத&lt;br /&gt;மயில் இறகு நேசம்&lt;br /&gt;நீரில் அமிழ்த்தப்பட்டு&lt;br /&gt;மூச்சுத் திணறிக் கிடக்கிறது&lt;br /&gt;ஆயினும் சிநேகிதனே&lt;br /&gt;இன்று மட்டும் பேசிவிடு&lt;br /&gt;என் மென் குரலிற்கு உனக்கு&lt;br /&gt;தெரிந்து வகையில் முத்தமிடு&lt;br /&gt;நானும் மழையாகலாம்&lt;br /&gt;&lt;br /&gt;(நன்றி - சாகித்ய அகெதமி நடத்திய கவிதை அரங்கில் வாசிக்கப்பட்ட எனது கவிதைகளை யுகமாயினி இதழில் பிரசுரித்த சித்தனுக்கு)&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/748309637854531092-3600835520020704181?l=umashakthi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://umashakthi.blogspot.com/feeds/3600835520020704181/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=748309637854531092&amp;postID=3600835520020704181' title='6 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/748309637854531092/posts/default/3600835520020704181'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/748309637854531092/posts/default/3600835520020704181'/><link rel='alternate' type='text/html' href='http://umashakthi.blogspot.com/2010/10/blog-post_26.html' title='ஓட்டம்'/><author><name>உமாஷக்தி</name><uri>http://www.blogger.com/profile/15892356572198993991</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='21' src='http://1.bp.blogspot.com/-gipY35ryk84/TlTuZmGcnbI/AAAAAAAAA6w/jFm_Na-18o4/s220/umashakthi%255B1%255D.JPG'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/_9vV1GQrxDFE/TMbSjBnF6EI/AAAAAAAAAtc/UZTravTvE54/s72-c/15-train-track.jpg' height='72' width='72'/><thr:total>6</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-748309637854531092.post-2454693685019625698</id><published>2010-10-15T18:30:00.000-07:00</published><updated>2010-10-15T18:41:54.425-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அனுபவம்'/><title type='text'>வண்ணங்களில் கரையும் கலைஞன்</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://1.bp.blogspot.com/_9vV1GQrxDFE/TLkBTlkr8AI/AAAAAAAAAtE/phe8F0LVX-c/s1600/1122.jpg"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 310px;" src="http://1.bp.blogspot.com/_9vV1GQrxDFE/TLkBTlkr8AI/AAAAAAAAAtE/phe8F0LVX-c/s320/1122.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5528451453589123074" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஆத்மார்தமாக எனக்கு இரு கவிஞர்களை மிகவும் பிடிக்கும், ஒருவர் ‘என் வானத்தில் சாயல் எனக்குத் தெரியாதா? என்பவர் மற்றவர் ‘அவரவர் கைமணல்’ என்று சொல்லியவர். கல்யாண்ஜி என்று கவிதையுலகில் கொண்டாடப்படுகின்ற எழுத்தாளர் வண்ணதாசன் முன்னவர், பின்னவர் தேவதச்சன். வண்ணதாசன் எனும் கலைஞன் அனைவரின் நேசத்திற்கும் உரியவர்.  ஆனால் என் பதின்ம வயதில் அவருடன் சிறு மனப்பிணக்கு கொண்டிருந்தேன். அது அவருக்கே கூடத் தெரியாது. பெரிதான காரணங்கள் ஏதுமற்ற பிணக்கு அது.&lt;br /&gt;&lt;br /&gt;எங்கள் ஊருக்குச் செல்வதென்றால் எப்போதும் எனக்கு சந்தோஷம். எங்கள் ஊரின் ரயில் நிலையம் ஆழமான மனச்சித்திரமாக என்னுள் படிந்திருக்கிறது. தாமிரபரணி ஆறும் சுற்றுத் தெருக்களும், என் தாத்தா வீடும் என் நினைவில் என்றென்றும் நிலைத்திருப்பவை. என்னுடைய சித்தப்பா பரமசிவனின் (பரமன் என்று நண்பர்களால் அழைக்கப்படுபவர்) நெருங்கிய நண்பர் கல்யாணி என்கிற கல்யாணசுந்திரம் என்கிற கல்யாண்ஜி என்கிற வண்ணதாசன். (அத்தனைப் பெயர்களிலும் எனக்குப் பிடித்தது வண்ணதாசன்). &lt;br /&gt;&lt;br /&gt;பதின்ம வயதில் சித்தப்பா வீட்டில் வண்ணதாசன் அவர்களைப் பல முறை பார்த்திருக்கிறேன். அப்போதெல்லாம் வண்ணநிலவன் சிறுகதைகளை நிறைய வாசித்திருந்தேன் முழுத்தொகுப்பாக வண்ணதாசனை வாசித்ததில்லை. சிற்சில கவிதைகளும், கதைகள் மட்டுமே பரிச்சயம். சித்தப்பாவின் நண்பரான அவர் எழுத்தாளர் என்று தெரியும். அந்த வயதில் எழுத்தாளர் என்பவர் நம் கண்பார்வைக்கு அகப்படாதவர், நேரில் பார்க்கவே முடியாத தெய்வீக நபர். தப்பித் தவறி பார்த்தாலும் நம்மிடம் எல்லாம் பேச மாட்டார் என்ற கற்பனையில் இருந்தேன். அதனால் இந்த உயரமான மனிதர் நம்மை நிச்சயம் அலட்சியம் செய்துவிடுவார். மேலும் அவருடைய எழுத்தை சரியாக வாசிக்க வேறு இல்லை. சபித்துவிட்டால் என்ன செய்வது என்ற முன்முடிவுகள் தடுக்க வெகு அருகில் காணக் கிடைத்த கல்யாண்ஜியிடம் துணிந்து பேசும் மனநிலை பல வருடங்கள் வாய்க்கவே இல்லை. அதையும் மீறி சித்தப்பா எதாவது கல்யாணத்தில் கல்யாணி அருகில் இருக்கையில் நான் கடந்து போனால் ’எட்டி இங்க வா, இவுக யாரு தெரியுமா... என்று அறிமுகம் செய்துவைப்பார். அவுகளிடம் ‘கிட்டண்ணன் மக, நிறைய புக்ஸ் எல்லாம் படிப்பா’ என்பார். அப்போதும் வண்ணதாசனைப் பற்றிய மனப்பிம்பம் கலையாதிருக்க அவரிடம் எதாவது உளறி கொட்டிவிடக்கூடாது என்று லேசாக சிரித்து வைத்துவிட்டு அங்கிருந்து நழுவி விடுவேன். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://1.bp.blogspot.com/_9vV1GQrxDFE/TLkBjc5EDVI/AAAAAAAAAtU/0iorNXorCTY/s1600/vannathasan_thumb%5B4%5D.jpg"&gt;&lt;img style="float:right; margin:0 0 10px 10px;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 217px;" src="http://1.bp.blogspot.com/_9vV1GQrxDFE/TLkBjc5EDVI/AAAAAAAAAtU/0iorNXorCTY/s320/vannathasan_thumb%5B4%5D.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5528451726136577362" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பரம சித்தப்பா என்று சொல்லும் போதே இளம் வயதில் கம்பீரமாக வெள்ளைச் சட்டை வெள்ளை வேட்டி அணிந்து கோல்ட் ப்ளேக் சிகரெட் புகைத்தபடி காரசாரமாக எதாவது விவாதத்தில் இருக்கும்  சித்தப்பாவின் முகம் நினைவில் வருகிறது. மனதில் பதிந்த அந்தச் சித்திரமும் அவரின் கனத்த குரலும்,  செயின் ஸ்மோக்கராக இடைவிடாது ஊதும் சிகரெட்ட்டும், ’ஏட்டி’ என்று கூப்பிடுவதும் சில சமயம் எனக்கு எரிச்சலாக இருக்கும். (என்வீட்டில் என்னை யாரும் டீ போட மாட்டார்கள் அம்மா அரசே தான் :) ஆனால் இன்றளவும் எனக்கு மறக்க முடியாத பேருதவியை செய்தவர் அவர்தான். புத்தகப் புழுவான எனக்கு வாசிக்க நிறைய புத்தகங்களை கடையிலிருந்து எடுத்து வந்து தருவார். ஊரிலிருக்கும் வட்டார நூலகத்திற்கு என்னை அழைத்துச் சென்று என் பெரியப்பா மகன் பெயரில் ஒரு கார்ட்டை வாங்கிக் குடுத்து நான் அவர்கள் வீட்டிற்கு வரும் போதெல்லாம் அதை பயன்படித்திக் கொள்ள வழி செய்தார். கம்பராமாயணத் தெருவில் இருந்த என் சித்தப்பா வீட்டு தட்டட்டின் குளிர்ச்சியும், எவ்வளவு வாசித்தாலும் தீராத பக்கங்களும், வாசித்த நீட்சியில் கனவுகளில் அலைந்து திரிந்த களைப்பிலும் தூங்கி விடுவேன். ஊரின் வாசம், நதியின் வாசம், புத்தங்களின் வாசம், சித்தப்பாவின் சலவை செய்யப்பட்ட கதர் சட்டையின் வாசம், சித்தியின் சமையல் வாசம் இவையெல்லாம் மறக்க முடியாதவை. &lt;br /&gt;&lt;br /&gt;ஒரு முறை 15 வயதிருக்கும் என்று நினைக்கிறேன் சித்தப்பாவின் புத்தகங்களிலிருந்து ‘ரெயினீஸ் ஐயர் தெருவை’ களவாடி வந்துவிட்டேன். அவருக்கும் அப்புத்தகம் மனதிற்கு நெருக்கமாக இருந்திருக்கும் போலும். அப்பாவிடம் போன் போட்டுக் புத்தகம் பத்திரமாக இருக்கிறதா என்று கேட்டுவிட்டார்.  ’எடுத்து வரும் போது சொல்லிவிட்டு எடுத்து வருவது தானே, என்ன பழக்கம் இது’ என்று என் அப்பா சத்தப் போட்டார்கள்.   கண்ணீர் மல்க அதை அப்பாவிடம் திருப்பி தந்தேன். அப்போது கூட புத்தகத்தை திருடிவிட்ட குற்றத்திற்காக அழவில்லை பாதி வாசித்திருந்த வண்ணநிலவனை பிரிய முடியாமல் அழுதேன். அப்பா பிடிவாதமாக என்னிடம் புத்தகத்தை பறித்துவிட்டார். அந்த இருவர் மீதும் அப்படி ஒரு கோபம் இதுவரைக்கும் வந்ததில்லை ;))))) இதில் இன்னொரு விஷயம் என்னவெனில் இதுவரை அந்தப் புத்தகத்தை முழுமையாக வாசிக்கவில்லை.  எத்தனை எத்தனை புத்தகங்களையோ பரிசளித்த என் சித்தப்பா ஏன் அந்தப் புத்தகத்தைப் போய் திருப்பிக் கேட்டார். ஒருவேளை நண்பர் யாரிடமாவது இரவல் வாங்கி இருந்திருக்கலாம். அதற்காகத் தான் திருப்பிக் கேட்டிருப்பார் என பிறகு யோசித்துப் பார்கையில் புரிந்தது. ஆனால் அந்த நொடியில் என் தவிப்பும் புத்தகத்தில் நான் மடித்து வைத்திருந்த பக்கத்தில் என் கண்ணீர் கறையை என் சித்தப்பா பார்த்தாரா என்றும் தெரியவில்லை. அதன்பின் அதைப் பற்றி மறந்துவிட்டேன். எப்பவாவது இழக்க நேரிடும் எனது புத்தகத்தை நினைக்கையில் புத்தகம் திருடுவது மாபாதகச் செயல் அல்ல என எடுத்தவரை மன்னித்துவிடுவேன். ;)))     &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://4.bp.blogspot.com/_9vV1GQrxDFE/TLkBcTy32OI/AAAAAAAAAtM/BxmA1UbXwmY/s1600/va3.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 282px; height: 320px;" src="http://4.bp.blogspot.com/_9vV1GQrxDFE/TLkBcTy32OI/AAAAAAAAAtM/BxmA1UbXwmY/s320/va3.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5528451603435608290" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இது நடந்து பல ஆண்டுகள் கழித்து நானும் எழுத ஆரம்பித்துவிட்டேன். சென்னையில் மழை புயல் ரயில்கள் ரத்து என்று எல்லா களேபரங்களையும் மீறி சித்தப்பா மகன் ராஜா கல்யாணத்துக்குச் சென்றிருந்தேன். அங்கு எனக்கு இனிய அதிர்ச்சியாக சித்தப்பா மீண்டும் ஒரு முறை தன் இனிய நண்பரான வண்ணதாசனை எனக்கு அறிமுகப்படுத்தினார். இந்தத் தடவை நான் தயங்கவில்லை. ஏனென்றால் எனக்கு கல்யாணி என்கிற வண்ணதாசன் என்கிற கல்யாண்ஜியை இப்போது நன்றாகத் தெரியும் நிலா பார்த்தலையும் நடுகையையும் இன்னொரு கேலிச் சித்திரமும் பெய்தலும் ஓய்தலும் மற்றும் வண்ணதாசன் கதைகள் என அவரின் படைப்புக்களை நான் வாசித்திருந்தேன்.  வாசிப்பின் மூலமாக அவர் மீது பெரும் மரியாதையும் அன்பும் வைத்திருந்தேன். இம்முறை அந்த மென்மனதினரைப் பார்த்து பயந்து ஒளியவில்லை. ‘பாரு, நீங்க எழுதறீங்களா, நல்ல விஷயம்....தொகுப்பு போட்டிருக்கீங்களா? நான் தலையசைக்கவே, இன்னும் போடலையா..முதல்ல அதைச் செய்யுங்க. என்று அருமையாக என்னிடம் பேசிக்கொண்டிருந்தார். என்னால் சரளமாக அவரிடம் பேச முடியாவிட்டாலும் மிகவும் பிரமிப்பாக இருந்தது. எவ்வளவு பெரிய கவிஞர் இப்படி எளிமையாக இருக்கிறாரே என்று ஆச்சரியப்பட்டேன். இன்றளவும் அந்த ஆச்சரியம் குறையவே இல்லை. &lt;br /&gt;&lt;br /&gt;என்னிடம் ஒரு விசித்திரமான பழக்கம் இருக்கிறது. வெளியுலகில் எனக்கு மிகவும் பிடித்தவர்களை அதிகம் நெருங்க மாட்டேன். ஒரு மரியாதைக்குரிய இடைவெளியில் அவர்களை பார்த்து பார்த்து ரசித்துக் கொண்டிருப்பேன். என் வாழ்க்கையில் இருவர் என் கையருகே நான் பேசி பேசி ஆனந்தப்படும் அளவிற்கு அருகில் இருந்தாலும் எட்ட நின்றுவிட்டேன். அவர்களை நினைத்த மாத்திரத்தில் நெகிழ்ந்துவிடுவேன். நான் வியந்து தீராத அவர்களில் ஒருவர் இயக்குனர் மணிரத்னம், மற்றவர் வண்ணதாசன். என் பார்வையில் இருவரிடமும் ஒரு பொதுவான குணம் ஒன்று உள்ளது. தஙகள் பெருமைகளை ஒருபோதும் தலைக்குள் ஏற்றிக் கொள்ளாதவர்கள். உலகே கொண்டாடினாலும் சிறிய கூச்சத்துடனான ஒரு மென்சிரிப்பை உதிர்த்துவிட்டு தங்களின் அடுத்த வேலையைப் பார்க்கச் சென்றுவிடுவார்கள். &lt;br /&gt;&lt;br /&gt;வண்ணதாசனிடம் நேரில் அதிக வார்த்தைகள் பேசி இருக்காவிட்டாலும் அவ்வப்போது மெயில் அனுப்புவேன். பந்து எரிந்த வேகத்தில் திரும்ப பதில் வரும். ஒவ்வொரு வரியும் கவித்துவமாக இருக்கும். இயல்பாக இனிமையாக ரசனையாக இவரால் எப்போதும் எப்படி இருக்க முடிகிறது என்று எண்ணி வியப்பேன். என் வாழ்நாளில் நான் பெருமையாக கருதுவது ஒரு உன்னத கலைஞனின் ப்ரியத்துக்கு உரியவளாக இருக்கிறேன் என்பதே. ரெயினிஸ் ஐயர் தெரு புத்தகத்தைப் பற்றிய விஷயத்தை பின்னர் அவரிடம் கடிதத்தில் சொன்ன போது மிகவும் கலங்கிப்போய்விட்டார். எனக்கு உடனடியாக குறுஞ்செய்தி அனுப்பினார். என்னுடைய விலாசத்திற்கு ரெயினீஸ் ஐயர் தெரு வெகு சீக்கிரம் வரும் என்றார். அந்த அன்பை நினைத்து நினைத்து நெகிழ்கிறேன். இங்கு புத்தகம் பெரிதல்ல, என்றோ எப்போதோ ஏற்பட்ட சிறு இழப்பை சமன் செய்ய இன்று இப்போது நினைக்கும் அந்த உள்ளத்தின் சிறப்பை எந்த வார்த்தைகள் கொண்டும் கவிதை எழுதிவிட முடியாது. அவர் அவருடைய எல்லாக் க(வி)தைகளைவிட அற்புதமானவர். பொருளியல் சார்ந்த இக்காலகட்டத்தில் ரசனைகளை தக்க வைக்கவே அரும்பாடு படவேண்டியுள்ளது. எப்போதும் எனக்கு ஆதர்சமாக இருப்பவர் வண்ணதாசன் ஒருவர் மட்டுமே.&lt;br /&gt;&lt;br /&gt;”யார் யாரைக் கைவிட்டீர்கள் உங்களில்&lt;br /&gt;என நகரும் முட்களால் கேள்வி கேட்டபடி&lt;br /&gt;அப்பால் சென்றது காலம்”&lt;br /&gt;&lt;br /&gt;- கல்யாண்ஜி&lt;br /&gt;&lt;br /&gt;பின்குறிப்பு :&lt;br /&gt;&lt;br /&gt;கல்யாண்ஜி/ வண்ணதாசனின் கடிதங்களே தனி இலக்கியம் அவை ஏற்கெனவே இரண்டு தொகுதிகள் வந்துள்ளன. மூன்றாவது தொகுதி தொகுக்கப்பட்டு வருகிறது. தங்களிடமுள்ள வண்ணதாசனின் கடிதங்களை, முடிகிற விரைவுடன், நண்பர்கள் கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்பி வைக்கலாம். பிரதி எடுத்த பின் பத்திரமாக திரும்ப அனுப்பி வைப்பார், &lt;br /&gt;&lt;br /&gt;நண்பர்:&lt;br /&gt;திரு. கே.சண்முக சுந்தரம்,&lt;br /&gt;இந்தியன் ஓவர்சீஸ் வங்கி,&lt;br /&gt;களக்காடு-627501&lt;br /&gt;திருநெல்வேலி மாவட்டம்.&lt;br /&gt;கை பேசி: 99442 60299&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/748309637854531092-2454693685019625698?l=umashakthi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://umashakthi.blogspot.com/feeds/2454693685019625698/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=748309637854531092&amp;postID=2454693685019625698' title='15 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/748309637854531092/posts/default/2454693685019625698'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/748309637854531092/posts/default/2454693685019625698'/><link rel='alternate' type='text/html' href='http://umashakthi.blogspot.com/2010/10/blog-post_15.html' title='வண்ணங்களில் கரையும் கலைஞன்'/><author><name>உமாஷக்தி</name><uri>http://www.blogger.com/profile/15892356572198993991</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='21' src='http://1.bp.blogspot.com/-gipY35ryk84/TlTuZmGcnbI/AAAAAAAAA6w/jFm_Na-18o4/s220/umashakthi%255B1%255D.JPG'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/_9vV1GQrxDFE/TLkBTlkr8AI/AAAAAAAAAtE/phe8F0LVX-c/s72-c/1122.jpg' height='72' width='72'/><thr:total>15</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-748309637854531092.post-6056005455813245506</id><published>2010-10-05T20:35:00.000-07:00</published><updated>2010-10-05T21:28:50.215-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சிறுகதை'/><title type='text'>மனச் சுமை</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://2.bp.blogspot.com/_9vV1GQrxDFE/TKv47MD4DmI/AAAAAAAAAs0/rmmaBVRI_VA/s1600/picture+of+woman+and+rose.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 169px; height: 320px;" src="http://2.bp.blogspot.com/_9vV1GQrxDFE/TKv47MD4DmI/AAAAAAAAAs0/rmmaBVRI_VA/s320/picture+of+woman+and+rose.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5524783063633497698" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;அன்று&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அந்த கம்யூட்டர் செண்டரில் பகுதி நேர வேலைக்குச் அம்மா ராகினியுடன் வந்திருந்தாள் காவ்யா. அவள் பெயரை அழைத்த்தும் அம்மாவை அங்கேயே உட்காரச் சொல்லி விட்டு அந்தக் கேபினுக்குள் நுழைந்தாள். &lt;br /&gt;&lt;br /&gt;எம்.டி.சீட்டில் அமர்ந்திருந்தவன் இளமையாக இருந்தான். ஃபோன் பேசிக்கொண்டிருந்தான். அறையின் சுவற்றில் விவேகானந்தரின் அபூர்வமான புகைப்படம் இருந்த்து. அதன் அருகில் பாரதியார் கேலண்டர். டேபிளில் புத்தர் சிரித்தார். அறையின் ஓரத்தில் மரத்தாலான ஒரு ஷெல்ப் இருக்க அதில் புத்தகங்கள் நேர்த்தியாக அடுக்கப்பட்டிருந்தன. &lt;br /&gt;  &lt;br /&gt;’ஹலோ ஆர் யூ ஹியர்? என்றவனின் முகத்தைப் பார்த்து லேசாக புன்னகைத்தாள்.&lt;br /&gt;&lt;br /&gt;எஸ் சார்..என்றாள் தடுமாற்றத்துடன்&lt;br /&gt;&lt;br /&gt;சார்னு எல்லாம் கூப்பிட வேண்டாம் என் பேரு அரவிந்த்...எம்சிஏ முடிச்சு ரெண்டு வருஷம் ஆச்சு...நல்ல வேலை கிடைக்கிற வரைக்கும் சொந்த கால்ல நிக்கணும்னு இந்த செண்டரை ஆரம்பிச்சேன்...இப்ப இதை கொஞ்சம் கொஞ்சமா விரிவு படுத்திட்டிருக்கேன்...உங்களைப் பத்தி சொல்லுங்க காவ்யா&lt;br /&gt;இப்ப என்ன பண்ணிட்டிருக்கீங்க?&lt;br /&gt;&lt;br /&gt;”கம்யூட்டர் சயின்ஸ்....வைஷ்ணவா காலேஜ்ல”&lt;br /&gt;&lt;br /&gt;”கூடப்பிறந்தவங்க?”&lt;br /&gt;&lt;br /&gt;”ரெண்டு பேரு, தம்பி பிரபு தங்கச்சி ப்ரீதி ”&lt;br /&gt;&lt;br /&gt;”அப்பா, அம்மா?”&lt;br /&gt;&lt;br /&gt;”அம்மா ஹவுஸ் வொய்ப் அப்பா சமீபத்துல காலமாயிட்டாங்க....”&lt;br /&gt;&lt;br /&gt;அதற்கு மேல் அவன் எதுவுமே கேட்கவில்லை. வேலையில் சேர்ந்துவிடும் படி சொல்லிவிட்டான். &lt;br /&gt;&lt;br /&gt;அம்மாவுக்கு சமையலில் உதவுவது ப்ரீதி மற்றும் பிரபுவின் சின்ன சின்ன தேவைகளை பூர்த்து செய்வது போக மாலையில் இந்தப் பகுதி நேர வேலையில் சேர்ந்துவிட்டாள்.  &lt;br /&gt;&lt;br /&gt;அன்று வகுப்பு முடிந்து காவ்யா கிளம்பிக்கொண்டிருக்கையில் மழை வருவதைப் போல வானம் இருண்டிருந்தது. அரவிந்த் அவளை வீட்டில் விடுவதாகச் சொன்னான். ”வேண்டாம், வீடு பக்கத்திலதான் வேகமா நடந்தா பத்து நிமிஷம்தான்” என்று சொல்லிவிட்டு நடக்க ஆரம்பித்தாள். ஈரக்காற்றின் சுகம் உடல் முழுவதும் பரவ ஆரம்பித்தது. ஏதோ நினைத்தவளாக பின்னால் திரும்பிப் பார்த்தால் அரவிந்த் பைக்கைத் தள்ளிக் கொண்டு  அவளைத் தொடர்ந்து வந்துகொண்டிருந்தான். அவளை நெருங்கி ஏதும் சொல்லாமல் அருகில் நடந்து வந்தான். பிறகு அவள் முகத்தை ஆழமாகப் பார்த்தான். ஏதோ சொல்ல வருவது போல் இருந்தது. தடுமாற்றம் துல்லியமாகத் அவன் முகத்தில் தெரிந்தது. ஓரிரு நிமிட அவஸ்த்தைக்கு பிறகு ஒன்றுமே சொல்லாமல் மெளனமாக பைக்கில் கிளம்பிவிட்டான்.&lt;br /&gt;&lt;br /&gt;அவன் சொல்லவந்த வார்த்தை என்னவாக இருக்கும் என்று பெரிதாக யோசிக்க வேண்டிய அவசியம் அவளுக்கு இல்லை. அவன் முகமும் அதில் தெரிந்த அவஸ்தையும் அதைத் தெளிவாகச் சொல்லிவிட்டன. காவ்யாவின் உதடுகளில் இயல்பாக ஒரு புன்னகை ஒட்டிக் கொண்டது. உற்சாகத்துடன் வீடு வந்து சேர்ந்தாள்.&lt;br /&gt;&lt;br /&gt;காதல் அவள் வாழ்க்கையில் எட்டிப் பார்த்த்து இப்படித்தான். அரவிந்த் நல்ல சாய்ஸ் என மனம் சொன்னது.  எல்லாம் சரியாக போய்க் கொண்டிருந்த சமயத்தில் அவனுக்கு சாப்ட்வேர் கம்பெனியொன்றில் வேலை கிடைத்தது.   சந்தோஷமான விஷயம்தான் என்றாலும் புனேயில் போஸ்டிங். அரவிந்தை பிரிவது அவளுக்கு உயிர் வலியாக இருந்தது.  &lt;br /&gt;&lt;br /&gt;கடிதங்கள், தொலைபேசி அழைப்புக்கள் என புனேக்கும் சென்னைக்குமான தொலைதொடர்பு இணைப்புகள் அவர்களால் துடிப்பாக இருந்தன. இரண்டு மாதத்திற்கு ஒரு முறை வார இறுதியில் சென்னைக்கு விசிட் அடித்தான். ஆனால் என்ன ஆயிற்றோ தெரியவில்லை. மெல்ல மெல்லக் கடிதம் எழுதுவதை நிறுத்திக் கொண்டான். அவள் தொலைபேசி அழைப்புக்களையும் தவிர்க்க ஆரம்பித்தான். அவனுடைய புறக்கணிப்பிற்குக் காரணம் தெரியாமல் வேதனைப்பட்ட காவ்யா ”பேசு” என்று கெஞ்சி கடிதம் எழுதியதும் கிணற்றில் விழுந்த கல்லானது. புதிர் நிறைந்த களமாக அவளுடைய வாழ்க்கை மாறிப் போயிருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;காரணம் தெரியாத புறக்கணிப்பு மரணத்தை விடக் கொடுமையானது. அரவிந்தின் அலுவலக நம்பரைக் கண்டுபிடித்து வேறு பெயர் சொல்லி அழைத்த போது லைனில் வந்த அவன் பேசியது எல்லாவற்றுக்கும் முற்றுப்புள்ளி வைத்தது. “நீ தான் கால் பண்ணியிருப்பன்னு தெரியும் காவ்யா. உன்னை நான் உண்மையாதான் நேசிச்சேன், ஆனா என்னோட சூழ்நிலை இப்ப சரியில்லை, என்னால எதையும் சொல்ல முடியாது. நீ உன் வழியைப் பாத்துக்க, உன் மனசு எவ்வளவு வேதனைப் படும்னு எனக்குத் தெரியும். ஆனா வேற வழியில்ல. என்னை மன்னிச்சுடு”&lt;br /&gt;அவனே பேசி போனை வைத்துவிட்டான். அவன் குரலில் இதுவரை கேட்டிராத அன்னியமான தொனி இருந்தது. அதன் பிறகு அவனை அந்த எண்ணில் தொடர்பு கொள்ள முடியவில்லை. &lt;br /&gt;&lt;br /&gt;பைத்தியம் பிடித்தவள் போலத் தனிமையில் அவள் மனம் துவண்டு கிடக்கையில் சங்கர் மாமா காவ்யாவின் திருமணத்திற்கான ஏற்பாடுகளுடன் ஊரிலிருந்து வந்தார். ஹரி அவள் விருப்பத்திற்கு மாறாக வாழ்க்கையில் வந்தான். அரவிந்த் பற்றிய எல்லா உண்மைகளையும் மறைக்காமல் சொன்னதும், ‘மறந்திடு காவ்யா எல்லாவற்றையும் கெட்ட கனவாக’ என்று சொன்னவனை ஆச்சரியத்துடன்,, நாளாக ஆகப் பிரியத்துடனும் பார்க்க ஆரம்பித்தாள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://4.bp.blogspot.com/_9vV1GQrxDFE/TKv5ZJ0GBkI/AAAAAAAAAs8/k4smNkTgLlo/s1600/woman+lips.jpg"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 319px;" src="http://4.bp.blogspot.com/_9vV1GQrxDFE/TKv5ZJ0GBkI/AAAAAAAAAs8/k4smNkTgLlo/s320/woman+lips.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5524783578426508866" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;இப்போது&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சஞ்சுவைப் பள்ளியில் விட்டுவிட்டு காரை ரிவர்ஸ் எடுக்கையில் பின்னே தெரிந்த உருவம் காவ்யாவின் கண்ணில் பட்டதும் அவள் மனதில் ஞாபகக் குமிழ் ஒன்று உடைந்தது.  ஒரு நொடி ஒரே நொடி அவள் உடல் சிலிர்த்தது. அவன் அவளைப் பார்க்கவில்லை. பைக்கிலிருந்து இறங்கிக் கொண்டிருந்தான்..&lt;br /&gt;&lt;br /&gt;காரிலிருந்து இறங்கி அவன் அருகில் சென்றாள். முதலில் திணறி, அடுத்த நொடி அடையாளம் தெளிந்து குழப்பமும் மகிழ்ச்சியுமாய் மாறிய அவன் முகபாவத்தை ரசித்தாள். ’காவ்யா எப்படி இருக்கே?” என்றான். &lt;br /&gt;&lt;br /&gt;”இருக்கேன் அரவிந்த். பரவால்லையே பேரெல்லாம் ஞாபகம் வச்சிருக்கீங்க... நீங்க எப்படி இருக்கீங்க?” &lt;br /&gt;&lt;br /&gt;அரவிந்தின் தங்கை குழந்தை சஞ்சுவின் பள்ளியில் படிக்கிறாளாம்.. ராகுல். ஐந்து வயதாகிறதாம். சென்னைக்கு வந்து இரண்டு ஆண்டுகள் ஆகிறது என்றான்.  &lt;br /&gt;&lt;br /&gt;”உன் கணவர் என்ன பண்றார் காவ்யா?”&lt;br /&gt;&lt;br /&gt;”துபாய்ல இருக்கார் அரவிந்த்.”&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அடுத்து என்ன பேசுவது என்று அவன் திணறிக் கொண்டிருக்கையில் பொறுக்க முடியாமல் கேட்டாள். ”ஏன் அப்படி செய்தாய் அரவிந்த் உன்னை விரும்பியதைத் தவிர வேற எந்த தப்பும் நான் செய்யலையே...” என்றாள்.&lt;br /&gt;&lt;br /&gt;அவளுடைய காரின் பானட்டில் கையை பதித்தபடி, ”அது முடிஞ்சு போன விஷயம் அதைப் பத்தி பேசி என்ன கிடைக்கப் போகுது?” என்றான்.&lt;br /&gt;&lt;br /&gt;”என் மனசோட அடி ஆழத்துல அந்த வலி இன்னும் இருக்கு. ஏன் அப்படி செஞ்சே?” &lt;br /&gt;&lt;br /&gt;.......&lt;br /&gt;&lt;br /&gt;”என் மாமா எனக்குத் தெரியாம ஊர்லேர்ந்து வந்து உன்னை மிரட்டினார்னு மட்டும் சொல்லிடாதே...”&lt;br /&gt;&lt;br /&gt;”இல்ல காவ்யா அதில்லை....”&lt;br /&gt;&lt;br /&gt;பின்ன?&lt;br /&gt;&lt;br /&gt;புனே போன முதல் கொஞ்ச நாள் சாதாரணமாத்தான் இருந்தேன்....வேலைல என்னோட பழக்கமான அஸ்வத் என்னோட வாழ்க்கையையே மாத்திட்டான். லீவ் எடுத்துட்டு பூனேக்கு ஓஷோ கம்யூன் செண்டருக்கு போனோம். என்னவோ தெரியலை அங்க நான் என்னை இழந்துட்டேன். நான் வாழ்ந்திட்டு இருக்கற வாழ்க்கைக்கு எந்தவொரு அர்த்தமும் இல்லைன்னு தோணிடுச்சு.....இதை எப்படி விளக்கினாலும் யாருக்கும் புரியாது....நான் வாழற வாழ்க்கையே வேஸ்டுன்னு தோணிடுச்சு. அங்க போனப்பறம் எனக்குள்ள இருந்த தனிமையை யாரோ பெரிய முறத்தால அடிச்சு விரட்டுன மாதிரி இருந்துச்சு காவ்யா....அதுக்கப்பறம் அடிக்கடி அங்க எதாவது ப்ரோக்கிராமுக்கு போகறதும் வாலண்டியரா இருக்கறதுமா இருந்தேன். அங்க பேசற விஷயங்கள், அங்க இருந்த ஆக்டிவிட்டீஸ்ன்னு என்னை கரைச்சிக்கிட்டேன். அந்த சமயத்துலதான் உன்னோட போன் கால்ஸ் எனக்கு எரிச்சலா இருந்துச்சு..... எதை எதையோ தேடி போகணும்னு தோணிச்சு. காதல் அப்போ எனக்கு ரொம்பச் சின்ன விஷயமா தெரிஞ்சுது. சட்டுன்னு உம்மேல இருந்த பிரியம் விலகிடுச்சு...உன்னைய ஏமாத்தனும்ங்கறது என் நோக்கம் இல்ல...சொல்லியும் புரிய வைக்க முடியாது. ஆதான் அப்படி பேசிட்டேன்...”&lt;br /&gt;&lt;br /&gt;அவன் சொல்லி முடித்த்தும் அவன் கண்களையே உற்றுப் பார்த்தாள் காவ்யா.   &lt;br /&gt;&lt;br /&gt;அவள் எதிர்பார்க்காத பதில் இது. நெஞ்சை பல ஆண்டுகள் அரித்துக் கொண்டிருந்த கேள்விக்கு பதில் கிடைத்துவிட்டது. ஆனால் ஏன் கிடைத்தது என இப்போது அவளுக்குத் தோன்றியது. விதவிதமான பூட்டுக்கள் வாழ்க்கை முழுவதும் நம்மை வளைத்திருக்கும், அதற்கான விதவிதமான சாவிகள் இருக்கத்தான் செய்கின்றன. சாவி சிலசமயம் ஏன் கிடைத்தது என நினைக்கத் தோன்றும். இப்படி ஒரு காரணமா? இவனுடைய தத்துவத் தேடல்தான் என்னை நடைப்பிணமாக்கியதா? இந்த பதிலைக் கேட்கவா இத்தனை நாள் காத்திருந்தேன்?&lt;br /&gt;&lt;br /&gt;”என் மேல உனக்கு இன்னும் கோவமா?”&lt;br /&gt;&lt;br /&gt;காவ்யா பெருமூச்சு விட்டாள். ”வாழ்க்கை ரொம்ப பெரிசு அரவிந்த். எது எப்ப எப்படி நடக்கும்னு யாராலும் சொல்ல முடியாது. நாம தான் முடிவு எடுத்துட்டு இருக்கோம்னு நாம நினைக்கறோம். ஆனா எல்லா முடிவுகளும் எங்கயோ யாராலோ தீர்மானிக்கப்பட்டிருக்குன்னு நினைக்கிறேன். இப்படி ஒரு சந்திப்பு நடந்ததையே நான் மறக்க விரும்பறேன். என்னால இனி எதையும் தூக்கி சுமக்க முடியாது.....போதும்! சொல்லிவிட்டு காரில் ஏறி, வேகம் எடுத்து விரைந்தாள்.&lt;br /&gt;&lt;br /&gt;சாலையில் நடந்துக் கொண்டிருந்த ஆயிரம் மனிதர்களில் ஒருவனாக மங்கிக் கொண்டிருந்தான் அரவிந்த்.&lt;br /&gt; &lt;br /&gt;&lt;br /&gt;(நன்றி - நம் தோழி செப்டம்பர் 2010 இதழ்)&lt;br /&gt;&lt;br /&gt;ஓவியம் - அனிமா&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/748309637854531092-6056005455813245506?l=umashakthi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://umashakthi.blogspot.com/feeds/6056005455813245506/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=748309637854531092&amp;postID=6056005455813245506' title='14 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/748309637854531092/posts/default/6056005455813245506'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/748309637854531092/posts/default/6056005455813245506'/><link rel='alternate' type='text/html' href='http://umashakthi.blogspot.com/2010/10/blog-post.html' title='மனச் சுமை'/><author><name>உமாஷக்தி</name><uri>http://www.blogger.com/profile/15892356572198993991</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='21' src='http://1.bp.blogspot.com/-gipY35ryk84/TlTuZmGcnbI/AAAAAAAAA6w/jFm_Na-18o4/s220/umashakthi%255B1%255D.JPG'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/_9vV1GQrxDFE/TKv47MD4DmI/AAAAAAAAAs0/rmmaBVRI_VA/s72-c/picture+of+woman+and+rose.jpg' height='72' width='72'/><thr:total>14</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-748309637854531092.post-8270275362452194323</id><published>2010-09-20T09:33:00.003-07:00</published><updated>2010-09-20T09:37:40.081-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='இவள் புதியவள்'/><title type='text'>மீரா நாயர்</title><content type='html'>&lt;a href="http://3.bp.blogspot.com/_9vV1GQrxDFE/TJeM--DqDjI/AAAAAAAAAsc/ZbI8SpGKMPg/s1600/mira_nair.jpg"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 208px;" src="http://3.bp.blogspot.com/_9vV1GQrxDFE/TJeM--DqDjI/AAAAAAAAAsc/ZbI8SpGKMPg/s320/mira_nair.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5519034881803947570" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பெயர் : மீரா நாயர்&lt;br /&gt;&lt;br /&gt;தொழில் : திரைஇயக்குனர் / தயாரிப்பாளர் (’மீராபாய் பிலிம்ஸ்’).&lt;br /&gt;&lt;br /&gt;வசிப்பிடம் - நியூயார்க் &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சிறு குறிப்பு - ஒரிசா மாநிலத்தின் ரூர்கெலாவில் ஒரு எளிய குடும்பத்தில் மூன்றாவது குழந்தையாக பிறந்தார். மீராவின் தந்தை ரூர்கெலாவில் ஆட்சி அலுவலர் தாய் ஒரு சமூக சேவகி. ஆர்வமும் துடிப்புமிக்க மீராவின் தேடல் இளம் வயதிலேயே தொடங்கிவிட்டது. நான்கு தொலைக்காட்சி ஆவணப்படங்களை இயக்கியுள்ளார்.  இந்திய சினிமாவின் பெருமைக்குரிய பெண் இயக்குனர்களில் முக்கியமானவர் மீரா நாயர்.&lt;br /&gt;&lt;br /&gt;விருது :  மீரா நாயரின் முதல் திரைப்படமான ’சலாம் பாம்பே’ 1988 வெளிவந்து அவரை இந்தியாவின் முக்கியமான இயக்குனராக அடையாளப்படுத்தியது. இத்திரைப்படம் உலகளாவிய புகழும் பல விருதுகளையும் அவருக்குக் கிடைக்கச் செய்தது. கேன்ஸ் திரைப்பட விழாவில் கோல்டன் கேமரா எனும் விருதினையும் பெற்றுத் தந்தது. தவிர சிறந்த வெளிநாட்டுத் திரைப்படத்திற்கான அகாதெமி வருது நியமனத்தையும் பெற்றுத் தந்தது. இதைத் தவிர பல விருதுகளைப் பெற்றிருக்கிறார்.&lt;br /&gt;பெருமை : மீரா நாயரின் கலை‌‌த்துறை சேவை‌க்கு உ‌ரிய ம‌ரியாதையை வழ‌ங்‌கி‌யிரு‌க்‌கிறது இ‌ந்‌தியா அ‌ப்ரா‌ட் எனும் ப‌த்‌‌தி‌ரிகை. நியூயா‌ர்‌க்‌கி‌லிரு‌ந்து வெ‌ளிவரு‌ம் இ‌ந்‌திய நா‌ளிதழான ’இ‌‌ந்‌தியா அ‌ப்ரா‌ட்’, ஒ‌வ்வொரு வருடமு‌ம் ‌சிற‌ந்த ம‌னித‌ர் ஒருவரை தே‌ர்‌ந்தெடு‌த்து கவுர‌வி‌க்‌கிறது. 2007-ம் ஆண்டுக்கான விருதை மீரா நாயருக்கு வழங்கி கெளரவப்படுத்தியுள்ளது. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அவர் இயக்கியுள்ள் திரைப்படங்களில் காமசூத்ரா, சலாம் பாம்பேயும், மான்சூன் வெட்டிங்க்கும் குறிப்பிடத் தக்கவை.  &lt;br /&gt;&lt;br /&gt;‘காமசூத்ரா’ ஆண்களே எடுக்கத் தயங்கும் கதையை சிறிதும் விரசமின்றி திரைகதை எழுதி இயக்கியுள்ளார். 16 நூற்றாண்டை கதைக்களமாக வைத்து எடுக்கப்பட்ட இத்திரைப்படம் அதுவ் வெளிவந்த காலகட்டத்தில் பெரிதும் பரபரப்பாக பேசப்பட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;’சலாம் பாம்பே’ வீதியோரத்துச் சிறுவனின் துயர் மிகுந்த முகத்தில் அறைந்தாற் போல் பதிவு செய்திருப்பார். இத்திரைப்படம் முக்கியமான trend setter ஆகவும் இவ்வகையான திரைப்படங்களுக்கு முன்மாதிரியாகவும், இன்றளவும் கிளாசிக்காக கருதப்படுகிறது, சலாம் பாம்பே வெற்றியில் கிடைத்த பணத்தை அவர் வீதியோர சிறுவர்கள் நலனுக்காக பாலக் ட்ரஸ்ட் எனும் அமைப்பைத் துவக்கி தெருவோரக் குழந்தைகனின் நலனுக்காக அதை பயன்படுத்தினார்.&lt;br /&gt;&lt;br /&gt;’மான்சூன் வெட்டிங்’ குறைந்த செலவில் இரண்டு நாட்கள் ஒத்திகையும், முப்பது நாட்கள் படப்பிடிப்பில் திரையாக்கம் செய்யப்பட்ட படம். தில்லியின் உயர்மட்ட பஞ்சாபிக் குடும்பம் ஒன்றில் நடைபெறும் திருமணத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்டது.  .&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/_9vV1GQrxDFE/TJeNbdQVenI/AAAAAAAAAss/ZZVg4xW4fcg/s1600/Namesake-web.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 254px;" src="http://4.bp.blogspot.com/_9vV1GQrxDFE/TJeNbdQVenI/AAAAAAAAAss/ZZVg4xW4fcg/s320/Namesake-web.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5519035371214961266" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மீரா நாயர் தன் தன்னுடைய டாகுமெண்ட்ரி படங்கள் மற்றும் திரைப்படங்கள் குறித்து ஒரு பேட்டியில் பேசுகையில்,&lt;br /&gt;&lt;br /&gt;கேள்வி : எது உங்களை திரைப்படங்கள் இயக்கத் தூண்டியது? உங்களுடைய குடும்பத்தார் இதை எப்படி எதிர் கொண்டார்கள்?&lt;br /&gt;&lt;br /&gt;மீரா நாயர் : நான் ஆவணப் படங்களை இயக்க ஆரம்பித்த காலகட்டத்தில் எங்கள் வீட்டாருக்கு அதைப் பற்றி எதுவுமே தெரியாது. டாகுமெண்ட்ரி என்றால் என்ன? யாருக்கும் தெரிந்து கொள்ள ஆர்வம் இல்லை. என்னுடைய அமமாவிற்கு நான் செய்து கொண்டிருந்த வேலையைப் பற்றி எதுவுமே புரியவில்லை இப்படி டாகுமெண்டரி படங்கள் எடுப்பதற்காகவா இவளைப் படிக்க வைத்தேன் என்று குறைபடுவார்கள் ஐந்து வருடங்கள் அப்படியே பறந்துவிட்டது. கிட்டத்தட்ட நான் ஒருத்தி இருப்பதையே அவர்கள் மறந்துவிட்டார்கள். என்னுடைய முதல் திரைப்படம் ’சலாம் பாம்பே’ வெளிவந்தது. கேன்ஸ் திரைப்பட விழாவிற்கு என்னுடன் வந்த என் பெற்றோர்கள் அப்போதுதான் நான் செய்து கொண்டிருந்த விஷயங்களைப் பற்றி ஓரளவு தெரிந்து கொண்டார்கள் அன்றிலிருந்து இன்றுவரை எனக்கு முழுக்க முழுக்க ஆதரவாக உள்ளார்கள்.”&lt;br /&gt;&lt;br /&gt;கேள்வி : உங்களுடைய திரைப்படங்கள் அழகியலுடன் நிறைய கதாபாத்திரங்களையும் ஆழமான விஷயங்களை உள்ளடக்கியுள்ளது. வெகு இயல்பாக சம்பவங்கள் கதையை நகர்த்திச் செல்கின்றன. எப்படி இது சாத்தியமாகிறது?&lt;br /&gt;&lt;br /&gt;மீரா நாயர் : ஆமாம்..... சர்க்கஸைப் போன்ற இந்த வாழ்க்கையை நான் மிகவும் விரும்புகிறேன். டாக்குமெண்ட்ரி படங்களின் பின்னனியிலிருந்து நான் வந்ததால் எனக்கு புனைவே விட உண்மைகளே எப்போதும் வலிமையாக இருப்பதாகத் தோன்றும். அப்படியே அசாதாரண கற்பனை விஷயங்கள் எடுக்க நேர்ந்தாலும் சாதாரண உண்மையின் சாயல்கள் அதில் கலந்திருக்கும்படி பார்த்துக் கொள்வேன். &lt;br /&gt;&lt;br /&gt;கேள்வி : எது உங்களை திரை இயக்குனராக ஆக்க விரும்பியது?&lt;br /&gt;&lt;br /&gt;மீரா நாயர் : அரசியல் நாடகக் குழுவொன்றில் புரட்சிக் கருத்துக பேசும் நடிகையாகத்தான் முதலில் இருந்தேன். எப்போதுமே ஒரு கேள்வி என்னை அரித்துக் கொண்டிருந்தது. கலையை வைத்துக் கொண்டு உலகை மாற்ற முடியுமா என்பதுதான் அது. ஆனால் ஒரு நடிகையாக் அதை செயல்படுத்தவே முடியாது என்று தெரிய வந்தது. ஏனென்றால் நடிகைகள் எப்போதும் மற்றவர்களுடைய பார்வையைத் தான் வெளிப்படுத்துவார்கள். நம்முடைய சொந்த கருத்துக்கள் எடுபடாது. அப்போதுதான் ஹார்வர்ட்டுக்கு ஸ்காலர்ஷிப் கிடைத்து படிக்கவந்தேன். அதில் நடிப்புத் துறை தான் கிடைத்தது ஆனால் எனக்கு அதில் அவ்வளவு ஆர்வமில்லை. ஹார்வேர்டடில் அடுத்து முக்கியமான துறை டாக்குமெண்ட்ரி திரையாக்கம் என்று தெரிந்து நிம்மதியாக உணர்ந்தேன். உடனே அதில் சேர்ந்து விட்டேன். எனக்கு எப்போதும் உள்ளுணர்வு செயல்பட்டுக் கொண்டே இருக்கும். அதன் பார்வையில்தன் எல்லா மனிதர்களோடு வேலை செய்கிறேன், அந்த பார்வையின் வெளிச்சத்தில்தான் வாழ்க்கைப் பற்றிய கதைகள் சொல்லி வருகிறேன். அதனாலேயே டாகுமெண்டரி படங்களை ஏழு வருடங்கள் எடுத்துக் கொண்டிருந்தேன். அதன் பின் இத்தகைய படங்களுக்கான ஆடியன்ஸைத் தேடி களைத்துவிட்டேன். எனக்கு நிறைய ஆடியன்ஸ் வேண்டியிருந்தது. எனவே திரைப்படங்கள் எடுக்க ஆரம்பித்தேன்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/_9vV1GQrxDFE/TJeNIlhscHI/AAAAAAAAAsk/hL3KcBJl9v8/s1600/mira_nair_001_110106.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 214px; height: 320px;" src="http://4.bp.blogspot.com/_9vV1GQrxDFE/TJeNIlhscHI/AAAAAAAAAsk/hL3KcBJl9v8/s320/mira_nair_001_110106.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5519035047017738354" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கேள்வி : பெண் இயக்குனராக அதிக போராட்டங்களை சந்தித்திருக்கிறீர்களா?&lt;br /&gt;மீரா நாயர் : போராட்டம் பெண் என்ற வகையில் இருந்ததில்லை. கனவுகளை, ஆர்வங்களை தக்க வைத்துக் கொள்வதுதான் பெரும் போராட்டமாக எப்போதும் இருக்கிறது. என் மனசு என்ன சொல்கிறதோ அதை மட்டும்தான் நான் செய்து கொண்டிருக்கிறேன். என்னால் இதை செய்ய முடியுமா முடியாதா என்றெல்லாம் நான் யோசித்துக் கொண்டிருக்க மாட்டேன். என்னுடைய வளர்ப்பு முறையோ என்னவோ எதற்கும் அஞ்சாத தன்மை எதையும் செய்ய முடியும் என்ற நம்பிக்கை இவை இரண்டும் மனதில் ஆழமாகப் பதிந்துள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கேள்வி : உங்களுக்கான திரைப்படங்களை எப்படி தேர்வு செய்கிறீங்கள்?&lt;br /&gt;&lt;br /&gt;மீரா நாயர் : திரைப்படம் இயக்கும் வாய்ப்பு தேடி வரும் போது அதில் என்னால் ஒன்ற முடியவில்லை எனக்கும் அதற்கும் சம்மந்தம் இல்லை என்று தோன்றிவிட்டால் அதில் நான் ஈடுபடவே மாட்டேன். அதை செய்ய வேறு யாராவது இருப்பார்கள். அதை நான் தொடவே மாட்டேன். ஆனால் என்னால் மட்டுமே செய்யக் கூடியது என நான் நினைத்துவிட்டால், மற்றவர்கள் யாராலும் அதை செய்ய முடியாது என்றும் நம்பினால், அதை உடனே செய்துவிடுவேன்.&lt;br /&gt;&lt;br /&gt;கேள்வி :  எது உங்களை இயக்க ஆர்வப்படுத்தும்? தவிர்க்க முடியாத அளவிற்கு எது உங்களை திரைப்படங்கள் எடுக்கத் தூண்டுகிறது?&lt;br /&gt;&lt;br /&gt;மீரா நாயர் : உண்மை எப்போதும் என்னை ஈர்க்கும். நீங்கள் அதை நோக்கிச் சென்றால் எங்கிருந்தோ அது தானே வந்து சேரும். என் திரைப்படங்களின் ஆதாரமாக இருப்பது இதுவே. என்னால் இதை தவிர்க்கவே முடியாது. ஒரு வசனம் அல்லது அந்த முழுக் கதையும் உண்மைச் சம்பவமாக இருந்தால் அது ஒரு பெரிய விஷயம். வாழ்க்கையின் சுழற்சியை நான் ரசிக்கிறேன். அதை என்னுடைய பார்வையில் சொல்ல ஆசைப்படுகிறேன். என் திரைப்படங்கள் காண்பவரின் ஆன்மாவைத் தொடவில்லையென்றால் அதை முழுக்க முழுக்க தோல்விப் படமென்றே சொல்வேன்.&lt;br /&gt;&lt;br /&gt;மீரா நாயர் மாற்றுச் சினிமா முயற்சிகள் ஈடுபடுவதில்லை மாறாக அனைத்து தரப்பு மக்களும் பார்த்து ரசிக்கத்தக்க படங்களை இயக்குவதையே விரும்புகிறார். கலைத்தன்மை சற்றும் குறையாத வருவாய் தரத் தக்க படங்களே அவரின் வெற்றியின் ரகசியம். &lt;br /&gt;&lt;br /&gt;ஹாலிவுட் திரைப்படங்களை இயக்குவதற்கான வாய்ப்புப் பெற்ற ஒரே இந்தியப் பெண் இயக்குனர் இவர். ஆனால் தன்னால் சுயமாக அங்கு செயல் பட முடியாது விருப்பமில்லாத உடன்படிக்கைகள் தேவையற்ற அழுத்தங்கள் ஏற்பட நேரும் என்று யோசித்து அந்த வாய்ப்புக்களை மறுத்துவிட்டார். &lt;br /&gt;&lt;br /&gt;இந்திய இயக்குனராக மட்டும் இல்லாமல் உலகத் திரைப்பட இயக்குனரான மீரா நாயர் தன் கனவுகளை பின்பற்றி தன் பயணத்தை அர்த்தமாக்கியுள்ளார். சினிமா எனும் அற்புத ஊடகத்தின் மூலமாக கோடிக்கணக்கான மக்களை அழ வைக்கவும் புன்னகைக்கவும் செய்ய அவரால் முடிந்திருக்கிறது.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/748309637854531092-8270275362452194323?l=umashakthi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://umashakthi.blogspot.com/feeds/8270275362452194323/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=748309637854531092&amp;postID=8270275362452194323' title='8 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/748309637854531092/posts/default/8270275362452194323'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/748309637854531092/posts/default/8270275362452194323'/><link rel='alternate' type='text/html' href='http://umashakthi.blogspot.com/2010/09/blog-post_20.html' title='மீரா நாயர்'/><author><name>உமாஷக்தி</name><uri>http://www.blogger.com/profile/15892356572198993991</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='21' src='http://1.bp.blogspot.com/-gipY35ryk84/TlTuZmGcnbI/AAAAAAAAA6w/jFm_Na-18o4/s220/umashakthi%255B1%255D.JPG'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/_9vV1GQrxDFE/TJeM--DqDjI/AAAAAAAAAsc/ZbI8SpGKMPg/s72-c/mira_nair.jpg' height='72' width='72'/><thr:total>8</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-748309637854531092.post-4557832493128103542</id><published>2010-09-05T12:32:00.000-07:00</published><updated>2010-09-05T12:36:28.571-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='வாசிப்பு'/><title type='text'>ஜெ.சைதன்யாவின் சிந்தனை மரபு</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://2.bp.blogspot.com/_9vV1GQrxDFE/TIPw4Pxc86I/AAAAAAAAAsM/X6AQn9UPiW0/s1600/tamil_123_viruba_Images_Books_Fpage_VB0002873.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 207px; height: 320px;" src="http://2.bp.blogspot.com/_9vV1GQrxDFE/TIPw4Pxc86I/AAAAAAAAAsM/X6AQn9UPiW0/s320/tamil_123_viruba_Images_Books_Fpage_VB0002873.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5513515217928909730" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஜெயமோகனின் படைப்புக்களில் நான் வாசித்தவற்றுள் வித்யாசமானதும் அவருடைய சாயல்கள் அதிகமின்றியும் இருந்த புத்தகங்கள், ‘அனல்காற்று’ மற்றும் ‘ஜெ.சைதன்யாவின் சிந்தனை மரபு’  ’அனல்காற்றில்’ காதல் மற்றும் காமத்தின் தீவிர நிலையை எழுத்துக்களுக்கு வலுக்கும்படியாக சொல்லியிருப்பார். ஜெ.சைதன்யாவின் சிந்தனை மரபு முற்றிலும் மாறுபட்டு மயில் இறகைக் கொண்டு எழுதிவிட்டாரோ எனும்படியான மென்மையான எழுத்துக்களால் ஆனது.    &lt;br /&gt;&lt;br /&gt;’குழல் இனிது, யாழ் இனிது என்ப தம் மக்கள்&lt;br /&gt;மழலைச் சொல் கேளாதவர்’ எனும் குறளை பள்ளி நாட்களில் நாம் வாசித்திருப்போம். அதன் உண்மையான பொருளை நம் பிள்ளைகளின் மூலம்தான் முழுமையாக புரிந்து கொள்கிறோம். அத்தகைய புரிதல் நிலையை நேர்த்தியாக பதிவு செய்துள்ளார் எழுத்தாளர். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஜெ.சைதன்யாவைப் பற்றி ஆசிரியரும் பிரதம சீடருமாக அவரின் தந்தை மிகவும் அழகாக அறிமுகம் செய்துள்ளார். இதுவரை பிரதம சீடரின் தீவிர வாசகியாக இருந்த இக்கட்டுரையாளர் புத்தகத்தை வாசிக்கையில் எழுத்தாளரைப் பின் தள்ளிவிட்டு அவர் படைத்த காவியங்களில் அதி அற்புதமான ஜெ.சைதன்யாவை மிகவும் நேசிக்க ஆரம்பித்துவிட்டார். குழந்தைகளின் கள்ளம் கபடமில்லாத உலகிற்கு கண்ணுக்குத் தெரியாத மெல்லிய நூலால் இரண்டு மணி நேரம் அழைத்துச் சென்றுவிட்டார்கள் ஜெ.சைதன்யாவும் அவரின் பிரதம சீடராகிய எழுத்தாளரும். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஜெ.சைதன்யாவின் குழந்தைப் பருவத்தை எளிய அறிமுகத்துடன் ஆரம்பித்து, பின் அவரது கல்வி, சிந்தனை மரபு, மொழி, நட்பு, இலக்கியம், சுயம், இறை, விலங்குலகம் மற்றும் தாய்மைப் பற்றி விளக்கி முடித்துள்ளார். ஜெ.சைதன்யாவின் ஒவ்வொரு காலகட்ட வளர்ச்சியை ஒரு எழுத்தாளர் மற்றும் பிரதான சீடர் என்பதையும் விட பேரன்புமிக்கத் தந்தையாக மிகவும் பெருமிதத்துடன் பதிவு செய்கிறார். அவ்வப்போது அடக்கமாக தன்னை வெளிப்படுத்தி சுயஎள்ளலுடன் எழுதியவற்றை கட்டுரையாளர் மிகவும் ரசித்தார். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஜெ.சைதன்யாவின் உலகம் அன்பு மயமானது. அவர் நாக்குட்டிகளை செல்லம் கொஞ்சுவது, மியாவிற்கு மியா என்று பெயர் வைப்பது, குட்டி குட்டி பொம்மைக் குழந்தைகளைப் பராமரித்து அவர்கள் உடல்நிலையைப் பேணிவது, பள்ளிக்குச் செல்ல அடம்பிடிப்பது பின்னர் அந்தப் பள்ளியின் விதிகளால் எரிச்சலடைந்து கனவு மின்னும் கண்களுடன் மொபெட்டில் பெரிய பெண்ணாகி எழுத்தாளாராகிய பிரதம் சீடருக்கு நல்லா அப்பா என்று நிறைய தடவை சர்டிபிகேட் குடுப்பது, மழலை மொழியில் உள்ளத்தைக் கொள்ளை கொள்வது என்று சொல்லிக் கொண்டே போகலாம். அள்ளி அணைத்திட ஆசையை ஏற்படுத்திக் கொண்டே இருக்கும் பாப்பூ எங்கோ சிரித்தபடி விளையாடிக் கொண்டிருக்கும் காட்சி மனத்திரையில் இன்னும் கூட ஓடிக் கொண்டிருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;ஜெ.சைதன்யாவின் மழலை மொழி மிகவும் புதுமையானது. ஜு எனும் வார்த்தைப் பிரயோகம் அவருக்கு மிகவும் பிடிக்கும் போலும். க்கூளுக்குப் போய் மிஸ்ஸோட பொண்ணு ஜுகந்தியை பாப்பா ஏன் கிள்ளினாள் என்றே தெரியவில்லை. பிரதம சீடரான அவர் தந்தை அவரை எலுகேஜ்ஜியில் சேர்த்த பின்பு ஜெ.சைதன்யா இல்லாத பொழுதுகளில் தனிமையில் என்ன செய்திருப்பார் என்றும் தெரியவில்லை. புதுப் புது வார்த்தைகளை அழகாக உருவாக்கிய ஜெ.சைதுவின் மொழிப் புரட்சி மிகவும் நுட்பமானது. ஜெ.சைதன்யாவின் செய்கைகளை வைத்தே அவரின் குரல் வளத்தை கட்டுரையாளரால் ஊகிக்க முடிகிறது. ’மிஸ் ஐ வாண்ட் டூ கோ ரீஸஸ்’ என்று  அச்சின்னஞ்சிறு மழலையின் குரலோசையை வாசிக்கையில் கேட்க மகிழ முடிகிறது. அவரின் தாயார் திருமதி அருணாவிடம் தினம் சூடன் சுற்றிப் போடும்படி சொல்ல வேண்டும் என்று கட்டுரையாளர் நினைத்தார். &lt;br /&gt;&lt;br /&gt;ஜெ.சைதன்யா பிற்காலத்தில் தந்தையாரை விட மேலதிக அறிவாற்றலுடன் திகழ்வார் என்பதற்கு அவரின் பிரதம சீடராகிய தந்தையின் பதிவில் நன்றாகத் தெரிகிறது. செ.சைதுவின் பேச்சும் சிரிப்பும் அறிவாற்றலும் கருணையும் ஸ்நேகமும் கேள்விகளும் அவரின் அறிவு வளர்ச்சியை பிரதிபலிக்கும் அற்புதமான வெளிப்பாடுகள். கேள்விகளால் ஆன அவரது உலகம் சீக்கிரம் விடைகளாய் ஆனவுடன் சற்றே அலுத்துவிடும். ஆனால் அவருக்கு மற்றொரு உலகம் காத்திருக்கிறது.  அது புத்தகங்களால் ஆன உலகம். பிரதம் சீடரின் மூலம் அது நிச்சயம் வாய்க்கும். அப்போது அவர் ஜெயமோகன் சிந்தனை மரபை எழுதக்கூடும். அந்நிலையில் ஜெ.சைதன்யாவின் பிரதம சீடர் அடையப் போகும் மகிச்சியான தருணத்தை கட்டுரையாளர் கற்பனையில் கண்டு மகிழ்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;பின்குறிப்பு :&lt;br /&gt;&lt;br /&gt;மிகவும் மனம் நெகிழ்ந்த நிலையில் இதை எழுதுகிறேன் ஜெ, நீங்கள் எழுதிய கன்யாகுமரியை முதன் முதலில் வாசித்த போது அடைந்த மகிழ்ச்சியை இப்புத்தகத்தை வாசித்து மீண்டடைந்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நூல் - ஜெ.சைதன்யாவின் சிந்தனை மரபு&lt;br /&gt;ஆசிரியர் - ஜெயமோகன்&lt;br /&gt;வெளியீடு :&lt;br /&gt;வம்சி புக்ஸ்&lt;br /&gt;19, டி எம் சாரோன்&lt;br /&gt;திருவண்ணாமலை – 606 601&lt;br /&gt;தொலைபேசி – 9443222997&lt;br /&gt;விலை ரூ – 50&lt;br /&gt;&lt;br /&gt;” எழுத்தாளர் ஜெயமோகன், அவருடைய மகள் ஜெ.சைதன்யா பற்றிய தொடர் அவதானிப்புக்களை நூல் வடிவில் தந்துள்ளார். குழந்தை மனம் மெய்ஞானத்தைத் தொடும் சில கணங்கள் இதில் இருப்பதால் இதுவொரு பேரிலக்கியம்”&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/748309637854531092-4557832493128103542?l=umashakthi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://umashakthi.blogspot.com/feeds/4557832493128103542/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=748309637854531092&amp;postID=4557832493128103542' title='16 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/748309637854531092/posts/default/4557832493128103542'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/748309637854531092/posts/default/4557832493128103542'/><link rel='alternate' type='text/html' href='http://umashakthi.blogspot.com/2010/09/blog-post_05.html' title='ஜெ.சைதன்யாவின் சிந்தனை மரபு'/><author><name>உமாஷக்தி</name><uri>http://www.blogger.com/profile/15892356572198993991</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='21' src='http://1.bp.blogspot.com/-gipY35ryk84/TlTuZmGcnbI/AAAAAAAAA6w/jFm_Na-18o4/s220/umashakthi%255B1%255D.JPG'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/_9vV1GQrxDFE/TIPw4Pxc86I/AAAAAAAAAsM/X6AQn9UPiW0/s72-c/tamil_123_viruba_Images_Books_Fpage_VB0002873.jpg' height='72' width='72'/><thr:total>16</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-748309637854531092.post-5071814446871809469</id><published>2010-08-26T10:27:00.000-07:00</published><updated>2010-08-26T10:50:26.764-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='உலக சினிமா'/><title type='text'>All About My Mother</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://1.bp.blogspot.com/_9vV1GQrxDFE/THaoRN2QErI/AAAAAAAAAr0/PPk8HGvqE88/s1600/amb+title.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 189px; height: 267px;" src="http://1.bp.blogspot.com/_9vV1GQrxDFE/THaoRN2QErI/AAAAAAAAAr0/PPk8HGvqE88/s320/amb+title.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5509776207862829746" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மானுவ்லா தன் பதின்ம வயது மகன் எஸ்டிபனுடன் வாழ்ந்து வருகிறாள். உடல் உறுப்பு தானம் செய்ய பரிந்துரைக்கும் ஒருங்கிணைப்பாளராக மருத்துவமனையில் பணியாற்றுகிறாள். வேலை நேரம் போக மகனுடன் நேரத்தை செலவழிப்பாள். தன்னுடைய தந்தையைப் பற்றி எஸ்டிபன் கேட்கும் போதெல்லாம் எதாவது காரணம் சொல்லி தட்டிக் கழித்துவிடுவாள். நீ பிறப்பதற்கு வெகு நாள் முன்பே அவர் இறந்துவிட்டார் என்று அவள் கூறுவது பொய் என்று எஸ்டிபனுக்கு நன்றாகத் தெரியும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;எஸ்டிபன்னுடைய ஆசை கனவு எல்லாம் தன் தந்தையை பார்ப்பது ஒன்று மட்டுமே. இவ்வாறு இருக்கையில் அவன் தன் பதினெட்டாவது வயது பிறந்த நாளில் ஒரு புத்தகம் எழுதி அதைத் தன் அம்மாவிடம் குடுக்க ஆசைப்படுகிறான். அதில் அப்பாவுக்கான கடிதத்தையும் எழுதுகிறான்.. இளம் வயதில் அமெச்சூர் நாடக மன்றம் ஒன்றில் நடித்தபடி மிகவும் சிரமத்துடன் தன்னை வளர்த்து ஆளாக்கிய அம்மாவைப் பற்றியும் அப்புத்தகத்தில் எழுதி வருகிறான். அவளிடமே அவளைப் பற்றிய விஷயங்க்ளை கேட்டு தினம் இரவு தூங்கப் போகும் முன் அழகான டைரியில் புத்தகத்திற்கான விஷயங்களை எழுதுவான்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://3.bp.blogspot.com/_9vV1GQrxDFE/THan04SPcaI/AAAAAAAAArc/ZeG9BJ9eWTg/s1600/abm2.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 301px; height: 168px;" src="http://3.bp.blogspot.com/_9vV1GQrxDFE/THan04SPcaI/AAAAAAAAArc/ZeG9BJ9eWTg/s320/abm2.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5509775721038311842" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பிறந்த நாள் அன்று மகனுக்கு விருப்பமான விஷயங்களை எல்லாம் பார்த்து பார்த்துச் செய்கிறாள் மானு. அவனுக்குப் பிடித்த புகழ் பெற்ற நாடக நடிகையின் காட்சிக்கு அவனை அந்த மழை இரவில் அழைத்துப் போகிறாள். துன்பியல் நாடகமான அதை கண்ணீருடன் அவள் பார்த்துக் கொண்டிருப்பதைப் காண்கிறான் மகன். நாடகம் முடிந்தது மழை வலுக்கிறது. நடிகையிடம் கையெழுத்துவ் வாங்க ஆசைப்படுகிறான் அவன். அரங்கின் வெளியே அவர்கள் காத்திருக்க நடிகையின் கார் வெளிப்படுகிறது. நடிகையின் பெயரை அழைத்தபடி எஸ்டிபன் காரின் பின்னால் ஓடுகிறான். ஆனால் அந்தக் கார் நிற்கவில்லை. காரின் பின் கண்ணாடி வழியே இளைஞன் ஒருவன் ஓடி வருவதைப் பார்த்தும் வேறொரு மன நிலையில் இருந்த நடிகை காரை நிறுத்தாமல் வேகமெடுத்துச் செல்கிறாள். மழை வலுக்க, அச்சமயத்தில் எதிர்பாராமல் மற்றொரு கார் வேகமாக வந்து எஸ்டிபனை மோதித் தள்ளியது. கண் முன்னே பெற்ற மகன் விபத்துக்குள்ளானதைப் பார்த்த மானுவ்லா அழுது கொண்டே ரத்த வெள்ளத்தில் கிடந்த அவனிடம் ஓடி வருகிறாள்.&lt;br /&gt;&lt;br /&gt;மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பலன் அளிக்காமல் தன் பிறந்த நாள் அன்றே இறந்தும் போகிறான் எஸ்டிபன். அழக் கூட தெம்பற்று மானுவலா உடைந்து போகிறாள். அவளைத் தோழி தேற்றி அவனுடைய உருப்புகளை முக்கியமாக இதயத்தை ஒருவருக்கு தானமாக குடுக்கச் சொல்கிறாள். வாழ்நாள் முழுவதும் மற்றவர்களுக்கு இவ்விதயத்தை எடுத்து சொன்னவளுக்கு தன் சொந்த மகன் என்றதும் முதலில் தயக்கம் எழுந்தாலும் பின் தன் மனதைக் கட்டுப்படுத்து உறுப்பு தான சம்மதம் என்று கையெழுத்துப் போட்டுத் தருகிறாள். தனிமையில் மகன் எழுதிய புத்தகத்தை வாசித்து அழுதும் உண்ணாமல் உறங்காமல் அவன் நினைவுகளில் ஆழ்ந்து கிடந்தாள்.&lt;br /&gt;&lt;br /&gt;திடீரென்று அவள் மகனின் இதயம் துடித்துக் கொண்டிருக்கும் மனிதனைப் பார்க்க ஆசைப்பட்டு மருத்துவமனை லெட்ஜரில் விபரங்கள் சேகரித்து அந்த ஊருக்குக் கிளம்பிச் செல்கிறாள். அது அவள் இனி ஒரு போதும் இங்கு வரக் கூடாது என முடிவெடுத்து விட்டுச் சென்ற ஊர். இளமையில் நாடக நடிகையாக இருந்து ஒருவனை காதலித்து அவனால் குழந்தையும் பெற்று அவனின் மற்ற காதல்களைக் கண்டு சகித்துக் கொள்ள முடியாமல் தப்பித்து ஓடி வந்த ஊர்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://2.bp.blogspot.com/_9vV1GQrxDFE/THan-VWUAHI/AAAAAAAAArk/wdklXH4ezso/s1600/abm.jpg"&gt;&lt;img style="float:right; margin:0 0 10px 10px;cursor:pointer; cursor:hand;width: 281px; height: 179px;" src="http://2.bp.blogspot.com/_9vV1GQrxDFE/THan-VWUAHI/AAAAAAAAArk/wdklXH4ezso/s320/abm.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5509775883458838642" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மகனின் இதயத்தால் உயிர் பிழைத்த மனிதனை பார்த்து சிறிது ஆறுதல் அடைகிறாள். பழைய தோழி ஒருத்தியை சந்திக்கிறாள். அவள் ஒரு அரவாணி. மானுவ்லாவை பிரியமுடன் வரவேற்று வீடு எடுத்துத் தருகிறாள். நாடக நடிகையின் மகளும் நடிகையும் அந்த ஊரில் தான் இருக்கிறாள். அவர்களிடமே வேலைக்கு சேருகிறாள் மானு. போதைக்கு அடிமையாகி இருக்கும் நடிகையின் மகளால் நடிகைக்கு மனத்துயர். அடிக்கடி காணாமல் போகும் மகளைக் கண்டுபிடிப்பதே அவளுடைய நேரம் சரியாக இருக்கும். எதாவது இருட்டுச் சந்தில் புகைத்துக் கொண்டிருக்கும் மகளைப் பார்த்து மனம் ஒடிந்து போவாள். எவ்வளவு முயன்றும் அவளைத் திருத்த முடியாமல் கவலையில் உருகினாள். ஒரு சந்தர்ப்பத்தில் தன் மகனின் இறப்பிற்கு மறைமுகக் காரணம் நடிகைதான் என்று சொல்கிறாள் மானுவ்லா. காரின் பின் ஓடி வந்த இளம் வயதினனின் முகம் நினைவிற்கு வந்து மிகவும் வருந்துகிறாள் நடிகை. அதற்கென்ன செய்வது அவன் விதி முடிந்துவிட்டது எனச் சொல்லி தான் ஊருக்கு கிளம்ப போவதாகச் சொல்லி விடைபெறுகிறாள். இதற்கிடையே அந்த ஊரில் அறிமுகமான சிஸ்டர் (பெனிலும் க்ரூஸ்) இளம் வயதிலேயே கர்ப்பம் ஆகிறாள். மணமாகமலேயே தாய்மை அடைந்திருக்கும் மகளை வைத்திருக்க முடியாமல் அவள் தாய் அவளை வீட்டை விட்டு அனுப்புகிறாள். கண்பார்வையற்ற தந்தை வசதியான வாழ்க்கையை விட்டுவிட்டு முறையற்ற காதல் தந்த பரிசாய் வயிற்றுச் சுமையுடன் வீதிக்கு வருகிறாள் அப்பெண் (Penelope Cruz).&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://4.bp.blogspot.com/_9vV1GQrxDFE/THanNyU8-QI/AAAAAAAAArM/Zr_luxzBZg0/s1600/penelope.jpg"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 250px; height: 202px;" src="http://4.bp.blogspot.com/_9vV1GQrxDFE/THanNyU8-QI/AAAAAAAAArM/Zr_luxzBZg0/s320/penelope.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5509775049424173314" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மானுவ்லாவின் அறிமுகம் கிடைக்க வேறு வழியின்றி தன் வீட்டிலேயே அவளை தங்க வைத்து அவளை பராமரிக்கிறாள். அவளுடைய மருத்துவ பரிசோதனையின் முடிவில் எஸ்ட்ஸ் நோயாளி என அறிந்து இருவரும் துடிக்கிறார்கள். அவளுடைய காதலன் வேறு யாருமல்ல தன்னுடைய பழைய கணவன் என்பதை அறிகிறாள் மானுவ்லா. பிரசவத்தில் அவள் இறந்து போக அவள் பெற்றெடுத்த மகவில் தன் மகனின் முகத்தைப் பார்க்கிறாள் மானுவ்லா.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அந்தத் தாயின் இறுதிச் சடங்கில் கலந்து கொள்ள இடுகாட்டிற்கு செல்லும் போது தன் பழைய கணவனை சந்திக்கிறாள். தற்போது அவன் ஆண்மை இழந்து மனக் கொந்தளிப்பில் அறுவை சிகிச்சை செய்து கொண்டு பெண்னாக மாறி இருப்பதைப் பார்த்து அதிர்ந்து போகிறாள். அவன் தன்வ் வாழ்க்கையில் பார்த்தே இராத மகனின் இறப்பைப் பற்றிச் சொல்லி அவனிடம் மகனின் டைரியை வாசிக்கத் தருகிறாள். கண்ணீருடன் அதை வாசித்த அவன் மானுவ்லாவிடம் மன்னிப்புக் கேட்கிறான். அவளுக்குத் தேவை அந்த மன்னிப்பு அல்ல, இழந்த மகனை மீட்டெடுத்துத் தர முடியுமா என்ற வினாவுடன் அவனிடமிருந்து விடைப்பெற்றுச் செல்கிறாள். புதிய பொறுப்பாகவும், கடமையாகவும் தன் கையில் இருந்த குழந்தைக்கு எஸ்டிபன் என்று பெயரிட்டு அவள் வாழ்ந்து கொண்டிருக்கும் ஊருக்குக் கிளம்புகிறாள்.&lt;br /&gt;&lt;br /&gt;நாம் மரணம் வரை வாழப் போகும் மிகப் பெரிய வீடுதான் இந்த உலகம். இடையறாத பயணத்தில் இது இளைப்பாரும் இடம். உயிருக்கு மரணம் தவிர்க்க முடியாத நிலை. மரணம் என்பது ஆதிபயம். வாழ்வின் மறுபக்கம், அதிஅற்புதமான ரகசியம். வாழ்க்கை மின்னி மின்னி மாயங்கள் காட்டி வழிதவறவும் வைக்கும். மரணமொன்றே அனைத்தையும் களைந்து தூய்மைபடுத்தும். உயிர் உள்ளவரை செய்திருந்த பாவங்களையெல்லாம் அகற்றி சுத்தமாக்கிவிடும். கறைபடிந்த வாழ்க்கையை அழித்துவிட்டு மரணம் புதுப் பயணமொன்றைத் துவக்கி வைக்கும். இத்திரைப்படம் மரணத்தைப் பற்றிய பல விஷயங்களை மனதை அறுக்கச் செய்யும் விதமாய் பதிவு செய்கிறது. எஸ்டிபனின் மரணமும், இளம் தாயின் மரணமும் ஒன்றுக்கு ஒன்று தொடர்புடையதாக இல்லாவிட்டாலும், எஸ்டிபனே அவளுக்கு திரும்பக் கிடைத்தது போல வாழ்வை மறுபடி முதலில் இருந்து துவக்குகிறாள்.&lt;br /&gt;&lt;br /&gt;”நம் அறிவிற்கு அப்பாற்பட்ட ஞானத்துக்கும் மனிதாபிமானத்துக்கும் வெவ்வேறு நிலைகளுக்கு இடையிடையே ஆன உறவுகள் தேட மரணம் மனிதனை தூண்டுகிறது” ஸ்பானிஷ் இயக்குனர் பெட்ரோ அல்மதோவரின் இத்திரைப்படம் இதை உண்மையாக்குகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;நன்றி - http://www.thadagam.com/index.aspx&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/748309637854531092-5071814446871809469?l=umashakthi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://umashakthi.blogspot.com/feeds/5071814446871809469/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=748309637854531092&amp;postID=5071814446871809469' title='10 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/748309637854531092/posts/default/5071814446871809469'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/748309637854531092/posts/default/5071814446871809469'/><link rel='alternate' type='text/html' href='http://umashakthi.blogspot.com/2010/08/all-about-my-mother.html' title='All About My Mother'/><author><name>உமாஷக்தி</name><uri>http://www.blogger.com/profile/15892356572198993991</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='21' src='http://1.bp.blogspot.com/-gipY35ryk84/TlTuZmGcnbI/AAAAAAAAA6w/jFm_Na-18o4/s220/umashakthi%255B1%255D.JPG'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/_9vV1GQrxDFE/THaoRN2QErI/AAAAAAAAAr0/PPk8HGvqE88/s72-c/amb+title.jpg' height='72' width='72'/><thr:total>10</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-748309637854531092.post-4472880454408436138</id><published>2010-08-17T23:55:00.000-07:00</published><updated>2010-08-18T00:02:27.632-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நிகழ்வு'/><title type='text'>கவிதைப் பட்டறை</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://3.bp.blogspot.com/_9vV1GQrxDFE/TGuFTRbgY6I/AAAAAAAAArE/hZgDUnsWA_I/s1600/index_Head_2010_06.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 196px;" src="http://3.bp.blogspot.com/_9vV1GQrxDFE/TGuFTRbgY6I/AAAAAAAAArE/hZgDUnsWA_I/s320/index_Head_2010_06.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5506641535533343650" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;அன்புடையீர்&lt;br /&gt;&lt;br /&gt;தவிர்க்க முடியாத காரணங்களினால் கவிதைப் பட்டறை நிகழ்வு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.  இந்நிகழ்வின் தேதி பின்னர் அறிவிக்கப்படும். மன்னிக்கவும்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;http://www.tamilsangamamonline.com/index.html&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/748309637854531092-4472880454408436138?l=umashakthi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://umashakthi.blogspot.com/feeds/4472880454408436138/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=748309637854531092&amp;postID=4472880454408436138' title='2 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/748309637854531092/posts/default/4472880454408436138'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/748309637854531092/posts/default/4472880454408436138'/><link rel='alternate' type='text/html' href='http://umashakthi.blogspot.com/2010/08/blog-post_17.html' title='கவிதைப் பட்டறை'/><author><name>உமாஷக்தி</name><uri>http://www.blogger.com/profile/15892356572198993991</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='21' src='http://1.bp.blogspot.com/-gipY35ryk84/TlTuZmGcnbI/AAAAAAAAA6w/jFm_Na-18o4/s220/umashakthi%255B1%255D.JPG'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/_9vV1GQrxDFE/TGuFTRbgY6I/AAAAAAAAArE/hZgDUnsWA_I/s72-c/index_Head_2010_06.jpg' height='72' width='72'/><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-748309637854531092.post-253814868784960881</id><published>2010-08-10T20:30:00.000-07:00</published><updated>2010-08-10T20:45:52.383-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='இவள் புதியவள்'/><title type='text'>தலை நிமிர வைத்த பெண் இயக்குனர்கள்</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://2.bp.blogspot.com/_9vV1GQrxDFE/TGIc4zUi-tI/AAAAAAAAAq8/ppcadkBzVZ8/s1600/as2.jpg"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 221px;" src="http://2.bp.blogspot.com/_9vV1GQrxDFE/TGIc4zUi-tI/AAAAAAAAAq8/ppcadkBzVZ8/s320/as2.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5503993456774806226" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt; &lt;br /&gt;அபர்ணா சென்&lt;br /&gt; &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சினிமா என்பது தனி உலகம். கண்ணதாசன் வரிகளில் ‘இது வேறு உலகம்’ மொத்த உலகத்தின் கனவுத் தொழிற்சாலை அது. இங்கு ஜெயிப்பது மாபெரும் சூதாட்டம். ஆண்களுக்கே சவாலாக இருக்கும் திரைத்துறையில் பெண்களின் பங்களிப்பு என்பது மிகவும் குறைவாகவே உள்ளது. இந்திய அளவில் விரல் விட்டு எண்ணக் கூடிய அளவிற்கே பெண்கள் இயக்குனர்களாகியுள்ளார்கள். அதிலும் வெற்றி பெற்ற இயக்குனராக வேண்டுமென்றால் அவர்கள் குடும்ப வாழ்க்கை உட்பட. தனக்கான எல்லா விஷயங்களை இழக்க நேரிடும். ஆண்களின் அசைக்க முடியாத கோட்டையான சினிமாவில் நின்று ஜெயிப்பதற்கு மிகப் பெரிய திறமை மட்டுமின்றி அயராத உழைப்பும் மனத் தெளிவும், திடமும் தேவையிருக்கிறது. புகழின் உச்சியைத் தொடும் பல கலைஞர்களின் சொந்த வாழ்க்கையென்பது பெரும் சோகமாகவே முடிந்து விடுகிறது. ஆனால் அதையும் மீறிய அவர்களது தன்னம்பிக்கையும் விடா முயற்சியும் அவர்களை உயர உயர பறக்க வைக்கிறது. &lt;br /&gt;&lt;br /&gt;இத்தொடரில் இந்திய சினிமாவில் தங்களின் இருப்பை ஆழமாக பதிய வைத்த சில பெண் இயக்குனர்களைப் பற்றிய விபரங்களையும், அவர்கள் இயக்கியிருக்கும் திரைப்படங்கள் குறித்த பார்வையும் வைக்கிறோம். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மொதி – வங்காளம்&lt;br /&gt;இயக்குனர் – திருமதி அபர்ணா சென்&lt;br /&gt;&lt;br /&gt;வங்காள மொழியில் பல திரைப்படங்களை இயக்குயிருக்கும் அபர்ணா சென் பன்முகத் தன்மை உடையவர். நாடகம் மற்றும் திரை நடிகை, திரை எழுத்தாளர், திரை இயக்குனர்.  பெங்காலி பத்திரிகையான சனந்தாவில் அவர் ஆசிரியையாக பல வருடங்கள் இருந்தார். எந்தத் துறையில் ஈடுபட்டாலும் அதில் தன் முத்திரையை ஆழமாகப் பதித்தார். &lt;br /&gt;&lt;br /&gt;அபர்ணா சென் கல்கத்தாவில் 1945 ஆம் ஆண்டு பிறந்தார்.  அவரின் தந்தை சிதாநந்த தாஸ்குப்தா திரை விமர்சகர், தயாரிப்பாளர். கல்கத்தாவில் மாடர்ன் பள்ளியிலும் ப்ரஸிடென்ஸி கல்லூரியிலும் படித்தார். இரண்டு முறை மணமாகி விவாகரத்து பெற்ற அபர்ணா சென்னுக்கு கமலினி, கொங்கனா சென் (இவர் பிரபல நடிகை) இரண்டு மகள்கள் இருக்கிறார்கள்.    &lt;br /&gt;&lt;br /&gt;தன்னுடைய பதினாறாவது வயதில் சத்தியஜித் ரே இயக்கிய ‘தீன் கன்யா’ எனும் திரைப்படத்தில் நடிக்கத் துவங்கிய இவர் தன்னுடைய கனவு சினிமாதான் என்பதில் உறுதியாக இருந்தார். பல நாடக மேடைகளிலும் திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்தார். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://2.bp.blogspot.com/_9vV1GQrxDFE/TGIasN1ROAI/AAAAAAAAAqE/E367EVzBzEk/s1600/aparna_sen.jpg"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 190px; height: 190px;" src="http://2.bp.blogspot.com/_9vV1GQrxDFE/TGIasN1ROAI/AAAAAAAAAqE/E367EVzBzEk/s320/aparna_sen.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5503991041529821186" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;1981-ல் தனது முதல் திரைப்படமான ’36 செளரிங்கி லேன்’னை இயக்கினார். அது அவருக்கு மத்திய அரசு விருதை மட்டுமின்றி உலக அளவில் அங்கீகாரத்தையும் விருதுகளையும் பெற்றுத் தந்தது. அதன்பின் இந்தியிலும் ஆங்கிலத்திலும் அவர் இயக்கிய படங்கள் பெரும் புகழ் அடைந்தன. அவர் இயக்கிய படங்கள் ஆழமாக உணர்வுகளைத் தீண்டும் கவித்துவமான காட்சியமைப்புகள் கொண்டவை. அவருடைய படங்களில் பாடல்கள் இருக்காது ஆனால் இசை மனதை ஊடுருவும். டூயட் பாடும் கதாபாத்திரங்களை இவர் படங்களில் காண முடியாது. யதார்த்தையை மீறிய சிறு விஷயமும் அவரின் திரைக்கண்ணில் பார்க்க முடியாது. சில கமர்ஷியல் படங்களில் நடித்திருந்தாலும், அவர் இயக்கியுள்ள படங்கள் ஒவ்வொன்றும் வெவ்வேறு தளங்களில் மாற்று சினிமாவை நோக்கி தன் அழக
